search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahalaya Amavasi"

    • அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம்.
    • அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய சந்ததிகளை காக்கும். வீட்டில் உள்ள சுபகாரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

    சேலம்:

    முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான நாளாக அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம். அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய சந்ததிகளை காக்கும். வீட்டில் உள்ள சுபகாரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

    மகாளய பட்ச காலம்

    செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 14 வரையிலான காலம் மகாளய பட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது.மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலமாகும்.இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது விசேஷம்.

    அதன்படி மகாளய அமாவாசையான இன்று சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சேலம் அணை மேடு பகுதியில் இன்று காலை முதலே பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    இதில் முன்னேர்களை நினைத்து ேதங்காய் பழம் உடைத்து எள், அரிசி, பூக்களை வாழை இலையில் வைத்து பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையொட்டி அணை மேடு பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    இதே போல சுகவனேஸ்வ ரர் கோவில் நந்தவனம் பகுதியிலும் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.

    மேட்டூர், பூலாம்பட்டி காவிரி ஆறு உள்பட பல்வேறு நீர் நிலைகளிலும் பொது மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதையொட்டி சேலம் அணைமடு, சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம். 

    • முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும்.
    • ஏழைகளுக்கு அன்னம் இடலாம்.

    மறைந்த அப்பா, அம்மா படத்தை எடுத்து சுத்தம் செய்து உரிய திதி நாளில் துளசி, மலர்மாலை சாற்றி பொட்டு வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பளத்தை வைத்து தர்ப்பை மூலம் சட்டம் போட வேண்டும். அதன்மேல் முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும். அதாவது, எனது தாயே எழுந்தருள்க! தந்தையே எழுந்தருள்க! என்று எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு சிவ (அல்லது) விஷ்ணு கோத்ரத்தை சேர்ந்தவருக்கு தர்ப்பணம் செய்கிறேன் என்று கூறி 3 முறை நீர் எள் விடவும், அடுத்ததாக, எனது தந்தையின் தந்தைக்கு தர்ப்பணம் செய்கிறேன், என்று 3 முறை எள் தீர்த்தம் விடுக.

    மூன்றாவதாக எனது பாட்டனார்க்கு தர்ப்பணம் விடுகிறேன் என்று மூன்றுமுறை எள், தண்ணீர் விடவும். அடுத்ததாக, எனக்கு தெரியாமல் என் வம்சாவழியில் வருகின்ற பித்ருக்களுக்கு (காருணீக பித்ரு) தர்ப்பணம் செய்கிறேன் என்று எள் நீர் விடவும். இதன் பொருட்டு தேவர்களும், தேவ ருலக வாசிகள் அனைவரும் எனது தர்ப்பண வழிபாட்டால் திருப்தி அடையட்டும் திருப்தியக;என்று 3 முறை கூறுக. இது தான் எளிய தர்ப்பண பூஜை முறை.

    பிறகு எழுந்து நின்று கையில் எள் நீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை தன்னையே சுற்றிக்கொண்டு முட்டி போட்ட நிலையில், கட்டி கொண்டுள்ள வேட்டி துணியால் எள் தீர்த்தத்தை தொட்டு கண்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும். அதில் உள்ள கூர்ச்ச முடிச்சை அவிழ்த்து எடுத்து எள்ளை சேர்த்துக் கொண்டு குலம் உறவினர்கள் தழைக்க தர்ப்பணம் செய்தேன். உலக மக்கள், என் மக்கள் நலன் காக்கப்பட்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவருக்கு பிடித்தமான பண்டத்துடன், தேங்காய், வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும்.

    தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டுவிட வேண்டும். கால்படும் இடங்களில் எள் தண்ணீரை ஊற்றக்கூடாது.

    தர்ப்பணம் கொடுத்து முடிந்ததும் ஒரு பிடி சாதத்தை உருண்டையாகப் பிடித்து எள் நீர் விட்டு சிறிது பருப்பு கலந்து காக்கையை அழைத்து அது சாதத்தை எடுத்த பிறகு கயா....கயா... கயாதிதி சமர்ப்பணம் என்று மூன்று முறை கூறிய பின் விளக்கில் உள்ள திரியை மட்டும் மாற்றி தீபம் ஏற்றி விட்டு பிறகு வீட்டு தெய்வத்திற்கு பூஜை செய்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.

    பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம்.

    பித்ரு தர்ப்பண பூஜை செய்வதால் மனிதர்களுக்கு உணவு, மற்ற தானங்கள், காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு இறைகின்ற அரிசி எள் முதலியவற்றுக்கு உணவு என்று இயற்கையாகவே உயிரோம்புதல் நடைபெறுகிறது.

    சில கடுமையான பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களே தனக்கு சக்தி இல்லாமை காரணமாக தடை வந்து செய்ய முடியாவிட்டால் மட்டும் அதற்கு வேறு வழி கூறப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அன்னம் இடலாம். எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை எனில் கட்டை விரலை ஈரம் செய்து அதில் ஒட்டிய எள்ளை தானம் தந்து பித்ருக்களை நினைக்கலாம்.

    பசுவுக்கு புல் எடுத்துப்போட்டு அதை தர்ப்பணமாக ஏற்கும்படி பித்ருக்களை வணங்கி கேட்கலாம். அதுவும் முடியாதவர்கள் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து ஏ பித்ருக்களே! எனக்கு எதுவும் செய்ய இயலவில்லை வேண்டுகிறேன், திருப்தி பெறுவீர்களாக என்று வேண்டி விழுந்து வணங்கலாம்.

    • அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள்.
    • புரட்டாசி மாதம் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை.

    மறைந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்று சொல்வது வழக்கம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட நீங்கள் முன்னோர்களை வழிபட வேண்டிய நாள், இந்த மகாளய அமாவாசையை மறந்துவிடாதீர்கள். முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டிய தேதியை மறந்தவர்கள், திதி கொடுக்க மறந்தவர்கள் அன்றைய தினத்தில் திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் மனதார ஏற்றுக்கொள்வர்.

    அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள் அமாவாசை ஆகும். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரும் அமாவாசையை 'தை அமாவாசை' என்றும், ஆடி மாதம் வரும் அமாவாசையை 'ஆடி அமாவாசை' என்றும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை 'மகாளய அமாவாசை' என்றும் சிறப்பு வாய்ந்ததாக சொல்வா்.

    புரட்டாசி மாதம் 27-ந் தேதி (14.10.2023) சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலமும், பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் முன்னேற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும். திதி கொடுத்தால் விதி மாறும் என்பது முன்னோர் வாக்கு. தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றுவது இந்த முன்னோர் வழிபாடுதான்.

    ×