search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dinathanthi"

    • டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    அவரது 11-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.


    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன், சம்யுக்தா ஆதித்தன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.


    தெலுங்கானா, புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னரும், தென்சென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான டாக்டர் தமிழிசை, அவரது கணவர் சவுந்தரராஜனுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-


    தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட துணை அமைப்பாளர் கோ.சு.கருணாநிதி, நிர்வாகிகள் வேம்பங்குடி நடராஜன், ஆனந்தராஜ், ஏ.எஸ்.மகேந்திரன், சரவணன், தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள்காந்த்.

    அ.தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர்மன்னன் மற்றும் சுரேஷ், வர்த்தகர் அணி துணை செயலாளர் பெருங்குடி வேல்ஆதித்தன், வடசென்னை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஆர்.சி.பால்கனகராஜ், பா. ஜனதா மாநில செயலாளர் சதீஷ்குமார், செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், தமிழக காங்கிரஸ் கே.கே.நகர் பகுதி தலைவர் சரவணன் பால்ராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில நிர்வாகிகள் ஆர்.எஸ்.முத்து, சென்னை நந்து, முனவர் பாஷா, தி.நகர் கோதண்டன், சைதை நாகராஜ், மாவட்ட தலைவர் சைதை மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிட பொறுப்பா ளர்கள் செல்லத்துரை, இரா.செல்வம், முனியன், ராஜேந்திரன் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., துணை பொதுச் செயலாளர் காமராஜ், மாநில செயலாளர் ஊரப்பாக்கம் குட்டி, துணை செயலாளர் ஏகாம்பரம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் ஆர்.சிவகுமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், உயர்மட்டக்குழு உறுப்பினர் டி.உதயகுமார், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.வைகுண்டராஜா, தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார், தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஆர்.பாலமுருகன், பொருளாளர் டி.ராஜ் நாடார், தென்சென்னை வடக்கு மாவட்டத் தலைவர் ராஜசுதாகர், செயலாளர் ஈகை டி.விஜயன், பொருளாளர் நடராஜன், மாவட்ட அமைப்பாளர் முருகன், வழக்கறிஞர் அருணா செல்லக்கனி, மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் புரசை சி.நாகராஜ், தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ. பாலமுருகன், விருகம்பாக்கம் தொகுதி தலைவர் கே.மணிராஜ், அண்ணா நகர் தொகுதி தலைவர் செல்வராஜ், தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சுயம்புலிங்கம், தென் சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் உத்திர குமார், எம்.பாலகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


    இதே போன்று சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மாநில பொருளாளர் கண்ணன், வடசென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வார்டு பாஸ்கர், நாடார் பேரவை வட சென்னை மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் சாமுவேல், சமத்துவ மக்கள் கழக ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் கவுதம், ஆர்.கே.நகர் பகுதி இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், 50-வது வட்ட செயலாளர் சர்புதீன், நாடார் பேரவை ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் பாக்யராஜ், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக பொதுச் செயலாளர் முத்து ராமன் சிங்கபெருமாள், அகில இந்திய காந்தி காமராஜர் காங்கிரஸ் மாநில தலைவர் மணியரசன், மாங்காடு பெருந்தலைவர் காமராஜ் நலச்சங்க தலைவர் ராமபாண்டி நாடார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்த்ராஜ், நிர்வாகிகள் ராம்ஜி, ஜெயக்குமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மின்னல் ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ் நாடார், பொதுச்செயலாளர் வீரக்குமார், பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் டி.ராஜ்குமார், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம், போரூர் நாடார் சங்க செயலாளர் ஜெயக்குமார், இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன், பொருளாளர் சிவக்குமார், கவுரவ ஆலோசகர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் செல்வக்குமார், ரவிராஜன், எட்வர்ட்ராஜா, திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க சென்னை சேர்மன் வி.செல்வராஜ், இயக்குனர் அன்புசெழியன், சென்னை வாழ் சூலப்புரம் நாடார் சங்க செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் பரமசிவம், ராம கிருஷ்ணன், கேசவன், செல்லபாண்டியன், கெருகம்பாக்கம் நாடார் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    நாடார் மகாஜன சங்க இணை செயலாளர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, மண்டல தலைவர் பிரபாகரன், மாவட்ட தலைவர் தங்கம் நாடார், செயலாளர் சந்திர மோகன், பொருளாளர் தமிழ்செல்வன், அயன்புரம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் பிரபாகரன், பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாஸ்கர், தமிழ்நாடு நாடார் சங்க இளைஞரணி தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் சிவஜோதிராஜ், பொருளாளர் ராமமூர்த்தி, தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் விஜய குமார், பொருளாளர் மெல்வின், இணை செயலாளர் மார்க்கெட் ராஜா, துணை தலைவர் செந்தில், இ.சி.ஆர்.நாடார் சங்க தலைவர் கொட்டிவாக்கம் முருகன், நாடார் மறுமலர்ச்சி இயக்க தலைவர் பால முருகன், சென்னை வாழ் பசுவந்தனை நாடார் உறவின் சங்க தலைவர் எத்திராஜ், செயலாளர் செல்லகுமார், திருவான்மியூர் நாடார் பேரவை மத்திய மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் சுபாஷ், கே.கே.நகர் நாடார் சங்க தலைவர் நாகராஜன், ஷாம், பூந்தமல்லி ஐக்கிய நாடார் சங்க தலைவர் ஆர்.சுரேஷ், நசரத்பேட்டை நாடார் சங்க தலைவர் முருகன், பூவை ராம்ராஜ் நாடார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழ்நாடு சத்திரிய நாடார் சங்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், பொதுச் செயலாளர் மாரித் தங்கம், நிர்வாகிகள் காமராஜ், மாரிமுத்து, நாகராஜன், நடராஜன், ஜெகநாதன், பெரம்பூர் வட்டார நாடார் சங்க தலைவர் த.பத்மநாபன், துணைத் தலைவர் கே.மனோகரன், செயலாளர் செல்வம், பொருளாளர் தர்மேந்திரன், பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் டி.பி.செல்வராஜ், செயலாளர் அருணாசல மூர்த்தி, பொருளாளர் ஜெயராஜ், ஆலோசகர்கள் வெள்ளைசாமி, ஆசீர்வாதம் தெட்சணமாற ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை வாழ் போடுபட்டி நாடார் உறவின்முறை தலைவர் ஏ.எம்.சின்னா நாடார், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பால்ராஜ், பொன்னுசாமி, சென்னை வாழ் துறையூர் நாடார் உறவின் முறை தலைவர் கே.ஏ.குருசாமி நாடார், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் செல்லத்துரை, தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் கே.செந்தூர்செல்வம் நாடார், ஒன்றிய இளைஞரணி தலைவர் பட்டுகணேசன், ஜெபஸ்டின் கண்ணன், அகில இந்திய நாடார் கூட்டமைப்பு மாநில தலைவர் காண்டீபன்.


