search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்த நாள்"

    • ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
    • கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்–கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.


    கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.

    இன்றும் ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பர்ண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கந்தர்வகோட்டை ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. இளைஞ ரணி அமைப்பா ளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
    • , தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலைக்கு மா லை அணிவித்தும்,பொது மக்க ளுக்கும் தொண்டர்க ளுக்கும் இனிப்புகள் வழங்கி யும் கொண்டாடினர்.

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டை ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. இளைஞ ரணி அமைப்பா ளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி கந்தர்வ கோட்டை காந்தி சிலை| பேருந்து நிலையம் மற்றும் புதுகை சாலையில் கட்சி கொடி ஏற்றியும்,வெடி வெ டித்தும் , தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலைக்கு மா லை அணிவித்தும்,பொது மக்க ளுக்கும் தொண்டர்க ளுக்கும் இனிப்புகள் வழங்கி யும் கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பரம சிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, தி.மு.க. மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தவசு மணி, நகரச் செயலாளர் ராஜா, ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், பழைய கந்தர்வ கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மெய்குடி பட்டி முருகேசன் ,

    ஒன்றிய குழு உறுப்பி னர்கள் பாரதி பிரியா அய்யாதுரை, திருப்பதி, இளைஞர் அணி அமைப்பா ளர் கலையரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மரியாதை
    • கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கல் ராஜீவ் ஜங்சனில் இந்திரா காந்தியின் 106-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஆசீர்பிரைட் சிங், குமார், சுனில்குமார், ஊராட்சி பேரூராட்சி காங் கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ், ஜெஸ்டின், ராஜகிளன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி குழந்தைகளுக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.
    • காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134 -வது பிறந்த நாள் விழா கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் சந்திப்பில் நடைபெற்றது.

    கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், பேரூர் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜேஷ்குமார், கிள்ளியூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் டிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் மற்றும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மரிய அருள் தாஸ், கிளன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • உலக சாதனை படைத்தார்
    • முகாமில் வேலை வாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொது மருத்துவம், பெண்களுக்கான சிகிச்சை,

    என். ஜி. ஓ. காலனி :

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73- வது பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தலைமையில் நாகர்கோவில் அருகே உள்ள முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதமர் மோடி கொண்டு வந்த 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் உலக சாதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    முகாமில் வேலை வாய்ப்பு, மருத்துவம், சிறுதானிய உணவுகள், கண் சிகிச்சை, பொது மருத்துவம், பெண்க ளுக்கான மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீடு அட்டை பெற நடவடிக்கை, பான் கார்டு பெற நடவடிக்கை, விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட் கள் கிடைக்க நடவடிக்கை, விவசாயம் செய்ய விவசாய நிலத்தின் மண் பரிசோதனை, இலவச கியாஸ் இணைப்பு பெறாதவர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு பெற்று தருதல், இலவச வீடு கிடைக்காதவர்களுக்கு இலவச வீடு பெற்று தர ஏற்பாடு செய்தல், இஸ்லாமிய பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், மீனவர்களுக் கான முத்ரா கடன் திட்டம், மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டம் உள்ளிட்ட பாரதபிரதமர் மோடியின் 73 திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பொது மக்களின் பார்வைக்காக மத்திய அரசின் நலத்திட்டங் களை பிரதிபலிக்கும் வகை யிலான 73 ஸ்டால் வைக்கப்பட்டு அதன் மூலம் பொது மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தான ஆலோசனையும் வழங்கப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வினை அமெரிக்காவில் இருந்து கிறிஸ்டோபர் என்பவர் வேர்ல்ட் ரிக்கார்ட் யூனியன் என்ற புத்தகத்தில் பதிவு செய்ய நேரில் பார்வையிட்டு மேலும் பிரதமர் மோடியின் 73 திட்டங்களை ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு வழங்கி யமைக்காக நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான் அய்யப்பனுக்கு உலக சாதனை படைத்தமைக்காக உள்ள சான்றிதழையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு குமரி மாவட்ட துணைத்தலைவர் எஸ். ஜெயக்குமார், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் ஜெகநாதன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் மாவட்ட தலை வர்கள் கணேசன், முத்து கிருஷ்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் முரளி மனோ கர்லால், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ், மாநகராட்சி மாமன்ற உறுப்பி னர்கள் வீரசூரபெருமாள், சதீஷ், ஆட்சியம்மாள், தேரூர் பேரூராட்சி துணைத் தலைவர் மாதவன்பிள்ளை, மாவட்ட தொழில் பிரிவு தலைவர் டாக்டர் மோகன்ராஜ், பா.ஜ.க. முன்னாள் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செய லாளர் ரூபின், அகஸ்தீஸ்வரம் வடக்கு மண்டல தலைவர் சுயம்பு, முகிலன்விளை மிசா. ரெத்தினஜோதி, பா.ஜ.க. மாநில பொருளாதாரப் பிரிவு செயலாளர் பார்வதி விஜயகுமார், அக்ரி சிவா, மற்றும் பயனாளிகள், பொது மக்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நாகர்கோவில் :

    தந்தை பெரியார் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் கேட்சன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், அணி அமைப்பாளர்கள் இ.என். சங்கர், அருண் காந்த் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவைத் தலைவர் சேவியர் மனோகரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் மற்றும் வடிவை மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன், அந்தோணி ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்தரசன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • தருமபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.பி வெங்கடேஸ்வரன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
    • தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பசுமை தாயகம் சார்பில் இன்று 5000 மரக்கன்றுகள் நடப்படுகிறது.

