என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Puratasi month"
- புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியே அஜா ஏகாதசி.
- திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.
புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை அஜா ஏகாதசி என்று சொல்வார்கள். நம்மில் பலரும் காரணம் இல்லாமல் துன்பங்களை அனுபவிப்பார்கள். மனக்கவலைகளுக்கு ஆளாவார்கள், அலுவலகங்களில் பல பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். இவற்றுக்குக் காரணம் நாம் முன் ஜென்மங்களில் செய்த பாவங்களே ஆகும்.
என்னதான் நாம் இந்த ஜென்மத்தில் இறைவனை மனதார தியானித்து நல்லனவற்றையே பேசி, செய்து வந்தாலும் நமக்கு காரணம் இல்லாமல் ஏன் குழப்பங்களும் கஷ்டங்களும் வருகின்றன? அதற்கு காரணம் முன்வினைப்பயன். அதை சீராக்குவதுதான் அஜா ஏகாதசி விரதம்.
இதற்கு ஆதாரமாக புராணக் கதை இருக்கிறது. இது பலருக்கும் தெரிந்த கதைதான்.
அரசனாக வாழ்ந்த அரிச்சந்திரன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை இழந்து, அரசப் பதவியை இழந்து காட்டில் கஷ்டப்பட்டான். அது மட்டுமா? காசுக்காக மனைவியை அடிமையாக விற்றான். கடுகாட்டில் பிணங்களை எரித்துப் பிழைத்தான்.
அந்த சூழ்நிலையில் கவுதம முனிவர் அவனைச் சந்தித்தார். விசுவாமித்திரர் அரிச்சந்திரனை பரீட்சிக்கிறார் என்றாலும் அவனது இந்த துன்பங்களுக்குக் காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவங்களே. அவைதான் விசுவாமித்திர முனிவருக்கு இத்தகைய எண்ணங்களை உருவாக்கின என்று ஞான திருஷ்டியில் அறிந்தார்.
அரிச்சந்திரனை அழைத்து புரட்டாசி மாதத்தில் வரும் அஜா ஏகாதசி விரதத்தைப் பற்றி விவரித்தார். `மன்னனே நீ இந்த விரதத்தைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நன்மை கிடைக்கும்' என்றார்.
அரிச்சந்திரனும் 9 ஆண்டுகள் தொடர்ந்து அஜா ஏகாதசி விரதத்தை அனுசரித்தான். அதன் பலனாக விசுவாமித்திரர் வைத்த பரீட்சையில் வென்றான். அது மட்டுமா? அவனுக்கு மும்மூர்த்திகளின் தரிசனமும் கிடைத்தது. மீண்டும் நாட்டை பெற்றதோடு உலகில் அழியாப் புகழோடு வாழ்ந்தான்.
நமது முன்ஜென்ம பாவங்களை நீக்கி இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளிக்கக்கூடியது அஜா ஏகாதசி விரதம். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவேதான் இதையும் அனுசரிக்க வேண்டும். திருமாலின் திருநாமங்களைச் சொல்லி வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.
குறைந்தது பத்து நிமிடங்களாவது கண் மூடி அமர்ந்து பெருமாளை தியானித்து என் முன் ஜென்ம தகாத வினைப் பலன்களை அழிப்பாய் ஐயனே என்று வேண்ட வேண்டும். இரவில் விஷ்ணு புராணத்தை படிக்கலாம். நாம ஜபம் செய்யலாம். மறுநாள் காலை நீராடி பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி தீர்த்தத்தை அருந்தி பின்னர் உணவு உண்ண வேண்டும். அப்படி செய்தால் முன்ஜென்ம பாவங்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம்.
- வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.
- அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராயபுரம்:
புரட்டாசி மாதம் நாளை தொடங்க உள்ளது. பெருமாளுக்கு உகந்த இந்த மற்றும் முழுவதும் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பது வழக்கம். இதைத்தொடர்ந்து இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்வாங்க ஏராளமானோர் குவிந்தனர். வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் களைகட்டியது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று காலை 180 முதல் 200 விசைப்படகுகள் கரைக்கு திரும்பின. வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட பெரி யவகை மீன்கள் வரத்து அதிக அளவில் இருந்தன. இதனால் மீன்விலை குறைந்து இருந்தது. வஞ்சிரம் ரூ.500-க்கும், சங்கரா ரூ.300-க்கும் விற்கப்பட்டது. அதிகாலை முதலே மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிந்து விற்பனை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காசிமேடு மீன்மார்க் கெட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-
பெரிய இறால் - ரூ. 300.
இதேபோல் ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் இன்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதுகுறித்து இறைச்சி கடைக்காரர் ஒருவர் கூறும்போது, நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் இன்று வழக்கத்தை விட வியாபாரம் அதிகம் தான். அடுத்த மாதம் முழுவதும் பெரிய அளவில் வியாபாரம் இருக்காது. அதைசமாளித்து தான் ஆக வேண்டும்.விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது. என்றார்.
- பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் .
- ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்:
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபடுவதற்கு உகந்த மாதமாக இருப்பதோடு, மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் மக்கள் விரதம் முறையை கடைபிடித்து சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வருவது வழக்கம். கடலூர் துறைமுகத்தில் எப்போதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காண்பதோடு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம் . இந்த நிலையில் இன்று ஆவணி மாதம் கடைசி நாள் என்பதாலும், நாளை புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலை முதல் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
பின்னர் தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதில் பெரிய வகை பாறை மீன் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. பன்னி சாத்தான் மீன் ரூ.400 முதல் 450 வரையிலும், பெரிய வகை நெத்திலி கிலோ ரூ.200 கனவாய் வகை மீன் கிலோ ரூ.150-க்கும், பெரிய வகை இறால் கிலோ ரூ.500-க்கும், நண்டு ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு இறைச்சி கிலோ ரூ.700, கோழி கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள்.
- புரட்டாசி மாதம் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை.
மறைந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்று சொல்வது வழக்கம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள், இந்த மகாளய அமாவாசையை மறந்துவிடாதீர்கள். முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டிய தேதியை மறந்தவர்கள், திதி கொடுக்க மறந்தவர்கள் அன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் மனதார ஏற்றுக்கொள்வர்.
அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள் அமாவாசை ஆகும். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரும் அமாவாசையை 'தை அமாவாசை' என்றும், ஆடி மாதம் வரும் அமாவாசையை 'ஆடி அமாவாசை' என்றும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை 'மகாளய அமாவாசை' என்றும் சிறப்பு வாய்ந்ததாக சொல்வா்.
புரட்டாசி மாதம் 27-ந் தேதி (14.10.2023) சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலமும், பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் முன்னேற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும். திதி கொடுத்தால் விதி மாறும் என்பது முன்னோர் வாக்கு. தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றுவது இந்த முன்னோர் வழிபாடுதான்.
- போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை விற்பனை செய்யாமல் திரும்ப ஓட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்தார்.
- வாரந்தோறும் நடக்கும் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி ஆட்டுச் சந்தை மிகப்பெரிய ஆட்டுச்சந்தையாகும். இங்கு நடைபெறும் வாரச் சந்தைக்கு செம்மறி மற்றும் வெள்ளாடுகள், நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் ஆடுகள் வளர்ப்போர் அதிகம் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
மூலனூருக்கு அருகில் உள்ள வெள்ளகோவில், பரமத்தி, அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மானாவரி நிலங்கள் இருப்பதால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அதிகமாக ஆடுகளை வளர்த்து தங்கள் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.
இந்த வாரம் சந்தைக்கு ஈரோடு, கோபி, பவானி, அந்தியூர், மேட்டூர், மேச்சேரி, சேலம் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதேபோல சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேசத்தில் இருந்து வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர்.
புரட்டாசி மாதத்தில் இறைச்சி நுகர்வு குறைவாக இருக்கும் என்பதால் கடந்த இரு வாரம் முன்பு 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.4 ஆயிரம் முதல் 4500 வரை மட்டும் விலை போனது.
இதுகுறித்து மூலனூர் பகுதியை சேர்ந்த விவசாயி லோகநாதன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஆட்டு சந்தையாக கன்னிவாடி சந்தை உள்ளது. இந்தப் பகுதியை சுற்றி ஏராளமான மானாவாரி நிலங்கள் இருப்பதால் விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாக ஆடுகள் வளர்ப்பே கைகொடுக்கிறது. மாடுகள் வைத்து பால் உற்பத்தி செய்ய பசுந்தீவனங்கள் தேவைப்படுவதால் இப்பகுதியில் கறவை மாடுகள் வளர்ப்பது குறைவாகும்.
வாரந்தோறும் நடக்கும் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். ஆனால் புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் விற்பனையும் சரிந்து விலையும் ஆயிரம் வரை குறைந்து விற்பனையாகிறது. போதிய விலை கிடைக்காததால் ஆடுகளை விற்பனை செய்யாமல் திரும்ப ஓட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்தார்.
- மீன் மார்க்கெட்களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும்.
- அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.
கடலூர்:
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இதன் காரணமாக புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பெருமாள் கோவில்களுக்கு சனிக்கிழமைகளில் செல்வதோடு வீடுகளில் அசைவம் சமைக்காமலும், சாப்பிடாமலும் விரதம் இருப்பது வழக்கமாகும். இது மட்டும் இன்றி புரட்டாசி மாதங்கள் சனிக்கிழமைகளில் நாமம் போட்டு நாராயண கோபால எடுத்து சிறப்பு வழிபாடு செய்வதும் வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முன்பு பெரும்பாலான வீடுகளில் தங்களுக்கு தேவையான அசைவ உணவுகளை விரும்பி உண்பார்கள். இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் தொடங்கியவுடன் தங்கள் விரதமுறையை பொதுமக்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நிலையில் இன்று புரட்டாசி மாதம் தொடங்கியது.
இதன் காரணமாக எப்போதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்த நிலையில் இன்று புரட்டாசி தொடங்கியதால் கடலூர் துறைமுகம், மீன் மார்க்கெட்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து கூட்டம் இன்றி காணப்பட்டாலும் சிக்கன், மட்டன் மற்றும் மீன் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இது மட்டும் இன்றி அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்