search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் அரிசி கடத்திய"

    • சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர்.
    • அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ஒரு பெண் சந்தேகத்துக்கிடமான வகையில் சாக்கு மூட்டைகள் வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து அவர் வைத்து இருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பழைய தபால் ஆபிஸ் வீதியை சேர்ந்த வசந்தி (வயது 53) என தெரிய வந்தது.

    மேலும் அவர் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி கர்நாடகா மாநிலம் மற்றும் பல்வேறு பகுதி களுக்கு அனுப்பு வதற்காக பஸ்சுக்காக காத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 7 மூட்டைகளில் சுமார் 100 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்யப்பபட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு பாதுகா ப்பு மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் போலீசார் ஒப்படை த்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அடுத்த கணக்கம்பாளையம் சின்னகாளியூர் வேதபாறை பள்ளம் அருகே ரேசன் அரிசி கடத்துவதாக பங்க ளாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் வேனில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பேரிசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பவானி அடுத்த காளிங்க ராயன் பாளையம் மேட்டு நாசுவம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்க டேஷ் (34) என்பதும், 40 கிலோ எடையுள்ள 22 மூட்டைகள் என சுமார் 1 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து பிடிபட்ட ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் அவர் ஓட்டி மினி ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தனர்.

    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் போலீசார் ஒப்படை த்தனர்.

    ×