search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்தநாள் விழா"

    • குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தீர்மானம்
    • உணவு மற்றும் பொருள் உதவிகள் வழங்கி கொண்டாடுவது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இரணியல் :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் திங்கள்நகர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், ரமணிரோஸ், ஏசு ரெத்தி னராஜ், வைகுண்டதாஸ், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் சசிசுபாசிங் வரவேற்றார்.

    ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். பேரூர் செயலாளர்கள் சேவியர் ஏசுதாஸ், சுஜெய்ஜாக்ஸன், செல்வதாஸ், நிர்வாகிகள் குளச்சல் சபீன், ஜெயவி ஜயன், அருள்பிரபின், ஜெய்வின்ராஜா, சிவகுமார், வில்சன், அசன், ரெஜின் உட்பட பலர் கலந்துகொண்டனர். மகளிர் அணி நிர்வாகி லீமா நன்றி கூறினார்.

    நாளை (27-ந்தேதி) தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது. ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அங்கன்வாடி மையங்கள், முதியோர் இல்லங்கள், மாணவர் காப்பகங்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தொழுநோயாளிகள், புற்றுநோய் மையங்கள், மருத்துவமனைகள் போன்றவைகளுக்கு தேவையான உணவு மற்றும் பொருள் உதவிகள் வழங்கி கொண்டாடுவது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • தமிழக மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உணவு வழங்கினார்.

    ராமநாதபுரம்

    தமிழக மக்கள் முன்னேற் றக் கழக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக அதன் பொதுச்செயலாள ரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாக தலைவருமான டாக்டர் ஜா.பிரிசில்லா பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செய லாளர் முனியசாமி தலை மையில் தேவிபட்டி னம் அருகே தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மனவளர்ச்சி குன்றி யோர் இல்லத்தில் கேக் வெட்டி காலை உணவு வழங்கப்பட்டது.

    மாவட்ட தலைவர் ராஜ சேகர், மாவட்ட பொருளா ளர் கேசவன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்பாண்டியன், ராமநா தபுரம் ஒன்றிய செயலாளர் மாரிதாஸ், ஒன்றிய தலைவர் முருகன் முன்னிலை வகித்த னர். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் துரைராஜா, திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் சதீஷ்குமார்,

    திருவாடானை ஒன்றிய செயலாளர் சேவியர், மாவட்ட மாணவரணி செய லாளர் விக்னேஷ்வரன், மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் சதீஷ் பாண்டியன், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜண்டா பாண்டியராஜன், வெங்கடேஷ், ராமநாதபுரம் ஒன்றிய இணைச் செயலா ளர் தினேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி சுரேஷ் ஒன்றிய தலைவர் கமலேஷ், ராமநாதபுரம் நகர பொறுப் பாளர் மகேஷ்குமார், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய இணைச் செயலாளர் துரை தேவேந்திரன், ஒன்றிய தொழி லாளர் அணி மகா லிங்கம், ஆட்டோ கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நரிக்குடியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பிரவீன் சுந்தர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் சாலை இலுப்பைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 93-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திலகவதி, உதவி ஆசிரியை செல்வி மேரி தலைமை தாங்கினர். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார்.

    நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பிரவீன் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    அங்கு வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள், எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் நம்பிராஜன், பிரவீன் சுந்தர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    • அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சார்பில் அறிவானந்தபாண்டியன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ஆதரவற்றோர் இல்லத்திலும், பின்னர் பசுமலையில் உள்ள இன்பா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    மதுரை

    அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் அறிவுச்சுடர் கே.அறிவானந்த பாண்டியனின் 63-வது பிறந்த நாள் விழா பேரவை யின் அவைத்தலைவர் எஸ்.கே.மோகன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

    நாகமலை, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும், தெப்பக்குளம் அய்ய நாடார் ஜெயலெட்சுமி அம்மாள் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து காமராஜர் அறநிலையத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடை பெற்றது. 12 மணிக்கு தெற்குவாசலில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலும், பின்னர் பசுமலையில் உள்ள இன்பா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேரவையின் துணைத்தலைவர் கே.மதனகோபால். பொதுச்செயலாளர் வி.பி.மணி, பொருளாளர் பா.குமார், மாநகர் தலைவர் எஸ்.எம்.மகராஜன், துணைத்தலைவர்கள் எம்.என்.ரவி, ஜி.முத்து. செயலாளர் ஏ.மதிவாணன், துணைச்செயலாளர் ஜி.பி.பாண்டி.

