search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா
    X

    டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா

    • மாணவ, மாணவிகளுக்கு பரிசு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஆற்காடு அண்ணா சிலை அருகில் கொட்டும் மழையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழா நடந்தது.

    இதில் தமிழில் பேசு பாிசை வெல்லு என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், கவிஞா் ஜெயபாஸ்கரன் தமிழும் தமிழின போரளி எனும் சொற்பொழிவு நிகழ்ச்சினை நடத்தினர்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட வன்னியர் சங்க தலைவர்.அ.ப. லட்சுமணன் ஆற்காடு நகர செயலாளர் துளசி ரவி வரவேற்று பேசினார்.

    சுரேஷ், அ.ப.லட்சு மணன், திருமுருகன், சுரேந்தர்,ஏ.வி.டி. பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் ஞான சௌந்தரி வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த போட்டியில் சுமார் 50 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தூய தமிழில் பேசிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் சரவணன், கவிஞர் பாஸ்கரன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்களை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், தென்னை மரக்கன்றுகளையும் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம், செல்வி ரமேஷ் , பாஞ்சாலி வெங்கடேசன், மாநில பசுமை தாயகம் துணை செயலாளர் டீ.டி.மகேந்திரன், மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய,பா.ம.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இறுதியாக ஆற்காடு நகர மன்ற தலைவர் சஞ்சீவிராயன் நன்றி உரை வழங்கினார்.

    Next Story
    ×