search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதின்"

    • போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.
    • புதினிடம் மேற்கத்திய நாடுகள் எவ்வாறு போராடியது என்பதை காட்டும் ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது.

    லண்டன் :

    உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக வலுவாக குரல் கொடுத்து வரும் உலக தலைவர்களில் ஒருவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

    இவர் பிரதமராக இருந்தபோது போருக்கு மத்தியில் 3 முறை உக்ரைனுக்கு பயணம் செய்து அந்த நாட்டுக்கு இங்கிலாந்தின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினார். பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் திடீர் பயணமாக உக்ரைன் சென்றார்.

    இந்த நிலையில் போர் தொடங்குவதற்கு முன், அதை தடுக்க ரஷிய அதிபர் புதினிடம் மேற்கத்திய நாடுகள் எவ்வாறு போராடியது என்பதை காட்டும் ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில் பேசியுள்ள போரிஸ் ஜான்சன், புதின் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    போருக்கு முன்னர் என்னிடம் தொலைபேசியில் உரையாடிய புதின், என்னை மிரட்டும் தொனியில் பேசினார். ஒரு கட்டத்தில் "போரிஸ், நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் ஏவுகணை மூலம், அது ஒரு நிமிடத்தில் நடக்கும் அல்லது அதுபோல வேறு ஏதும் நடக்கும்" என மிரட்டினார்.

    இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

    • துருக்கி அதிபர் எர்டோகன் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
    • ரஷிய அதிபர் புதினுடன், எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய ராணுவத்திற்கு உக்ரைன் வீரர்களும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றனர். ரஷிய படைகள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.

    இந்த போரில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே போரை நிறுத்தும்படி உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன் இரண்டு நாடுகளிடமும் நல்ல நட்புறவு வைத்திருப்பதால் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பலமுறை புதினையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் துருக்கிக்கு அழைத்து வர முயற்சி செயதுள்ளார்.

    அவ்வகையில், ரஷிய அதிபர் புதினுடன், துருக்கி அதிபர் எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என புதினிடம் எர்டோகன் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த புதின், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷிய பிராந்தியமாக உக்ரைன் ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக எர்டோகனிடம் கூறியிருக்கிறார். இத்தகவலை ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    புதிய பிராந்தியங்கள் தொடர்பான உண்மை நிலையை கருத்தில் கொண்டு, உக்ரைன் அதிகாரிகளின் நிபந்தனையின் மீது தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான ரஷியாவின் திறந்த நிலைப்பாட்டை புதின் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோனெட்ஸ், லுகான்ஸ்க், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளை முழுமையான கட்டுப்படுத்தாவிட்டாலும், அவற்றை இணைத்துவிட்டதாக ரஷியா கூறுகிறது.

    • எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ரஷிய அதிபர்தான் முடிவு செய்ய வேண்டும்.
    • நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாட்டுடனான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தோனேசியாவில் அண்டையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையின் துணை தலைமை அதிகாரி ஸ்வெட்லானா லுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷிய அரசு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

    (ரஷிய அதிபர்) நிச்சயமாக ஜி20 உச்சி மாநாட்டிற்கு செல்வார் என்று நான் நம்புகிறேன். ஆனால் இது குறித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த உச்சி மாநாடு நடைபெற ஒரு வருடம் இருக்கும் போது, இது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.

    நான் பார்க்கும் விதம் என்னவென்றால் இதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன. நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம் என்று நான் நம்புகிறேன். அது ஒரு கருத்தரங்கு அல்லது மாநாடாக இருந்தாலும் ரஷியா தனது நிலைப்பாட்டை நிரூபிக்க, தனது கருத்துக்களை வெளிப்படுத்த எந்த நிகழ்விலும் பங்கேற்பது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
    • குண்டு வைத்து பாலத்தை சீரமைக்கும் பணி விரைந்து நடத்தி முடிக்கப்பட்டது.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் புதின், தலைநகர் மாஸ்கோவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தபோது மாடி படிக்கட்டில் இறங்கியபோது தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

    மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

    இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதின் பொது வெளியில் தோன்றினார்.

    கடந்த அக்டோபர் மாதம் ரஷியாவின் கிரீமியா பகுதியில் உள்ள பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. பாலத்தை சீரமைக்கும் பணி விரைந்து நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

    கிரீமியா பாலத்தை புதின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பாலத்தில் காரை ஓட்டி சென்றார். பின்னர் பாலத்தின் பழுது பார்ப்பு பணிகள் குறித்த அறிக்கையை துணை பிரதமர் மராட் குஷ்னுலினிடம் கேட்ட புதின், கட்டுமான தொழிலாளர்களிடம் உரையாடினார்.

    கிரீமியா பாலத்தை புதின் பார்வையிட்ட காட்சிகள் அரசு தொலைக்காட்சியில் காட்டப்பட்டன.

