search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரார்த்தனை"

    • இன்று ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு திருச்சி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
    • இயேசு கிறிஸ்து சிலு–வைப்பாடுகள் அனுபவித்து மரித்து உயிரோடு எழுந்த காலத்தை உலகம் முழு–வதும் மக்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பி–டிப்பார்கள்.

    திருச்சி:

    சுமார் 2,000 ஆண்டுக–ளுக்கு முன்பு பாவத்திலிருந்து மனுக்குலத்தை மீட்டு மன்னித்து ரட்சிக்க வந்த இறைமகன் இயேசு கிறிஸ் துவை யூதர்கள் அவர் மீது பொய் குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொன்றனர். 3 நாட்கள் கல்ல–றையில் வைக்கப்பட்ட அவர் 3-ம் நாள் கல்லறை–யிலிருந்து உயிர்ப்பித்து எழுந்தார்.இயேசு கிறிஸ்து சிலு–வைப்பாடுகள் அனுபவித்து மரித்து உயிரோடு எழுந்த காலத்தை உலகம் முழு–வதும் மக்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பி–டிப்பார்கள்.

    அதன் பிறகு இயேசு சிலுவை–யில் அறையபட்ட வெள் ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் கல்ல–றையிலிருந்து உயி–ரோடு எழுந்த நாளான ஞாயிற்றுகிழமையை ஈஸ்டர் திருநாளாகவும் கடை–பிடித்து வருகிறார்கள்.இன்று ஞாயிற்றுக்கி–ழமை ஈஸ்டர் பண்டிகையை–யொட்டி நள்ளிரவு முதல் திருச்சி மாவட்டம் முழு–வதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து–கொண்டு இயேசு உயிர்த்தெ–ழுந்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

    சிறப்பு பிரார்த்தனையிலும் பங் கேற்றனர்.திருச்சி பாலக்கரை பசிலிக்கா, மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயம், ஜோசப் சர்ச், புத்தூர் பாத்திமா ஆலயம், கருமண்ட–பம் மாற்கு ஆலயம், குணமளிக்கும் மாதா ஆலயம், ஆரோக்கிய மாதா ஆலயம், அமலா ஆசிரமம் மற்றும் திருவெறும்பூர், மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி, மணிகண்டம் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள தேவா–லயங்களிலும் ஆயிரக்க–ணக்கான மக்கள் பிரார்த்த–னையில் கலந்து கொண்டு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.

    பல்வேறு கிறிஸ்தவ தேவால–யங்களில் இயேசு மீண்டும் உயிர்த்தெ–ழுந்த காட்சி தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தது.இயேசு உயிர்த்தெழுந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு இனிப்புகள் வழங்கினர். இயேசு உயிர்த்தெழுந்த நேரம் வந்ததும் வானில் வெடி வெடித்து மகிழ்ந்த–னர். இயேசு கிறிஸ்து இன்றும் உயிரோடு ஜீவிக்கி–றார். அவர் அவரை ஏற்றுக்கொண்டு மனம்தி–ரும்பி வரும் பாவிகள் அனை–வரையும் மன்னித்து புது–வாழ்வு அளிக்க வல்ல–வராக இருக்கிறார்.

    எனவே அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டு பாவம் செய்யாமல், பிற–ருக்கு உதவி செய்து இயேசு கிறிஸ்து கூறிய தத்து–வங்களை கடைபிடித்து வாழ வேண்டும். அப்போது இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பிறப்பார். நமக்கு பல ஆசீர்வாதங்களை தருவார், அற்புதங்களை நடத்துவார் என ஈஸ்டர் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.திருச்சியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து–கொண்டு ஒருவருக்கொ–ருவர் வாழ்த்துக்களை தெரி–வித்துக்கொண்டனர்.


    • கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டார்
    • அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி

    நாகர்கோவில், ஏப். 9-

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.

    அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இத்தகைய தினம் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாளாகும். இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நேற்று இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டார்.பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி திருப்பலி நிறைவேற்றினார். அப்போது அங்கிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இயேசு வாழ்த்து பாடினார்.நாகர்கோவில் அசிசி ஆலயத்தில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி புனித அலங்கார உபகர மாதா ஆலயம் குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துவ அரசர் ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று காலை நடந்த பிரார்த்தனையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்கள்.