     சினிமா ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் ராஜேந்திரநாத், இமான் அண்ணாச்சி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீஷ் சவுந்தர்முருகன், துணை செயலாளர் பால முனியப்பன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பத்திரப் பதிவு துறை முன்னாள் டி.ஐ.ஜி. ஏ.ஆறுமுக நயினார், காயல் ஆர்.எஸ்.இளவரசு, ஏ.கணேசா, அயன்புரம் நற்பணி மன்ற தலைவர் ஜெகதீஷ், செயலாளர் சந்திரசேகர், நிர்வாகிகள் சச்சிதானந்தம், பாலமுருகன், பார்வதி, ஜெகதீஸ்வரராஜ், செங்குட்டுவன், அருண்பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    நெல்லை மாவட்ட நற்பணி மன்ற துணை செயலாளர் செல்லத்துரை, திருவொற்றியூர் மன்றம் டி.முல்லைராஜா, பிரைட்டன், திருச்சி மாவட்டம் அணியாப்பூர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், சந்தைப்பேட்டை மன்ற செயலாளர் காமராஜ், முன்னாள் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், தேவி செல்வம், தினேஷ், திவாகர், மும்பை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொதுச் செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் பொன்னு நாடார், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பெனியல் நாடார், செல்வன் நாடார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை எம்.மாரித்தங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, செய்தித் தொடர்பாளர் பாண்டியராஜ், துணைச் செயலாளர் வி.பி.மணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.


    சிம்ம பேரவை நிறுவன தலைவர் ராவணன் ராம சாமி நாடார், தென்சென்னை மாவட்ட தலைவர் ராமர் நாடார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்து நாடார், நிர்வாகிகள் விஜயகுமார், பிரதீப்குமார், நேதாஜி இளைஞர் முன்னேற்றப்படை ராஜேஷ், கலாம் காமராஜர் கக்கன் அறக்கட்டளை வேல்முருகன், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமராஜன், வக்கீல் பாக்யராஜ், முருகன் தியேட்டர் பாலு, காயல்பட்டினம் சதக் அப்துல்லா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் இந்திய கைப்பந்து சம்மேளன செயலாளர் முருகன், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக செயலாளர்கள் மார்ட்டின், சுதாகர், துணைத் தலைவர் ஆதித்தன், பீச் வாலிபால் கன்வீனர் பிரபாகரன், சர்வதேச கைப்பந்து விளையாட்டு வீரர்கள் பாலாஜி, பிரதீப்ஜான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    இதே போன்று தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, சென்னை மண்டல தலைவர் அருணாச்சல மூர்த்தி, கே.குழந்தைவேல், எம்.பி.ரமேஷ், சுவைராஜா, ஜெயக்குமார், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், நிர்வாகிகள் துரை, பிரகாஷ், பழக்கடை சுரேஷ், சுப்பிரமணியன், ஜோசப், ஆண்டனி பீட்டர், தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை தலைவர் ஜோதிகுமார், மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சந்திரமோகன், தலைமை ஆசிரியை ஜெகஜோதி ஆகியோர் தலைமையில் பள்ளியின் சாலை பாதுகாப்பு படை மாணவிகள், இசை வாத்திய குழுவினருடன் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    பள்ளி நிர்வாகிகள் தங்கம், காளியப்பன், பாண்டியன், செல்வராஜ், சோழன், தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் சித்ரா ஜெயசீலி, ஸ்ரீஜா, பிரமிளா, சுஜாதா, சேதுராமன் ஆகி யோர் அஞ்சலி செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் மரியாதை.
    • அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி மரியாதை.

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சி.பா.ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    'தினத்தந்தி' பத்திரிகை நிறுவனர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதைமுன்னிட்டு, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் அவரது சிலைக்கு கீழே உள்ள உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், 'தினத்தந்தி' குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இவர்களை தவிர, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சி.பா.ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    ×