search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்த நாள்"

    • வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.
    • முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது.

    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83- வது பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் கொண்டா ரெட்டியார், ஆன்மிக இயக்க வேள்விக் குழுவின் இணைச்செயலாளர் கோபி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தணிக்கை குழு இணைச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணைத்தலைவர் மன்மதன் அனைவரையும் வரவேற்றார். மறைமலை நகரில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது. 7 மணி அளவில் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் காலை 7:30 மணிக்கு மறைமலை நகரில் உள்ள உதவும் உள்ளங்கள் இல்ல குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு சக்தி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது முன்னாள் நகர மன்ற தலைவர் கோபி கண்ணன் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.

    காலை 9 மணிக்கு உலக நன்மைக்காகவும்,இயற்கை வளம் பெறவும், மழை வளம் வேண்டியும் நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு மறைமலைநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 20 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிதிவண்டிகளும்,13 மகளிர்களுக்கு தையல் இயந்திரங்களும்,13 சலவைப் பெட்டிகள், 15 பயிர் பூச்சி மருந்து தெளிப்பான்கள், 6 விவசாய கருவிகள் 200 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை மறைமலை நகர் நகர மன்ற தலைவர் சண்முகம் கலந்து கொண்டு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • செல்லம்பட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
    • பொருளாளர் ஒச்சு மற்றும் வினோத், முல்லை மூவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

    கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்த லின்படி செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமத்துவபுரம், புள்ளநேரி, கண்ணனூர், கருமாத்தூர், கோவி லாங்குளம், செல்லம்பட்டி, முண்டு வேலம்பட்டி, வாலாந்தூர், குப்பணம் பட்டி, ஈச்சம்பட்டி, தும்மக் குண்டு பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து ஒன்றிய செயலாளர் முத்து ராமன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் அவைத்தலைவர் அம்மாவாசி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் காசி, ராமேஸ்வரி, ராஜீ, மாவட்ட பிரதிநிதிகள் செல்லப்பாண்டி, நீதி, பவுன்சாமி, ஒன்றிய பொருளாளர் ஒச்சு மற்றும் வினோத், முல்லை மூவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    • சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க., பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜைகள் செய்தும் நலத்திட்ட உதவிகள் அன்னதானம், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் அவைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பகுதி செயலாளர் கண்ணப்பன் ஏற்பாட்டின் பெயரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு பட்டத்தரசி அம்மன் கோவிலில்ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு டேபிள் மற்றும் சேர் வழங்குதல் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து திருமுருகன் பூண்டி,பெரி யாயிபாளையம், சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கவுன்சிலர் கண்ணப்பன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீத சந்திரசேகர், பகுதி செயலாளர் கருணாகரன், ஹரிஹரசுதன், கே.பி.ஜி. மகேஷ்ராம், கேசவன், குமார், தொழிற்சங்க செயலாளர் கண்ண பிரான், வக்கீல் அணி செய லாளர் முருகேசன், நிர்வாகிகள் உஷா ரவிக்குமார், ஆண்டவர் பழனிச்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பதி நகரம் தனது 893-வது பிறந்தநாளை இம்மாதம் 24-ந் தேதி கொண்டாடத் தயாராகி வருகிறது.
    • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 மாட வீதிகளில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    கலியுகத்தின் வெளிப்பாடாக திருமலை மலையில் அவதரித்த ஏழுமலையான் சாமியின் பாத பீடம் என அழைக்கப்படும் திருப்பதிக்கு பல நூற்றாண்டுகளின் வரலாறு உண்டு.

    திருமலையின் ஆகமத்தின் பணிகளை இயக்கிய ராமானுஜாச்சாரியார் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பதி நகரத்தை தோற்றுவித்தார் என்று வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, திருப்பதி நகரம் தனது 893-வது பிறந்தநாளை இம்மாதம் 24-ந் தேதி கொண்டாடத் தயாராகி வருகிறது.

