என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா
ஆற்காடு:
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஆற்காடு அண்ணா சிலை அருகில் கொட்டும் மழையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழா நடந்தது.
இதில் தமிழில் பேசு பாிசை வெல்லு என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், கவிஞா் ஜெயபாஸ்கரன் தமிழும் தமிழின போரளி எனும் சொற்பொழிவு நிகழ்ச்சினை நடத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட வன்னியர் சங்க தலைவர்.அ.ப. லட்சுமணன் ஆற்காடு நகர செயலாளர் துளசி ரவி வரவேற்று பேசினார்.
சுரேஷ், அ.ப.லட்சு மணன், திருமுருகன், சுரேந்தர்,ஏ.வி.டி. பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் ஞான சௌந்தரி வாழ்த்துரை வழங்கினர்.
இந்த போட்டியில் சுமார் 50 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தூய தமிழில் பேசிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் சரவணன், கவிஞர் பாஸ்கரன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், தென்னை மரக்கன்றுகளையும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம், செல்வி ரமேஷ் , பாஞ்சாலி வெங்கடேசன், மாநில பசுமை தாயகம் துணை செயலாளர் டீ.டி.மகேந்திரன், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய,பா.ம.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இறுதியாக ஆற்காடு நகர மன்ற தலைவர் சஞ்சீவிராயன் நன்றி உரை வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்