search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
    X

    நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

    • மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • பெண் குழந்தைகள் இல்லத்தில் பா.ஜ.க பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்தநாள் விழா இன்று குமரி மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாள் விழா

    நாகர்கோவில் செட்டி தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பேரில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பிரதமரின் 73 வயதை குறிக்கும் வகையில் 73 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை பொன். ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் மீனாதேவ், மகளிர் அணி செயலாளர் உமாரதி ராஜன், தொழி லதிபர் என்ஜினீயர் ஜெயக் குமார், மாநகர தலைவர் ராஜன், கவுன்சி லர்கள் ரமேஷ், தினகரன், நாகர்கோ வில் தெற்கு மாநகர் முன் னாள் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஊட்டுவாழ் மடத்தில் உள்ள பெண் குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட பாரதியஜனதா பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. இதில் சந்திர சேகர், விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் இனிப்பு வழங்கப்பட்டது.

    Next Story
    ×