    ஸ்ரீ லக்ஷ்மி தேவியைத் தேடி வைகுண்டத்தை விட்டு பூமியை அடைந்த ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீநிவாஸர் என்ற பெயரில் ஆதிவராஹ ஸ்தலமான திருமலை மலைக்குச் சென்று ஸ்ரீ ஏழுமலையானை வழிபட்டார் என்பது அனைவரும் அறிந்த புராணங்கள். கலியுகத்தின் ஆரம்பம் முதல் இன்று வரை அனைத்து நித்ய சேவை கைங்கர்யங்களும் பரம்பரை வைகானச ஆகமத்தின்படி நடந்து வருகின்றன.

    ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருமலையில் பல்வேறு வகையான திருவிழாக்கள் தெளிவற்ற நடைமுறைகளுடன் நடந்தது.

    அந்தந்த வம்சங்கள் ராமானுஜச்சாரியார் 11-ம் நூற்றாண்டில் தனது வாழ்நாளில் 3 முறை திருமலைக்கு வந்து கருவறையில் காணப்படும் அசல் தன்மை குறித்த சந்தேகங்களைப் போக்கினார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் திருமலை மூலமூர்த்திக்கு சங்குச்சக்கரங்களைக் காணிக்கையாகக் கொடுத்து, ஸ்தல லட்சுமியை பிரதிஷ்டை செய்து, ஸ்ரீ மஹாவிஷ்ணு தசாவதார ரூபம் என்று அறிவித்தார். திருமலை கோவிலின் நித்ய பூஜைகள், கைங்கர்ய நடைமுறைகளை பரம்பரையாக ஆகம விதிகளின்படி மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த வழக்கமான பூஜைகளின் பொறுப்புகளை கண்காணிக்க பஞ்சராத்ர துணை ஜீயர் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த நேரத்தில், ஏழுமலையான் கோவில் பகுதி வனப்பகுதியாக இருந்தது, அங்கு வழக்கமான சேவைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற்றன. கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன்பின், கோவிலின் நான்கு புறமும் மாடவீதிகள், அர்ச்சகர்கள் குடியிருப்புகள், ஜீயரைக் கொண்டு கட்டப்பட்டது. கோவிந்தப்பட்டினம் என்ற பெயரில் மடங்கள் மற்றும் மக்கள்தொகை விரிவாக்கம் தொடங்கியது.

    அவ்வாறு உருவான கோவிந்தப்பட்டினம், திருமலை அடிவாரத்தில் உள்ள கபிலதீர்த்தம் அருகே ஏற்கனவே மறைந்துவிட்ட கோத்தூர் என்ற கிராமப் பகுதி வரை நீண்டு, தற்போதைய திருப்பதி நகரம் உருவாகக் காரணமாக இருந்தது.

    கோவிந்தராஜர் கோவில் வளாகத்தில் காணப்படும் பல கல்வெட்டுகள் மூலம் இந்த வரலாறு வெளிப்படுகிறது. தற்போதைய திருப்பதி நகரத்தை ராமானுஜாச்சாரியார் 1130-ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று நிறுவினார் என்பதை அந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

    இதற்கு சாட்சியாக கோவிந்தராஜசுவாமி கோவிலில் பரம்பரை பரம்பரையாக நடைபெறும் நித்ய பூஜை நடவடிக்கைகளில் அன்றைய தேதி தொடர்பான வருட, திதி, வார, நட்சத்திரங்களை வைத்து அர்ச்சகர்கள் தீர்மானம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகப் புகழ் பெற்ற திருப்பதி நகரம் திருமலையின் பாத பீடமாகத் திகழ்கிறது. அதன் தோற்றத்தின் விழாவின் ஒரு பகுதியாக, நகர மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 மாட வீதிகளில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் திருப்பதி மாநகராட்சி சார்பில் வண்ண மின் விளக்குகள் மற்றும் தோரணங்கள் மூலம் அழகுபடுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகள் அமைத்து தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கவேலு, பரமகுரு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன் தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், மார்ச் 1- ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாக கொண்டாட வேண்டும், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகள் அமைத்து தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்குவது, காச நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, ரத்ததானம் வழங்குவது,மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குவது, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள், மாற்றுத்திற னாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றிய செய லாளர்கள் பெரியதுரை, மதி மாரிமுத்து, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமிபாண்டியன், தேவா , வெள்ளத்துரை, சாகுல் ஹமீது, சங்கரன்கோவில் மாரிசாமி, பராசக்தி, மாரிசாமி, மகேஸ்வரி, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா , பேரூர் செயலாளர்கள் சிவகிரி டாக்டர் செண்பக விநாயகம், ராயகிரி குருசாமி, வாசுதேவநல்லூர் ரூபிபாலசுப்பிரமணியன், திருவேங்கடம் மாரிமுத்து, பேரூராட்சி தலைவர்கள் சிவகிரி கோமதிசங்கரி, ராயகிரி இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பிறந்த நாள் விழா ஆழ்வார்திருநகரியில் கொண்டாடப்பட்டது.
    • பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. ஆழ்வை பேரூர் தி.மு.க. செயலாளர் கோபிநாத், பேரூராட்சி துணைத் தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் பேரூர் செயலாளர் முத்துராமலிங்கம், கவுன்சிலர்கள் ராஜலட்சுமி, ஹஜராபேகம், மந்திரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜாஜியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினர்.