    இதையடுத்து கடற்கரை கிராமங்கள் களை கட்டி இருந்தது. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை அனைத்து மீனவ கிராமங்களிலும் ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    • சிறப்பு மன்றாட்டுக்கள், திருச்சிலுவை ஆராதனை செய்யும் சடங்கு நடைபெற்றது.
    • எரியும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி ஜெபித்து கொண்டு சென்றனர்.

    தஞ்சாவூர்:

    கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும்.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து இயேசு சிலுவையில் உயிர் விட்ட நாளை புனித வெள்ளியாக நேற்று அனுசரிக்கப்பட்டது.

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரித்தநாளை புனித வெள்ளியாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர்.

    தவக்காலத்தின் கடைசி வெள்ளியாகவும், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளியாகவும் இடம் பெறும் இந்த வெள்ளியானது உலகில் உள்ள கிறிஸ்தவர்களால் ஒரே நாளில் துக்கநாளாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக விளங்கும் திரு இருதய பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு பிரார்த்தனை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நேற்றுமாலை நடந்தது.

    முன்னதாக பேராலய வளாகத்தில் சிறப்பு நற்செய்தி வாசகம், மறையுரை, சிறப்பு மன்றாட்டுக்கள், திருச்சிலுவை ஆராதனை செய்யும் சடங்கு நடைபெற்றது.

    பின்னர் இறைமக்கள் பாடுபட்ட இயேசுவின் சிலுவையை முத்தி செய்யும் சடங்கு நடைபெற்றது.

    தொடர்ந்து முக்கிய நிகழ்வான சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. முடிவில் இயேசுவின் பாடுபட்ட சொரூபம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக புனித வியாகுல அன்னை ஆலயத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வு நடந்தது.

    இதில் இறைமக்கள் ஏராளமானோர் எரியும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி ஜெபித்து கொண்டு சென்றனர்.

    மரித்த ஆண்டவர் சொரூபம் இறைமக்கள் வழிபாட்டிற்காக புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பரிபாலகர் சகாயராஜ், பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார் மற்றும் குருக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் தஞ்சையில் உள்ள அனைத்து தேவாலயங்க ளிலும் புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது.

    • பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது.
    • இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.

    நாமக்கல்:

    கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளுக்கு முன் கடைபிடிக்கும் தவக்காலம், பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.

    ஜெருசலேம் நகரில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து, ஒலிவ மரக்கிளை களைக் கையில் ஏந்தி 'தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்' என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.

    அவற்றை நினைவு கூறும் வகையில், இந்த குருத் தோலை பவனியானது, ஆண்டு தோறும் கொண்டா டப்படுகிறது. இந்த குருத் தோலை ஞாயிறு திருப் பலியின் மூலம் புனித வார கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. அதன்படி, இந்த புனித வாரத்தில் வரும் வியாழக் கிழமை (6-ந் தேதி) புனித வியாழனாக கடைப்பிடிக்கப் படுகிறது.

    மறுநாள் புனித வெள்ளி திருநாளன்று, முழு நாளும் நற்கருணை ஆராதனை நடக்கும். தொடர்ந்து, இறுதி சிலுவை பாதை நடக்கும். வரும், 8-ந் தேதி இரவு திருவிழிப்பு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் விசுவாசிகள் மன்றாட்டு, நற்கருணை வழிபாடு அனைத்தும் நடக்கும். அதையடுத்து, உயிர்ப்பு பெருவிழா, நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    9-ந் தேதி, ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப் படும். புனித வெள்ளி திரு நாளன்று, உலக மக்களுக் காகப் பாவங்களைச் சுமந்து உயிர் விட்ட இயேசுநாதர், 3-ம் நாள் உயிர்த்தெழும் திருநாளே, ஈஸ்டர் பெரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவால யத்தில் கிறிஸ்தவர்கள், பங்கு தந்தை செல்வம் தலைமையில், குருத்தோலை களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    தேவாலய வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், துறையூர் சாலை வழியாக சென்று, மீண்டும் தேவா லயத்தை அடைந்தது. தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    அதேபோல், நாமக்கல் கணேசபுரம் சி.எஸ்.ஐ. சர்ச், தமிழ் பாப்திஸ்து திருச்சபை, ஏ.ஜி. சர்ஜ், மோகனூர் அடுத்த பேட்டப்பாளையம் புனித செசிலீ ஆலயம் என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில், குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, சிறப்பு பிரார்த் தனை நடந்தது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 

    • ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாகும்.
    • உலக மக்கள் அனைவரும் நோயின்றி வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை சகோதரத்து வத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

    இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.

    பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டுமுஸ்லிம்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க துவங்கினர்.

    நோன்பு காலம் துவங்கியதை அடுத்து உலக புகழ் பெற்ற நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா சிறப்பு தொழுகை நடைபெற்றது

    அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.

    மேலும் அதிக நேரம் இறை வழிபாட்டில் ஈடுபடும் இஸ்லாமியர்கள் சாதி மத பேதமின்றி உலகில் அனைவரும் சுபிட்சமாக வாழவும் மீண்டும் கொரோனா அச்சம் தொற்றியுள்ள நிலையில் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் நோய் நொடி இல்லாமல் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லா மியர்கள் பங்கேற்றனர்.

    • மும்மதத்தை சேர்ந்த மூவரும் இணைந்து சர்வ மத பிரார்த்தனையை தொடங்கி வைத்தனர்.
    • அனைத்து மதத்தினை சேர்ந்தவரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் மத நல்லிணக்க விழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது.

    திருத்தலத்தில் சர்வ மத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து விழா நேற்று நடைபெற்றது.சர்வ மத பிரார்த்தனையில் சுவாமிதோப்பு கேப்டன் சிவா திருவடிகள், பள்ளியாடி திருஇருதய ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, சாமியார் மடம் ஜமாத் அப்துல் பஷீர் ஆகிய மும்மதத்தை சேர்ந்த மூவரும் இணைந்து சர்வ மத பிரார்த்தனையை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சமபந்தி விருந்தானது நேற்று முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது.

    பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் தீப ஒளியினால் இறைவனை பிரார்த்தனை செய்வது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். இங்கு எண்ணை, திரி, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்ற பொருட்களால் அனைத்து மதத்தினரும் அவரவர் முறைப்படி பிரார்த்தனை செய்கின்றனர்.

    லட்சக்கணக்கான மக்கள் மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி தரும் காணிக்கை பொருட்களை சேர்த்து சமைத்து இங்கு வரும் பொது மக்களுக்கு சமபந்தி விருந்தாக சிறப்புடன் வழங்கப்படுகிறது. நூற்றாண்டுகள் பழக்கமுடைய மிகப்பெரிய புளிய மரத்தின் கீழ் இத்திருத்தலம் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். அனைத்து மதத்தினை சேர்ந்தவரும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பழைய பள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை பொதுச் செயலாளர் குமார், தலைவர் பால்ராஜ், பொருளாளர் சுந்தர்ராஜ், விளவங்கோடு தாசில்தார் பத்மகுமார், வாழ்வச்ச கோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜான் டென்சிங், பள்ளியாடி ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் புகாரி, உட்பட பல்வேறு மதத்தை சேர்ந்த நபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த னர்.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களும் இங்கு வந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர்.

    • இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தில் பள்ளி மாணவர்கள் தேர்வுக்காக பிரார்த்தனை நடந்தது.
    • இதே போல் சிவகங்கை விஷ்ணுதுர்கை கோவிலில் உள்ள சரசுவதி கோவிலிலும் மாணவர்கள் வழிபாடு செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள புகழ்பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது.இங்கு மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் சுந்தர நடப்பு பகுதியில் செயல்படும் தனியார் மவுன்ட் போர்டு பள்ளி மாணவர்கள் வருகிற பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுக்காக தயார்படுத்தி வரும் நிலையில், மாணவர்கள் இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற வேண்டிக் கொண்டனர். மாணவர்கள் கொண்டு வந்த நுழைவு தேர்வு சீட்டினை இடைக்காட்டூர் திருஇருதய திருத்தல அருட்பணியாளர் இம்மானுவேல் தாசனிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றனர். இதே போல் சிவகங்கை விஷ்ணுதுர்கை கோவிலில் உள்ள சரசுவதி கோவிலிலும் மாணவர்கள் வழிபாடு செய்தனர்.

    • சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் நிலைத்திட சிறப்பு பிரார்த்தனை.
    • மத நல்லிணக்கத்தோடு புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது.

    புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில், மயிலாடுதுறை மறைவட்டஅதிபர் பங்குத்தந்தை தார்சிஸ் ராஜ் அடிகளார், குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்ட்டர் அடிகளார், மணவா ளநல்லூர் பங்குத்தந்தை ஜான் அமலதாஸ் அடிகளார், பில்லாவடந்தை பங்குத்தந்தை சாலமோன் அடிகளார், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ் அடிகளார், மயிலாடுதுறை உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.