    மதுரை நாடார் உறவின் முறை தலைவர் அனிதா ஆர்.சிவானந்தன், ஜெயராஜ் நாடார் மேல் நிலைப்பள்ளி துணைத் தலைவர் பி.செந்தில் குமார், துணைச்செயலாளர் சி.பாஸ்கரன், காமராஜர் அறநிலைய தலைவர் துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், பொதுச் செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி, டி.பாலசுப்பிர மணியன்.

    ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்கு லேசன் பள்ளி தலைவர் ஆர். கணேசன், செயலாளர் கே.ஆனந்த், இணைச்செய லாளர் ஒய். சூசை அந்தோணி, பேரவையின் கிழக்குத் தொகுதி கதிர்வேல், முருகேச பாண்டியன், ரவிச் சந்திரன், டேனியல், கிருஷ் ணன். மணிக்குமார், மாரி யப்பன், ராஜா, மதியழகன், காமராஜ்பாபு, மத்திய தொகுதி டி.கார்த்திகை செல்வம், கணேசன், ஜவஹர். பாலன், காசி, பெத்தராஜன்.

    ரவி, சந்திரசேகர். மேற்குத்தொகுதி ஏ.சிவக்குமார், ஜெய்சங்கர், சங்கர், ரவி, ராமலிங்கம். தினேஷ். முத்துராஜ். வடக்கு தொகுதி ஆர்.காசி விஸ்வநாதன், வேலாயுதம். கணேசன் தெற்கு தொகுதி நாகசேகர், வெங்கடேஷ், சுரேஷ், சரவணக்குமார், தன்ராஜ். முருகேசன், முருகானந்தம். விஜய பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு விருந்தினராக இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையை அடுத்த புழலில் ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பள்ளி வளாகத்தில் பத்மஸ்ரீ டாக்டர்.பா. சிவந்தி ஆதித்தனாரின் 88 - வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    சென்னை வாழ் நாடார்கள் சங்க துணை தலைவர் கரு.சி. சின்னத்துரை நாடார் தலைமையில் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக பாலிடெக்னிக் கல்லூரியின் செயலரும் பள்ளியின் நிர்வாக அதிகாரியுமான எஸ். கோவிந்தசாமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் செயலாளர்கள் செல்லத்துரை, எல். சி. மனோகரன், பாலிடெக்னிக் கமிட்டி உறுப்பினர்கள் எஸ். எஸ். பாண்டியன், நாகராஜன், செல்வகுமார், அட்மிஷன் கமிட்டி உறுப்பினர் சிவாஜி, புழல் சங்கம், செங்குன்றம் வட்டார நாடார் ஐக்கிய சங்கம், செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணி, காந்தி நகர் நாடார் சங்கம், செங்குன்றம் சுற்று வட்டார நாடார்கள் முன்னேற்ற சங்கம், சூளைமேடு நாடார் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், கல்லூரி மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதை போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • நினைவு மண்டபத்தில் உள்ள நாராயகவி உருவசிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி பிறந்தநாளையொட்டி உடுமலை நினைவு மண்டபத்தில் உள்ள நாராயகவி உருவசிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் பூளவாடி கிராமத்தில் கிருஷ்ணசாமி செட்டியார் -முத்தம்மாள் தம்பதியினருக்கு 25.9.1899ம் ஆண்டு மகனாக உடுமலை நாராயணகவி பிறந்தார். பொது உடமை, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கு சிந்தனைகளை பெரியாரிடம் கற்றறிந்தார். விடுதலை போராட்டத்தின்போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் ஆவார்.75 திரைப்படங்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார்.

