search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்தநாள் விழா"

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலம் அருகே உள்ள முத்தப் பன்பட்டியில் பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரியாரின் உருவப் படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.

    இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, பொதுமக்கள் பெரி யாரின் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில விவ சாய அணி இணை செயலா ளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், சரவணன், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், தனசேகரன், பேரூர் செயலாளர் வருசை முகமது, மாவட்ட அணி அமைப்பாளர்கள் வில்லூர் ஞானசேகரன், பரமசிவம், வழக்கறிஞர் அணி அமைப் பாளர் ஆனந்த், கீழக்குயில் குடி செல்வேந்திரன், திரு மங்கலம் நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமார், வீரக்குமார், ஜஸ்டின் திரவியம், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • பெண் குழந்தைகள் இல்லத்தில் பா.ஜ.க பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்தநாள் விழா இன்று குமரி மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாள் விழா

    நாகர்கோவில் செட்டி தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பேரில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பிரதமரின் 73 வயதை குறிக்கும் வகையில் 73 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை பொன். ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் மீனாதேவ், மகளிர் அணி செயலாளர் உமாரதி ராஜன், தொழி லதிபர் என்ஜினீயர் ஜெயக் குமார், மாநகர தலைவர் ராஜன், கவுன்சி லர்கள் ரமேஷ், தினகரன், நாகர்கோ வில் தெற்கு மாநகர் முன் னாள் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஊட்டுவாழ் மடத்தில் உள்ள பெண் குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட பாரதியஜனதா பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. இதில் சந்திர சேகர், விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் இனிப்பு வழங்கப்பட்டது.

    • அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காரைக்குடி

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ கற்பகம் இளங்கோ, மாவட்ட எம்.ஜி.ஆர் இளை ஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், நகர செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், பொதுக் குழு உறுப்பினர் புலவர் பழனியப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்திரா தேவி, நகர மகளிரணி தலைவி சுலோச்சனா, நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, ராம்குமார், பிரகாஷ், அமுதா, ராதா, நகர இளைஞரணி செய லாளர் இயல் தாகூர், வட்ட செயலாளர் இலைக்கடை சரவணன், வழக்கறிஞர் காளீஸ்வரன் உள்பட நிர்வா கிகள், மகளிரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • ராமராஜூ காட்டன் மில்ஸ் ஸ்தாபகர் என்.கே.ராமராஜூ 113 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ராம ராஜூ காட்டன் மில்ஸ் ஸ்தாபகர் என்.கே ராம ராஜூவின் 113-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆலை வளாகத்தில் ந நடைபெற்ற விழாவிற்கு இயக்குநர் என்.ஆர்.கே. ஸ்ரீ கண்டன் ராஜா தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனை யின் சார்பாக ரத்ததான முகாமும், சக்தி கண் மருத்துவமனை சார்பாக கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.

    முகாமில் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் தலைவர் மோகனரங்கன், தலைமை நிதிநிலை அதிகாரி விஜய் கோபால், தலைமை பொது மேலாளர். சந்தோஷ், பொது மேலாளர் சுந்தரராஜ் துணை பொது மேலாளர் தங்கராஜ், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • வ. உ. சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் விழா பல்லடம் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.
    • பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

    பல்லடம்

    பல்லடத்தில், வ. உ. சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் விழா பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை, பாலுமணியகாரர், மருத்துவர் ராஜ்குமார்,பாலாஜி ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொணடனர்.

    • விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.
    • நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரம், குமாரசாமிப்பேட்டையில் பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்ன தான அறக்கட்டளை சார்பில் கிருபானந்த வாரியார் சாமி பிறந்தநாள் விழா சிவசுப்பிரமணியசாமி கோவில் பின்புறம் தட்சணாமூர்த்தி தெருவில் நடைபெற்றது.

    விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். ஊர் பிரமுகர்கள் குமார், டி.ஜி. மணி, சண்முகம், மோகன், மணிவண்ணன், சதாசிவம், இளங்கோவன், நகராட்சி கவுன்சிலர்கள் பாண்டியன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி கிருபானந்த வாரியார் உருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் அறங்காவலர் குழு தலைவர் சேகரன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மணிவண்ணன், நிர்வாகிகள் உதயபானு, தவமணி, சேகர், பாபு, சோமசுந்தரம், துரை, பழனிசாமி, பூங்குன்றம், கண்ணன், பசுபதி மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • கருங்கல் ராஜீவ் சந்திப்பில் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது
    • நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாள் விழா, கருங்கல் ராஜீவ் சந்திப்பில் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. அங்குள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கார் பிரடி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், காங்கிரஸ் மனித உரிமை துறை கிள்ளியூர் தொகுதி தலைவர் ராஜகிளன் மற்றும் துணை அமைப்புகளின் வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ராஜ்குமார், சூர்யா, உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார்.

    கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் கவிதா, தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சேவல் ஜெயக்குமார், செங்கதிர், ஆறுமுகம், ஹானஸ்ட், ராஜ்குமார், சூர்யா, உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ராஜேந்திர சோழன் பிறந்தநாளையொட்டி பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடித்திருவாதிரை விழா நாளை நடக்கிறது
    • விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்குகிறார்

    அரியலூர்A

    அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா நாளை (சனிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடித்திருவாதிரை விழாவையொட்டி மேடை அமைக்கும் பணிகள், பொதுமக்கள் அமரும் இடம், குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதி, பக்தர்கள் வந்து செல்லும் வகையில் பஸ் வசதி உள்ளிட்ட விழா தொடர்பான பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    ஆடித்திருவாதிரை விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்குகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் முன்னிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் காலை 10 மணியளவில் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைக்கிறார்.

    இதையடுத்து, காலை 11 மணி முதல் மங்கள இசை, தப்பாட்டம், பரதநாட்டியம், கரகாட்டம், காவடி ஆட்டம், கிராமிய நடனம், பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    • மாணவ, மாணவிகளுக்கு பரிசு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஆற்காடு அண்ணா சிலை அருகில் கொட்டும் மழையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழா நடந்தது.

    இதில் தமிழில் பேசு பாிசை வெல்லு என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், கவிஞா் ஜெயபாஸ்கரன் தமிழும் தமிழின போரளி எனும் சொற்பொழிவு நிகழ்ச்சினை நடத்தினர்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட வன்னியர் சங்க தலைவர்.அ.ப. லட்சுமணன் ஆற்காடு நகர செயலாளர் துளசி ரவி வரவேற்று பேசினார்.

    சுரேஷ், அ.ப.லட்சு மணன், திருமுருகன், சுரேந்தர்,ஏ.வி.டி. பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் ஞான சௌந்தரி வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த போட்டியில் சுமார் 50 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தூய தமிழில் பேசிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் சரவணன், கவிஞர் பாஸ்கரன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், தென்னை மரக்கன்றுகளையும் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம், செல்வி ரமேஷ் , பாஞ்சாலி வெங்கடேசன், மாநில பசுமை தாயகம் துணை செயலாளர் டீ.டி.மகேந்திரன், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய,பா.ம.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இறுதியாக ஆற்காடு நகர மன்ற தலைவர் சஞ்சீவிராயன் நன்றி உரை வழங்கினார்.

    • ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க சார்பில் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • 3 இடங்களில் 85 என்ற கணக்கில் மொத்தம் 255 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    கடலாடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிறைக்குளம் கிராமத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையின் பேரிலும், பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி ஆணைக்கிணங்க பசுமை தாயகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் கர்ண மகாராஜன் ஏற்பாட்டில் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நடந்தது.

    இதையொட்டி 3 இடங்களில் 85 என்ற கணக்கில் மொத்தம் 255 மரக்கன்றுகள் நடப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்ட பசுமை தாயகத்தின் தலைவர் திருஞானம் அனை வரையும் வரவேற்றார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பாட்டாளி மக்கள் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம், மாவட்ட தலைவர் சந்தன தாஸ், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் முனியசாமி, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலகுமா ரன், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட கவுரவ தலைவர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். மமுடிவில் பாட்டாளி தொழிற் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் நன்றி கூறினார்.

    • காமராஜர் அறநிலையம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அற நிலையத்தின் பொதுச்செய லாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    மதுரை

    காமராஜர் அறநிலையம் சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா தெப்பக்குளம் காமராஜர் அறநிலையத்தில் நடந்தது. அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர். எஸ்.கே. மோகன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் டிபால சுப்பிரமணியன் வரவேற்றார். துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.

    மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் வி.பி.மணி, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், துணைத் லைவர் பி.செந்தில்குமார், செயலாளர்-தாளாளர் எல்.ஆனந்தகிருஷ்ணன், துணைச்செயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி இணை செயலாளர் ஓய்.சூசை அந்தோணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    மதுரை செந்தமிழ் கல்லூரி துணை முதல்வர் ரேவதி சுப்புலெட்சுமி 1,500 மகளிருக்கு சேலைகளை வழங்கினார். அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக் குழு தலைவர் மு.சிதம்பரபாரதி சிறப் புரை ஆற்றினர். அறநிலையத்தின் பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    ×