search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamaraj Foundation"

    • காமராஜர் அறநிலையம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அற நிலையத்தின் பொதுச்செய லாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    மதுரை

    காமராஜர் அறநிலையம் சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா தெப்பக்குளம் காமராஜர் அறநிலையத்தில் நடந்தது. அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர். எஸ்.கே. மோகன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் டிபால சுப்பிரமணியன் வரவேற்றார். துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.

    மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் வி.பி.மணி, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், துணைத் லைவர் பி.செந்தில்குமார், செயலாளர்-தாளாளர் எல்.ஆனந்தகிருஷ்ணன், துணைச்செயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி இணை செயலாளர் ஓய்.சூசை அந்தோணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    மதுரை செந்தமிழ் கல்லூரி துணை முதல்வர் ரேவதி சுப்புலெட்சுமி 1,500 மகளிருக்கு சேலைகளை வழங்கினார். அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக் குழு தலைவர் மு.சிதம்பரபாரதி சிறப் புரை ஆற்றினர். அறநிலையத்தின் பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.

    • காமராஜர் அறநிலையம் சார்பில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • நாடார் உறவின்முறை உறுப்பினர் மக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.

    மதுரை

    பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலையத்தின் சார்பில் மதுரை நாடார் உறவின்முறை உறுப்பினர் மக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த திருமண திட்டத்தின் கீழ் உறவின் முறை உறுப்பினர் எம்.நாகராஜன்- பஞ்சவர்ணம் மகள் என்.கார்த்திகா ராணிக்கும், மதுரை ஆர்.தர்மராஜ்- முத்துமாரி ஆகியோரது மகன் டி.ஜீவானந்தனுக்கும் திருமணம் மதுரை நாடார் உறவின் முறை என்.சுப்புராஜ நாடார் கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடந்தது. பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி வரவேற்றார். அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்.பால் பாண்டியன் தலைமை தாங்கினார். அறநிலைய பொதுச்செயலாளர் டி.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் திரும ணத்தை நடத்தி வைத்தார்.

    மதுரை நாடார் உறவின் முறை தலைவர் அனிதா ஆர்.சிவானந்தன், துணைத்தலைவர் ஆர்.முத்தரசு, பொதுச் செயலாளர் வி.பி.மணி, காமராஜர் அறநிலைய துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், துணை செயலாளர் சி.பாஸ்கரன், துணைத் தலைவர் செந்தில்குமார், விடுதிக்குழு செயலாளர் பி.குமார், ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தலை வர் ஆர்.கணேசன், துணைத் தலைவர் எஸ்.பழனிக்குமார், செயலாளர் கே.ஆனந்த், இணைச் செயலாளர் ஒய்.சூசை அந்தோணி ஆகியோர் பேசினர். மணமக்களுக்கு சேலை, மாலை, கட்டில், பீரோ உள்பட சீர்வரிசைகள் காமராஜர் அறநிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்பட்டன.

    ×