search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூரில்  காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா
    X

     மத்தூர் பேருந்து நிலையத்தில் காமராஜரின் உருவச்சிலைக்கு நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

    மத்தூரில் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா

    • மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி தந்தை கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேன் தலைமையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதையடுத்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் மாவட்டத்தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட அவைத் தலைவர் முத்து பெருமாள், மாநில தூதுவர் அருள்மணி, தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்டத் தலைவர் கேபில் குமார், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் சந்தோஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×