என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் கிருபானந்த வாரியார் சாமி பிறந்தநாள் விழா
- விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.
- நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி நகரம், குமாரசாமிப்பேட்டையில் பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்ன தான அறக்கட்டளை சார்பில் கிருபானந்த வாரியார் சாமி பிறந்தநாள் விழா சிவசுப்பிரமணியசாமி கோவில் பின்புறம் தட்சணாமூர்த்தி தெருவில் நடைபெற்றது.
விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். ஊர் பிரமுகர்கள் குமார், டி.ஜி. மணி, சண்முகம், மோகன், மணிவண்ணன், சதாசிவம், இளங்கோவன், நகராட்சி கவுன்சிலர்கள் பாண்டியன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி கிருபானந்த வாரியார் உருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் அறங்காவலர் குழு தலைவர் சேகரன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மணிவண்ணன், நிர்வாகிகள் உதயபானு, தவமணி, சேகர், பாபு, சோமசுந்தரம், துரை, பழனிசாமி, பூங்குன்றம், கண்ணன், பசுபதி மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்