search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தியதால் காதலனை கொன்று கோவளத்தில் புதைத்தேன்- அழகி வாக்குமூலம்
    X

    குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்தியதால் காதலனை கொன்று கோவளத்தில் புதைத்தேன்- அழகி வாக்குமூலம்

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெயந்தனை விட்டு பிரிந்து சென்று விட்டேன்.
    • எனக்கு தெரிந்த சங்கர் என்பவரை வரவழைத்து இருவரும் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்தோம்.

    சென்னை:

    சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்த 29 வயது வாலிபர் ஜெயந்தன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரது உடலை துண்டு துண்டாக்கி விபசார அழகி ஒருவர் கோவளத்தில் கொன்று புதைத்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நங்கநல்லூர் என்.ஜி.ஓ. காலனி 3-வது தெருவில் வசித்து வந்த ஜெயந்தன் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி மாயமான ஜெயந்தன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுபற்றி பழவந்தாங்கல் போலீசில் ஜெயந்தனின் அக்கா ஜெயகிருபா புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பலாம்பட்டியில் வசித்து வரும் பாக்கியலட்சுமி என்கிற விபசார அழகியுடன் ஜெயந்தனுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. பாக்கியலட்சுமிக்கு 39 வயதாகும் நிலையில் ஜெயந்தன் அவருடன் வாழ விரும்பியுள்ளார்.

    ஆனால் பாக்கியலட்சுமிக்கோ அதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பாக்கியலட்சுமி, ஜெயந்தனை பிரிந்து பொன்னமராவதியில் போய் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில்தான் ஜெயந்தன் அங்கு சென்று என்னுடன் வந்து விடு. நாம் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம் என்று கூறி உள்ளார். ஆனால் அதற்கு பாக்கியலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஜெயந்தனை, பாக்கியலட்சுமி துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை கோவளத்துக்கு கடத்தி வந்து தோண்டி புதைத்திருக்கும் திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக பாக்கியலட்சுமி போலீசில் அளித்து உள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள லாட்ஜில் விபசார தொழிலுக்காக நான் சென்றிருந்தேன். அப்போதுதான் ஜெயந்தனின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. என்னுடன் உல்லாசம் அனுபவித்த ஜெயந்தன் என்னை மிகவும் பிடித்திருப்பதாக கூறினார்.

    எனது செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு என்னுடன் ஜெயந்தன் போனில் பேசி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. என்னை காதலிப்பதாக கூறிய ஜெயந்தன் திருமணம் செய்ய விரும்பினார்.

    ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லாமலேயே இருந்தது. ஜெயந்தன் தொடர்ந்து வற்புறுத்தியதால் திருமணத்துக்கு சம்மதித்தேன். இதையடுத்து விழுப்புரம் மயிலம் கோவிலில் வைத்து 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம் இருவரும் ஒன்றாக வசித்து வந்தோம்.

    தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஜெயந்தன் வற்புறுத்தினார். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெயந்தனை விட்டு பிரிந்து சென்று விட்டேன். புதுக்கோட்டையில் உள்ள சொந்த ஊருக்கு நான் சென்றுவிட்டேன்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி ஜெயந்தன் என்னை பார்க்க வந்தார். அப்போது என்னுடன் குடும்பம் நடத்த ஏன் வர மறுக்கிறாய்? என கேட்டு தகராறு செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து எனக்கு தெரிந்த சங்கர் என்பவரை வரவழைத்து இருவரும் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்தோம். பின்னர் கை மற்றும் கால்களை வெட்டி எடுத்து தனியாக பார்சல் செய்தோம்.

    பின்னர் 20-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் பஸ் ஏறி காலை 11 மணி அளவில் கோவளத்துக்கு வந்து சேர்ந்தேன். அங்கு கடற்கரை பகுதியில் கை, கால்களை குழிதோண்டி புதைத்தேன். பின்னர் ஊருக்கு சென்றுவிட்டேன்.

    இதன்பிறகு 7 நாட்கள் கழித்து 26-ந்தேதி தலை மற்றும் வயிற்றுப்பகுதி உடல் பாகங்களை காரில் எடுத்து வந்தேன். இந்த உடல் பாகங்களை சென்னையில் உள்ள செட்டிநாடு மருத்துவமனை அருகே புதைத்தேன். இதற்கு எனக்கு தெரிந்த பூசாரி வேல்முருகன் துணையாக இருந்தார். அவர் தான் மோட்டார் சைக்கிளில் உடலை எடுத்துச்செல்ல உதவினார்.

    கொலை நடந்து 2 வாரத்துக்கு மேலாகிவிட்டதால் யாருக்கும் தெரியாது என்று நினைத்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பரங்கிமலை உதவி கமிஷனர் அமீர் அகமது பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பாக்கியலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

    புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு சர்வசாதாரணமாக உடல் பாகங்களை பஸ் மற்றும் காரில், பாக்கியலட்சுமி எடுத்து வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரில் உடலை எடுத்து வந்தபோது வாகன சோதனை எதிலும் சிக்காமல் பாக்கியலட்சுமி நைசாக சென்னை மாநகருக்குள் ஊடுருவி உள்ளனர்.

    பாக்கியலட்சுமி விபசார அழகி என்று தெரிந்திருந்தும் அவரை திருமணம் செய்துகொண்ட ஜெயந்தனுக்கு அதன் பின்னரே அதிர்ச்சி காத்திருந்தது. 19 வயதில் மகன் இருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுவும் மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

    இளமை பருவத்தில் ஏற்பட்ட தவறான பழக்கம் வாலிபர் ஜெயந்தனின் உயிரை எடுத்திருப்பதாக கூறி போலீசார் வருத்தப்பட்டனர்.

    Next Story
    ×