search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    80-வது பிறந்தநாள் விழா - ராஜீவ்காந்தி சிலைக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாலை
    X

    80-வது பிறந்தநாள் விழா - ராஜீவ்காந்தி சிலைக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாலை

    • கருங்கல் ராஜீவ் சந்திப்பில் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது
    • நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாள் விழா, கருங்கல் ராஜீவ் சந்திப்பில் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. அங்குள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கார் பிரடி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், காங்கிரஸ் மனித உரிமை துறை கிள்ளியூர் தொகுதி தலைவர் ராஜகிளன் மற்றும் துணை அமைப்புகளின் வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×