என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புரட்டாசி மாதம்"
- புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
- சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.
எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.
- புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.
- இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.
புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.
எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.
இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.
ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.
அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.
- ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.
- திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.
இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.
சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.
திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.
அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
- வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.
- அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராயபுரம்:
புரட்டாசி மாதம் நாளை தொடங்க உள்ளது. பெருமாளுக்கு உகந்த இந்த மற்றும் முழுவதும் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பது வழக்கம். இதைத்தொடர்ந்து இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்வாங்க ஏராளமானோர் குவிந்தனர். வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று காலை 180 முதல் 200 விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட பெரி யவகை மீன்கள் வரத்து அதிக அளவில் இருந்தன. இதனால் மீன்விலை குறைந்து இருந்தது. வஞ்சிரம் ரூ.500-க்கும், சங்கரா ரூ.300-க்கும் விற்கப்பட்டது. அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காசிமேடு மீன்மார்க் கெட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-
பெரிய இறால் - ரூ. 300.
இதேபோல் ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் இன்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதுகுறித்து இறைச்சி கடைக்காரர் ஒருவர் கூறும்போது, நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் இன்று வழக்கத்தை விட வியாபாரம் அதிகம் தான். அடுத்த மாதம் முழுவதும் பெரிய அளவில் வியாபாரம் இருக்காது. அதைசமாளித்து தான் ஆக வேண்டும்.விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது. என்றார்.
- பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் .
- ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்:
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரதம் முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். கடலூர் துறைமுகத்தில் எப்போதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் . இந்த நிலையில் இன்று ஆவணி மாதம் கடைசி நாள் என்பதாலும், நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலை முதல் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
பின்னர் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதில் பெரிய வகை பாறை மீன் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ.400 முதல் 450 வரையிலும், பெரிய வகை நெத்திலி கிலோ ரூ.200 கனவாய் வகை மீன் கிலோ ரூ.150-க்கும், பெரிய வகை இறால் கிலோ ரூ.500-க்கும், நண்டு ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
- புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர்.
சேலம்:
நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. பொதுவாக தட்பவெட்பநிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலைநிர்ணயம் செய்யப்படுகிறது.
இதே போல தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் 25 ஆயிரம் கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
குறிப்பாக பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் (பிசிசி) தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர். இதனால் ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது. இதனால் பண்ணைகளில் கறிக்கோழிகள் 30 சதவீதத்திற்கும் மேல் தேக்கம் அடைந்துள்ளதால் மேலும் விலை சரிய வாய்ப்பு உள்ளது. இதனால் கறிக்கோழி பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி 15 நாட்க ளுக்கு முன்பு பண்ணை கொள்முதல் விலை 130 ரூபாயாக இருந்த நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோவுக்கு 26 ரூபாய் குறைந்து 104 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது மேலும் குறைந்து பண்ணை கொள்முதல் மொத்த விலை (உயிருடன்) 86 ஆக குறைந்துள்ளது. கடந்த வாரம் உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.190-க்கும், உரித்த கறிக்கோழி ரூ.210-க்கும் விற்கப்பட்டது. தற்போது விலை குறைந்து உயிருடன் ஒரு கிலோ 120-க்கும், உரித்த கறிக்கோழி ரூ.180-க்கும் விற்கப்படுகிறது.
விலை குறைந்தாலும் விற்பனை அதிகரிக்கவில்லை என்று வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு 4.50-க்கு விற்ற ஒரு முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் 4.30-க்கு விற்பனையானது. தற்போதும் முட்டை விலை அதே அளவில் நீடிக்கிறது. முட்டைகள் வடமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் அதன் விலை மேலும் குறைய வில்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
- போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை விற்பனை செய்யாமல் திரும்ப ஓட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்தார்.
- வாரந்தோறும் நடக்கும் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி ஆட்டுச் சந்தை மிகப்பெரிய ஆட்டுச்சந்தையாகும். இங்கு நடைபெறும் வாரச் சந்தைக்கு செம்மறி மற்றும் வெள்ளாடுகள், நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் ஆடுகள் வளர்ப்போர் அதிகம் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
மூலனூருக்கு அருகில் உள்ள வெள்ளகோவில், பரமத்தி, அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மானாவரி நிலங்கள் இருப்பதால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அதிகமாக ஆடுகளை வளர்த்து தங்கள் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.
