search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவில் ராணுவ ஆள்சேர்ப்புக்கு எதிராக போராட்டம்: 1300 பேர் கைது
    X

    போராட்டக்காரர்களை கைது செய்யும் காட்சி

    ரஷியாவில் ராணுவ ஆள்சேர்ப்புக்கு எதிராக போராட்டம்: 1300 பேர் கைது

    • ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. 7 மாதங்களாக ரஷிய படைகளின் போர் தாக்குதல் நீடிக்கிறது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் உக்ரைன் போருக்கு 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக புதின் நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, உக்ரைனில் போரிட மேலும் 3 லட்சம் பேர் அழைக்கப்படுவார்கள். இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். ஆயுதப்படை களில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

    ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி ரஷிய அதிபர் புதினின் அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. 38 நகரங்களில் பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    அப்போது போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து முன்னேறி சென்றதால் கைது செய்யப்பட்டனர்.

    தலைநகர் மாஸ்கோவில் 50 பேரை போலீசார் கைது செய்தனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் போராட்டக்காரர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றி சென்றனர். இதுபோல் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1332 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது.

    ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    Next Story
    ×