    ஓசூர்,

    மூதறிஞர் ராஜாஜியின் 144 -வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் அவரது இல்லத்தில் உள்ள உருவச்சிலைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ சத்யா, ஒசூர் உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் ராஜாஜியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினர்.

    அதேபோல், ராஜாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சீடரும்,'முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் தற்போது தி.மு.க வின் மூத்த பிரமுகருமான பி.வெங்கடசாமி, தனது 87 வயதிலும், தள்ளாடிய நிலையில் கையில் ஊன்றுகோலுடன் ராஜாஜியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    மேலும் விழாவில், துணை மேயர் ஆனந்தய்யா,மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் மோகன், ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி,, தொரப்பள்ளி ஊராட்சி தலைவர் சாந்தம்மா, ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலத்தில் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
    • விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    திருமங்கலம்

    தி.மு.க. மாநில இளைஞ ரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் முன்சீப் கோர்ட்டு சாலையில் ராஜாஜி தெரு சந்திப்பில் 45 கிலோ கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடினர். விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத் தலை வர் நாகராஜன், நகர அவைதலைவர் சேட், துணைச் செயலாளர் செல்வம், வழக்கறிஞர்கள் தங்கச்சாமி, தங்கேஸ்வரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், காசி பாண்டி, ரம்ஜான் பேகம், வினோத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
    • 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    அ.ம.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சி.சண்முகவேலு சிறப்புரையாற்றினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி சிறப்பித்து பேசினார். டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    டி.டி.வி. தினகரன் பிறந்தநாளான வருகிற 13-ந் தேதி காலை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிக்கம்பங்கள் அமைத்து கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்தார்கள். பிறந்தநாளன்று காலை பெரிபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில் காலையில் பூஜை நடத்தப்பட்டு 13 பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்க வேண்டும். மதியம் 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சுற்றுச்சூழல் பிரிவு சார்பில் 1,500 பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் மராத்தான் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என மாபெரும் மக்கள் எழுச்சி நாளாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பாலுசாமி, மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் கிங், துணை செயலாளர் கீதா, பொருளாளர் சேகர், நிர்வாகி புல்லட் ரவி, அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் இறைவெங்கடேஷ், அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் கலியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் வீர.கந்தசாமி, ராஜாங்கம், ஜெகதீஷ், நூல்கடை சிவக்குமார், நெருப்பெரிச்சல் நிர்வாகி கந்தசாமி, பாண்டியன் நகர் பகுதி இணை செயலாளர் ஷீபா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    • இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது.
    • இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது.

    இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) இன்று கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும்.

    இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. காந்தி ஜெயந்தி அன்று புதுடெல்லயில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை மகாத்மா ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

    • காந்தியவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி நிகழ்ச்சியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர்.
    • கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர் பரிசு.

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன்படி, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, காந்தியவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி நிகழ்ச்சியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து, இன்று மாலை கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர் பரிசு வழங்குகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சி.பா.ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    'தினத்தந்தி' பத்திரிகை நிறுவனர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதைமுன்னிட்டு, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் அவரது சிலைக்கு கீழே உள்ள உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், 'தினத்தந்தி' குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இவர்களை தவிர, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சி.பா.ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    ×