    தமிழ் திரைப்பட பாடல் உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த உடுமலைநாராயணகவி பகுத்தறிவு கவிஞர் ஆவார். இவரது பாடல்களின் சிறப்பை பாராட்டி22.4.1967 ம் ஆண்டு சங்கீத நாடக சங்கத்தின் சார்பில் சாகித்யா ரத்னா விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

    மேலும் இவர் பாரதிதாசன், பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கவிஞர் கண்ணதாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை முதலான கவிஞர் பெருமக்களுடன் நெருங்கிய நட்புண்டு சிறப்பான பணியை வெளிப்படுத்தினார்.26.6.1944 ல் திருச்சியில் நடைபெற்ற அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தில் இவரது பாடல் இடம் பெற்றது.

    இவர் தமது முதுமை காலத்தில் தனது சொந்த ஊரான பூளவாடி கிராமத்தில் 23.5.1981ல் காலமானார்.இவரது நினைவாக முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் உடுமலை நாராயணகவி மணிமண்டபம் 23.2.2001 அன்று திறந்து வைக்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டைதிடல் அருகில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் உள்ள நாராயணகவியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

    விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் , திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை நகர்மன்றத்தலைவர் மத்தின், உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகாலட்சுமி, அரசு அலுவலர்கள், உடுமலை நாராயண கவியின் வாரிசுதாரர்கள் மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருடன் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
    • உங்கள் பள்ளி வெள்ளி விழா நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே வருகிறேன்.

    சென்னை:

    சென்னை மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 40 பேர் இன்று ஆர்.எஸ்.பி. மற்றும் பேண்டு வாத்தியக் குழு சீருடையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

    அவர்களுடன் பள்ளி தலைமை ஆசிரியை ஜெக ஜோதி, உதவி தலைமை ஆசிரியை சித்ரா ஜெயசீலி, ஆசிரியைகள் ஷீஜா, சுஜாதா, கல்விக்குழு உறுப்பினர் காளியப்பன், மணலி எம்.பாலா, செல்வராஜ சோழன் ஆகியோரும், மாணவிகளுடன் வந்து மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருக்கு மாணவிகள் இனிப்பு வழங்கினார்கள். பின்னர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோருடன் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    அப்போது 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுடன் ஆசிரியைகளும் மாணவிகளும் கலந்துரையாடினார்கள். அப்போது 'அய்யா பா.சிவந்தி ஆதித்தனார் தொடங்கி வைத்த மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட இருக்கிறது.

    இந்த நேரத்தில் பள்ளிக்கு நீங்கள் வருகை தந்தால் பெருமையாக இருக்கும். 1999-ம் ஆண்டு பள்ளியை அய்யா பா.சிவந்தி ஆதித்தனார் திறந்து வைத்த போது இந்த பள்ளி மென்மேலும் வளர்ச்சிப் பெற்று கல்லூரியாக மாற வேண்டும் என்று விரும்பினார். அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நீங்களும் மனது வைத்தால் அது விரைவில் நிறைவேறும்' என்று தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், "உங்கள் பள்ளி வெள்ளி விழா நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே வருகிறேன். அப்போது பள்ளி மைதானம் மற்றும் விளையாட்டுகளுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறேன்" என்று உறுதி அளித்தார்.

    • ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘இ நூலகத்தை’ அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
    • நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து, முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணி மண்டபம் திறக்கப்பட்டது.

    மேலும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டா டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    அரசு சார்பில் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'இ நூலகத்தை' அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    இதில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜன், கல்லூரி நிறுவன செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காயாமொழி ஊர் பொது மக்கள் சார்பாக ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் வரதராஜ ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராமகிருஷ்ணன் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொழில் அதிபர் தண்டு பத்து ஜெயராமன் மகன்களான ரகுராம், சிவராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநில தொழிற் சங்க தலைவர் சரவண குமார், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் உடையார், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், துணை செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், வேல்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ் பெருமாள், துணை செயலாளர் பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
    • தினத்தந்தி பத்திரிகையில் செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர்.

    சங்கரன்கோவில்:

    ம.தி.மு.க. சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பத்திரிகை உலகில் புரட்சி செய்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மகன் டாக்டர் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் தினத்தந்தி பத்திரிகையை பங்களாவாசி முதல் ஏழை, எளிய மக்கள் வரை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியவர்.