இந்த வாரம் சந்தைக்கு ஈரோடு, கோபி, பவானி, அந்தியூர், மேட்டூர், மேச்சேரி, சேலம் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதேபோல சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேசத்தில் இருந்து வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர்.
புரட்டாசி மாதத்தில் இறைச்சி நுகர்வு குறைவாக இருக்கும் என்பதால் கடந்த இரு வாரம் முன்பு 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.4 ஆயிரம் முதல் 4500 வரை மட்டும் விலை போனது.
இதுகுறித்து மூலனூர் பகுதியை சேர்ந்த விவசாயி லோகநாதன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஆட்டு சந்தையாக கன்னிவாடி சந்தை உள்ளது. இந்தப் பகுதியை சுற்றி ஏராளமான மானாவாரி நிலங்கள் இருப்பதால் விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாக ஆடுகள் வளர்ப்பே கைகொடுக்கிறது. மாடுகள் வைத்து பால் உற்பத்தி செய்ய பசுந்தீவனங்கள் தேவைப்படுவதால் இப்பகுதியில் கறவை மாடுகள் வளர்ப்பது குறைவாகும்.
வாரந்தோறும் நடக்கும் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். ஆனால் புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் விற்பனையும் சரிந்து விலையும் ஆயிரம் வரை குறைந்து விற்பனையாகிறது. போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை விற்பனை செய்யாமல் திரும்ப ஓட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்தார்.
- மீன் மார்க்கெட்களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும்.
- அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.
கடலூர்:
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இதன் காரணமாக புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பெருமாள் கோவில்களுக்கு சனிக்கிழமைகளில் செல்வதோடு வீடுகளில் அசைவம் சமைக்காமலும், சாப்பிடாமலும் விரதம் இருப்பது வழக்கமாகும். இது மட்டும் இன்றி புரட்டாசி மாதங்கள் சனிக்கிழமைகளில் நாமம் போட்டு நாராயண கோபால எடுத்து சிறப்பு வழிபாடு செய்வதும் வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முன்பு பெரும்பாலான வீடுகளில் தங்களுக்கு தேவையான அசைவ உணவுகளை விரும்பி உண்பார்கள். இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் தொடங்கியவுடன் தங்கள் விரதமுறையை பொதுமக்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நிலையில் இன்று புரட்டாசி மாதம் தொடங்கியது.
இதன் காரணமாக எப்போதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்த நிலையில் இன்று புரட்டாசி தொடங்கியதால் கடலூர் துறைமுகம், மீன் மார்க்கெட்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து கூட்டம் இன்றி காணப்பட்டாலும் சிக்கன், மட்டன் மற்றும் மீன் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இது மட்டும் இன்றி அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.
- ஆன்மிகச் சுற்றுலாவானது பக்தர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
- ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு கோவில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெருவிருப்பமாகக் கொள்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தமிழத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து வருகிற புரட்டாசி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
2022-2023-ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவத் கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக கடந்த ஆடி மாதம் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, வருகிற புரட்டாசி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு வைணவ கோவில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சமய பெருமாள் கோவில், சிங்கப்பெமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,
சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரராகவபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புத்தூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு 2-வது பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
திருச்சியிலிருந்து உறையூர் அழகிய மணவாள பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், உத்தமர்கோவில், புருஷோத்தம பெருமாள் கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் கோவில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடராம பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், தஞ்சாவூரிலிருந்து திரு கண்டியூர் சாபவிமோச்சன பெருமாள் கோவில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோவில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள் கோவில், நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில், திருச்சேறை சாரநாத பெருமாள் கோவில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,
மதுரையிலிருந்து அழகர் கோவில் கள்ளழகர் கோவில், ஒத்தகடை ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், திருகோஷ்டியூர் சவும்ய நாராயண பெருமாள் கோவில், மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த ஆன்மிகச் சுற்றுலாவானது பக்தர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும்.
இந்த ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.
மேலும், இது தொடர்பாக விவரங்களுக்கு www. ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணைய தளத்திலும், 044 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, ஆன்மிக அன்பர்கள், சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்