search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாதம் தொடக்கம்: கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
    X

    கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்க குவிந்துள்ள பொதுமக்களை படத்தில் காணலாம்.

    புரட்டாசி மாதம் தொடக்கம்: கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

    • பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் .
    • ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரதம் முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். கடலூர் துறைமுகத்தில் எப்போதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் . இந்த நிலையில் இன்று ஆவணி மாதம் கடைசி நாள் என்பதாலும், நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலை முதல் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.

    பின்னர் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதில் பெரிய வகை பாறை மீன் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ.400 முதல் 450 வரையிலும், பெரிய வகை நெத்திலி கிலோ ரூ.200 கனவாய் வகை மீன் கிலோ ரூ.150-க்கும், பெரிய வகை இறால் கிலோ ரூ.500-க்கும், நண்டு ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×