    தினத்தந்தி பத்திரிகையில் தமிழக செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், பொருளாதார செய்திகள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் கொடுத்தவர்.

    தந்தி டி.வி.யை உருவாக்கிய சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை சங்கரன்கோவிலில் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வாசுதேவ நல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலை குமார், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு. ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் ரத்ன வேல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

    • சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • ஒன்றிய இளைஞரணி தண்டபாணி நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை கழக பேச்சாளர் இயக்குநர் சக்தி சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்கள்.

    கூட்டத்திற்கு வாடிப் பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கி னார். இதில் சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், மதுரை தெற்கு எஸ்.எஸ். சரவணன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன், மதுரை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, சோழ வந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் குமார் மற்றும் சோழவந்தான், வாடிப்பட்டி தெற்குஒன்றிய நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி தண்டபாணி நன்றி கூறினார்.

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன் இனிப்பு வழங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பகுதியில் பெரியாரின் 145-வதுபிறந்த நாள் விழா கொண்டா டப்பட்டது. குட்லாடம்பட்டி பெரியார் நினைவு சமத்துவ புரம், சந்தை வாசல், தமிழன் லாரி எடை நிலையம் ஆகிய இடங்களில் திராவிட கழகம் சார்பாக நடந்த விழாவிற்கு மாவட்ட காப்பாளர் சு.தனபாலன் தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கினார்.

    உசிலை மாவட்டத் தலைவர் எரிமலை, மேலூர் மாவட்ட செயலாளர் ஜெ.பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் தமிழ்மணி வரவேற்றார். மகளிர் அணி மாவட்ட தலைவர் பாக்கியலட்சுமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன் இனிப்பு வழங்கினார்.

    இதில் தங்கராஜ், அர்ச்சுதன், கண்ணன், சௌந்தரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுத்தறி வாளர் கழகம் மாவட்ட துணை தலைவர் கவிஞர் பொன். கலை தாசன் நன்றி கூறினார்.

    அ.தி.மு.க சார்பாக பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். தி.மு.க. சார்பாக போடி நாயக்கன்பட்டி குப்புசாமி பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வழக்கறிஞர் சந்திரசேகரன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். ஆதித்தமிழர் பேரவை சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்டச் செயலாளர் தமிழ் குமரன் முன்னிலை வகித்தார். தொழிலாளர் அணி மாவட்ட துணைச் செயலாளர் அதியர்பிரிய ன் வரவேற்றார். கலை இலக்கிய பிரிவு மாநிலச் செயலாளர் செல்வ ம் மாலை அணிவித்தார். இதில் முரளி, வீரன், அகத்தியன், முத்து சிவா, ஸ்ரீராம், சிவகுமார், சந்தன மாரி, பழனியம் மாள், பாண்டியம் மாள், கிருஷ்ணா மாள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அகில இந்திய சமாதானம் ஒருமைப்பாட்டு கழக மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட துணை தலைவர் காசிமாயன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி யினர் மரியாதை செலுத்தப் பட்டது. ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய ராமன் தலைமையில் அவைத்தலைவர் சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் அறிவழகன், ஒன்றிய செய லாளர் பெரியபாண்டி செல்லராஜ், ராமகிருஷ் ணன், நகர் செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பி னர்கள் புலிப்பாண்டி, மகேந்திரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உதய ராஜன், எழுமலை காளிதாஸ், டி.கல்லுப்பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், இளைஞர் அணி ஜெய பாலன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    திராவிட கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன், நகர தலைவர் பவுன்ராஜ், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை, மாவட்ட துணை தலைவர் சிங்கராஜ், ஆசிரியர் அணி சுந்தரராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, ஒன்றிய செய லாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் மாரி, மாவட்ட அமைப்பாளர் கருப்பையா, பண்ணை பாண்டி, மகளிர் அணி பாண்டீஸ்வரி ஆகி யோர் மரியாதை செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய சமாதானம் ஒருமைப்பாட்டு கழக மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட துணை தலைவர் காசிமா யன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    ×