    தொப்பூர்,

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளான இன்று (25-ந் தேதி) பசுமை தாயக தினமாகவும், மரக்கன்றுகள் நடும் நாளாகவும் பா.ம.க.வினர் மற்றும் பசுமை தாயக அமைப்பினரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தருமபுரி பா.ம.க. எம்.எல்.ஏ. எஸ்.பி வெங்கடேஸ்வரன் சாமிசெட்டிபட்டி கிராமத்தில் இன்று அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    அப்போது எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகலஹள்ளி ஊராட்சி சவுளூர் ஏரிக்கரையில் 20 வகையான பறவைகளுக்கு பலன் தரக்கூடிய மற்றும் நிழல் தரக்கூடிய 500 மரக்கன்றுகள் மற்றும் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யபட்டது. தருமபுரி மேற்கு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பசுமை தாயகம் சார்பில் இன்று 5000 மரக்கன்றுகள் நடப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், பசுமை தாயக மாநில துணைசெயலாளர் மாது, மாவட்ட துணை செயலாளர்கள் தமிழரசன், சரவணன், தங்கதுரை, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, வெங்கடேஷ், முத்துகுமார், ராமசந்திரன், பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் அறிவு, ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் காமராஜ், பச்சாக்கவுண்டர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

    • கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளன.
    • முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது 2023-24-ம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஆகஸ்ட் 2-ந்தேதி அன்றும், கலைஞர் பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 4-ந்தேதி அன்றும் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் காலை 9.30 மணியளவில் நடை பெற உள்ளன.

    பேச்சு போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாண வர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் வாயிலா கவும் தெரிவிக்கப்படும்.

    கல்லூரி போட்டியில் வெற்றிபெறும் மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாண வர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இவ்விழாவில் பள்ளி மழலைகள் காமராஜர் போல் வேடம் அணிந்து கல்வி கண் திறந்த காம ராசரை பெருமைப்படுத்தினர்.
    • இவ்விழாவை சிறப்பிக்க கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் பட்டிமன்றத்தின் நடுவராக தலைமை தாங்கினார்.

    மொரப்பூர், 

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர், ஸ்ரீராம் பப்ளிக் பள்ளியில் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    வள்ளுவர் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் காமராஜரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் பள்ளி இயக்குநர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.

    மேலும் இவ்விழாவை சிறப்பிக்க கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ் பட்டிமன்றத்தின் நடுவராக தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் வெற்றிவேல் செல்வம் நன்றி கூறினார்.

    பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், ஏஞ்சலீனா, உமா தேவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் பள்ளி மழலைகள் காமராஜர் போல் வேடம் அணிந்து கல்வி கண் திறந்த காமராசரை பெருமைப்படுத்தினர். மேலும் பள்ளியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர், இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

    • மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    மத்தூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி தந்தை கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேன் தலைமையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதையடுத்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் மாவட்டத்தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட அவைத் தலைவர் முத்து பெருமாள், மாநில தூதுவர் அருள்மணி, தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்டத் தலைவர் கேபில் குமார், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் சந்தோஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.
    • முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது.

    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83- வது பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் வேள்வி பூஜை கடந்த இரண்டு நாட்களாக மறைமலை நகரில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் கொண்டா ரெட்டியார், ஆன்மிக இயக்க வேள்விக் குழுவின் இணைச்செயலாளர் கோபி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தணிக்கை குழு இணைச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணைத்தலைவர் மன்மதன் அனைவரையும் வரவேற்றார். மறைமலை நகரில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் விழா தொடங்கியது. 7 மணி அளவில் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் காலை 7:30 மணிக்கு மறைமலை நகரில் உள்ள உதவும் உள்ளங்கள் இல்ல குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு சக்தி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடை பெற்றது முன்னாள் நகர மன்ற தலைவர் கோபி கண்ணன் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.

    காலை 9 மணிக்கு உலக நன்மைக்காகவும்,இயற்கை வளம் பெறவும், மழை வளம் வேண்டியும் நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு மறைமலைநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 20 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிதிவண்டிகளும்,13 மகளிர்களுக்கு தையல் இயந்திரங்களும்,13 சலவைப் பெட்டிகள், 15 பயிர் பூச்சி மருந்து தெளிப்பான்கள், 6 விவசாய கருவிகள் 200 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை மறைமலை நகர் நகர மன்ற தலைவர் சண்முகம் கலந்து கொண்டு வழங்கினார். இதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • செல்லம்பட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
    • பொருளாளர் ஒச்சு மற்றும் வினோத், முல்லை மூவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

    கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்த லின்படி செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமத்துவபுரம், புள்ளநேரி, கண்ணனூர், கருமாத்தூர், கோவி லாங்குளம், செல்லம்பட்டி, முண்டு வேலம்பட்டி, வாலாந்தூர், குப்பணம் பட்டி, ஈச்சம்பட்டி, தும்மக் குண்டு பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து ஒன்றிய செயலாளர் முத்து ராமன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் அவைத்தலைவர் அம்மாவாசி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் காசி, ராமேஸ்வரி, ராஜீ, மாவட்ட பிரதிநிதிகள் செல்லப்பாண்டி, நீதி, பவுன்சாமி, ஒன்றிய பொருளாளர் ஒச்சு மற்றும் வினோத், முல்லை மூவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×