search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் விற்பனை மந்தம்"

    • போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை விற்பனை செய்யாமல் திரும்ப ஓட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்தார்.
    • வாரந்தோறும் நடக்கும் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

    மூலனூர்:

    திருப்பூர்‌ மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி ஆட்டுச் சந்தை மிகப்பெரிய ஆட்டுச்சந்தையாகும்‌. இங்கு நடைபெறும் வாரச் சந்தைக்கு செம்மறி மற்றும் வெள்ளாடுகள், நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் ஆடுகள் வளர்ப்போர் அதிகம் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    மூலனூருக்கு அருகில் உள்ள வெள்ளகோவில், பரமத்தி, அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மானாவரி நிலங்கள் இருப்பதால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அதிகமாக ஆடுகளை வளர்த்து தங்கள் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

    இந்த வாரம் சந்தைக்கு ஈரோடு, கோபி, பவானி, அந்தியூர், மேட்டூர், மேச்சேரி, சேலம் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதேபோல சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேசத்தில் இருந்து வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர்.

    புரட்டாசி மாதத்தில் இறைச்சி நுகர்வு குறைவாக இருக்கும் என்பதால் கடந்த இரு வாரம் முன்பு 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.4 ஆயிரம் முதல் 4500 வரை மட்டும் விலை போனது.

    இதுகுறித்து மூலனூர் பகுதியை சேர்ந்த விவசாயி லோகநாதன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஆட்டு சந்தையாக கன்னிவாடி சந்தை உள்ளது. இந்தப் பகுதியை சுற்றி ஏராளமான மானாவாரி நிலங்கள் இருப்பதால் விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாக ஆடுகள்‌ வளர்ப்பே கைகொடுக்கிறது. மாடுகள் வைத்து பால் உற்பத்தி செய்ய பசுந்தீவனங்கள் தேவைப்படுவதால் இப்பகுதியில் கறவை மாடுகள் வளர்ப்பது குறைவாகும்.

    வாரந்தோறும் நடக்கும் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். ஆனால் புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் விற்பனையும் சரிந்து விலையும் ஆயிரம் வரை குறைந்து விற்பனையாகிறது‌. போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை விற்பனை செய்யாமல் திரும்ப ஓட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்தார்.

    ×