    உக்ரைன் மீதான ரஷியா வின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவுக்குள் இருக்கும் 2 ராணுவ தளங்களை உக்ரைன் ராணு வம் டிரோன் மூலம் தாக்கியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்
    • புதின் வரவில்லை என்ற முடிவு அனைவருக்கும் சிறந்தது என்று இந்தோனேசிய அரசு அதிகாரி கூறி உள்ளார்.`

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் பாலியில் அடுத்த வாரம் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்தபிறகு முதல் முறையாக, அமெரிக்க அதிபர் பைடனும், ரஷிய அதிபர் புதினும் இந்த உச்சிமாநாட்டில் ஒன்றாக கலந்துகொள்வார்கள் என எதிர்பாக்கப்பட்டது.

    ஆனால், ரஷிய அதிபர் புதின் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என இந்தோனேசிய அரசு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். உக்ரைன் போர் விஷயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான மோதல் போக்கை தவிர்ப்பதற்காக இந்த மாநாட்டில் இருந்து புதின் ஒதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதின் வரவில்லை என்ற முடிவு அனைவருக்கும் சிறந்தது என்று ஜி20 நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் லஹட் பின்சார் பாண்ட்ஜைத்தான் கூறி உள்ளார். 

    • ரஷியா-ஜார்ஜியா எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • பல கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    மாஸ்கோ :

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

    இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷியாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் இலக்கை அடையும் வரை போர் தொடரும் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக கூறி வருகிறார்.

    அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் ரஷியர்களை அணி திரட்ட உள்ளதாக அண்மையில் அறிவித்தார்.

    போருக்காக அணி திரட்டப்படுபவர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட மட்டார்கள் என்றும், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள், பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு கூறினார்.

    எனினும் போருக்கு அணி திரட்டும் புதினின் அறிவிப்பு வெளியானது முதல் ரஷியாவை சேர்ந்த ஆண்கள் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ரஷியர்கள் தங்களின் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் போரில் பங்கேற்பதை தவிர்க்க விரும்பும் ரஷிய ஆண்கள் பலரும் சாலை மார்க்கமாக ஜார்ஜியாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    இதன் காரணமாக ரஷியா-ஜார்ஜியா எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கி.மீ. தொலைவுக்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    அதேபோல் ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்தில் ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது. சாலை மார்க்கமாக மக்கள் வந்த வண்ணம் இருப்பதாக பின்லாந்து அதிகாரிகள் கூறுகின்றனர்.

    புதினின் அறிவிப்பை தொடர்ந்து, ரஷியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பன் மடங்கு உயர்ந்ததோடு, குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டுகள் முற்றிலுமாக விற்று தீர்ந்துவிட்டன.

    இது ஒருபுறம் இருக்க 18 முதல் 65 வயது வரையுள்ள ஆண்களுக்கு விமான டிக்கெட் விற்பனை செய்வதை ரஷிய விமான நிறுவனங்கள் நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    இதனாலேயே ரஷியாவை சேர்ந்த ஆண்கள் சாலை மார்க்கமாக அண்டை நாடுகளை நோக்கி படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதே சமயம் நாட்டை விட்டு ஆண்கள் வெளியேறுவது தொடர்பாக வரும் தகவல்கள், மிகைப்படுத்தப்பட்டவை என ரஷிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
    • புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் ராணுவத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போலீசார் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போராடுவோர் கைது செய்யப்படுகின்றனர். நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக கிட்டத்தட்ட முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    ராணுவச் சட்டம் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், ரஷிய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட (போருக்கு தகுதியான வயது) ரஷிய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற இளைஞர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று ஃபார்ச்சூன் செய்தி வெளியிட்டுள்ளது.

    உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மாகாணங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்து ரஷிய பிரதேசமாக மாற்ற, அதிபர் புதினுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், இந்த வார இறுதியில் இரண்டு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. 7 மாதங்களாக ரஷிய படைகளின் போர் தாக்குதல் நீடிக்கிறது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் உக்ரைன் போருக்கு 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக புதின் நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, உக்ரைனில் போரிட மேலும் 3 லட்சம் பேர் அழைக்கப்படுவார்கள். இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். ஆயுதப்படை களில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

    ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி ரஷிய அதிபர் புதினின் அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. 38 நகரங்களில் பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    அப்போது போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து முன்னேறி சென்றதால் கைது செய்யப்பட்டனர்.

    தலைநகர் மாஸ்கோவில் 50 பேரை போலீசார் கைது செய்தனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் போராட்டக்காரர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர். இதுபோல் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1332 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது.

    ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    • ரஷிய ராணுவத்திற்கு அணி திரட்டல் அறிவிப்பை அதிபர் புதின் வெளியிட்டுள்ளார்.
    • எங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை என புதின் பேச்சு

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர், இன்று 210-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இந்த பின்னடைவு ரஷியாவின் தோல்விக்கான அறிகுறியாக மேற்கத்திய நாடுகள் கட்டமைத்து வருகின்றன.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ரஷிய ராணுவத்திற்கு அணி திரட்டல் அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். 2-ம் உலகப்போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷிய ராணுவ அணி திரட்டல் அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நாட்டு மக்களிடம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி வாயில் நிகழ்த்திய உரையில், 'ரஷிய ராணுவத்திற்கான அணி திரட்டல் இன்று முதல் தொடங்குகிறது. ராணுவத்தில் பணியாற்றி, பயிற்சி பெற்று தற்போது வேறு பணிகளில் உள்ள நாட்டு மக்கள் ராணுவ பணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்கள்.

    அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகள் ராணுவ நடவடிக்கையை ரஷியா மண்ணில் மேற்கொள்ள உக்ரைனை தள்ளுகின்றன. மேற்கத்திய நாடுகள் அணு ஆயுதத்தை வைத்து ரஷியாவை மிரட்டுகின்றன. அவ்வாறு மிரட்டல் விடும் நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். பதிலடி கொடுக்க எங்களிடமும் நிறைய ஆயுதங்கள் (அணு ஆயுதங்கள்) உள்ளன. அவை நேட்டோ அமைப்பின் ஆயுதங்களை விட அதிக ஆற்றல் மிக்கவை. எங்கள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். இது ஒன்றும் மழுப்பல் அல்ல' என்றார்.

    நாட்டு மக்களிடம் புதின் பேசிய சில நிமிடங்களில் ராணுவ அணி திரட்டலில் 3 லட்சம் பேர் படையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணு ஆயுத எச்சரிக்கை மட்டுமின்றி உக்ரைன் மீதான போரை ரஷியா தீவிரப்படுத்த உள்ளது. இந்த அச்சுறுத்தலால் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் முடிவின்றி தொடர்ந்து அதிக உயிரிழப்புகளையும், பாதிப்பையும் ஏற்படுத்த வழிவகுத்துள்ளது. 

    • உக்ரைன் போர் குறித்து ரஷிய அதிபரிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
    • உக்ரைன் மீதான படையெடுப்புக்காக ரஷியாவை இந்தியா இதுவரை விமர்சிக்கவில்லை.

    தாஷ்கண்ட்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

    இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவும் ரஷியாவும் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்றைய சகாப்தம் போருக்கானது அல்ல. அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியா - ரஷியா இரு தரப்பு விஷயங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாம் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்காக உதவிய ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்" என்றார்.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு புதினும் மோடியும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த புதின், 'உக்ரைன் மோதல் விஷயத்தில் உங்களின் நிலைப்பாட்டை நான் அறிவேன். போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்' என்றார்.

    உக்ரைன் மீதான படையெடுப்புக்காக ரஷியாவை இந்தியா இதுவரை விமர்சிக்கவோ, கண்டனம் தெரிவிக்கவோ இல்லை. பேச்சுவார்த்தை மூலம் சிக்கலை தீர்க்கவேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தியாவும் ரஷியாவும் பனிப்போர் காலத்திலிருந்தே நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளன. அத்துடன், ரஷியா இந்தியாவிற்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் முக்கிய நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.
    • அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    மாஸ்கோ

    நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைனின் நடவடிக்கை, ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்காக அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. அந்தப் போர் இன்னும் நீடிக்கிறது. இதனால் உக்ரைன், ரஷியா மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முடிவு எடுத்ததற்காக அதிபர் புதினை பதவியில் இருந்து அகற்ற வேண்டும், அவர் மீது தேசத்துரோக வழக்கு போட்டு அவரைக் கைது செய்ய வேண்டும் என்று அங்குள்ள 5 அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இது அங்கு பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதுவும் இந்த கோரிக்கை, புதினின் சொந்த ஊரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக அந்த அதிகாரிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

    இதுபற்றி முன்னாள் உளவுத்துறை அதிகாரி ரெபேக்கோ கோப்ளர் கருத்து தெரிவிக்கையில், "புதினின் சொந்த ஊரில், அவர் தேசத்துரோகம் செய்ததாக குற்றம்சாட்டி, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கோரிக்கை விடுத்தவர்களுக்கு தங்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்பது தெரியும். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒரு சில ரஷிய அதிகாரிகளின் இந்த மீறல் மற்றும் எதிர்ப்பின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது" என தெரிவித்தார்.

    • ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்குகிறது.
    • டிரோன் பயன்பாடு குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களைக் கைப்பற்றியபோது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருகிறது. தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் ஈரான் செல்கிறார். சிரியா விவகாரம் குறித்து ஈரான், துருக்கியுடன் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிபர் புதின் பங்கேற்க உள்ளார் என கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சுமத்திய நிலையில், அதிபர் புதினின் ஈரான் பயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    ×