search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமராஜர் அறநிலையம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
    X

    காமராஜர் அறநிலையம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

    • காமராஜர் அறநிலையம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அற நிலையத்தின் பொதுச்செய லாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    மதுரை

    காமராஜர் அறநிலையம் சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா தெப்பக்குளம் காமராஜர் அறநிலையத்தில் நடந்தது. அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர். எஸ்.கே. மோகன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் டிபால சுப்பிரமணியன் வரவேற்றார். துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.

    மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் வி.பி.மணி, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், துணைத் லைவர் பி.செந்தில்குமார், செயலாளர்-தாளாளர் எல்.ஆனந்தகிருஷ்ணன், துணைச்செயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி இணை செயலாளர் ஓய்.சூசை அந்தோணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    மதுரை செந்தமிழ் கல்லூரி துணை முதல்வர் ரேவதி சுப்புலெட்சுமி 1,500 மகளிருக்கு சேலைகளை வழங்கினார். அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக் குழு தலைவர் மு.சிதம்பரபாரதி சிறப் புரை ஆற்றினர். அறநிலையத்தின் பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×