    எங்கேயும் பார்க்க முடியாத தன் மதிப்பை சிலுவை எனும் முகக்கண்ணாடிக்கு முன்பு தான் ஒரு மனிதனால் பார்க்க முடியும் என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி நாகை மறைவட்ட அதிபர் பன்னீர்செல்வம் அடிகளார் திருவிழா மறையுரை யாற்றினார்.

    இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் நிலைத்திடவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

    கிறிஸ்தவர்கள் மட்டு மின்றி பிற சமயத்தவரும் இணைந்து நல்லிணக்கத்தோடு கொண்டாடும் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா திருத்தேர்ப வனி நடைபெற்றது.

    வான வேடிக்கை, இன்னிசை முழங்க புனித மைக்கேல் சம்மனசு, புனித ஆரோக்கியநாதர், புனித செபஸ்தியார், புனித ஆரோக்கியமாதா, புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார்களின் திருஉருவம் தாங்கிய ஐந்து தேர்கள் பவனியாக ஆலய வளாகத்தில் தொடங்கி, கொண்டாரெட்டித்தெரு, அழகப்ப செட்டித்தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் திருப்பலி, தேர்பவனி உள்ளிட்ட நிகழ்வுகளையடுத்து, திருவிழா நிறைவுத் திருப்பலி நடைபெற்றது.

    புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் சிறப்பு மறையுரையாற்றினார். திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • சென்னை சாந்தோம் பேராலயத்தில் மயிலை மன்ற மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி சிறப்பு செய்தி வழங்கினார்.
    • சிறப்பு ஆராதனையில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனை இரவு முதல் தொடங்கியது.

    கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை, பெந்தேகோஸ்தே, இ.சி.ஐ., மெத்தடிஸ்ட், ஆற்காடு லூத்ரன் உள்ளிட்ட பல்வேறு திருச்சபைகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்து ஆலய மணியை ஒலித்தனர். மின் விளக்குகளை அணைத்து புத்தாண்டை வரவேற்றனர்.

    ஆராதனை முடிந்ததும் அருகில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கத்தோலிக்க திருச்சபைகளில் தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. சிறப்பு ஆராதனையில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை சாந்தோம் பேராலயத்தில் மயிலை மன்ற மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி சிறப்பு செய்தி வழங்கினார்.

    இங்கு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பிறகு காலை 6 மணி முதல் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை தமிழ், ஆங்கிலம், மலையாள மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், பரங்கிமலை ஆலயம், சின்னமலை அந்தோணியார் ஆலயம், மாதவரம் அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம் ஆகிய ஆலயங்களிலும் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

    சென்னை கதீட்ரல் பேராலயத்தில் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் சிறப்பு செய்தி வழங்கினார். இங்கு அதிகாலை 3 மணி வரை புத்தாண்டு பிரார்த்தனை நடந்தது.

    மேலும் சூளையில் உள்ள தூய பவுல் ஆலயம், அந்த்ரேயா ஆலயம், ஆருத்ரா ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம் ஆகிய இடங்களில் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    புத்தாண்டு பிறந்ததும் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை காரணமாக நள்ளிரவு முதல் அதிகாலை வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சிறப்பு பிரார்த்தனையில் ஆயர்கள் பங்கேற்பு
    • புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    நாகர்கோவில்:

    2023-ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நள்ளிரவு 11.45 மணிக்கு கோட்டார் மறை மாவட்டம் ஆயர் நசரேன்சூசை தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. இதைத் தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அங்கிருந்த வர்கள் புத்தாண்டு வாழ்த் துக்களை பரிமாறிக் கொண் டனர்.

    சி.எஸ்.ஐ. பிஷப் செல்லையா தலைமையில் மருதூர் குறிச்சி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனை நடந்தது.கொற்றிகோடு மீட் நகர் சி.எஸ்.ஐ. ஆலயம், எஸ்.டி. மங்காடுவாவறை சாரோன் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் இன்று காலையில் நடந்த பிரார்த்தனையில் பிஷப் செல்லையா கலந்து கொண்டார்.

    நாகர்கோவில் அசிசி ஆலயம், கிறிஸ்து அரசர் ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

    புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    நள்ளிரவு 12 மணிக்கு பொதுமக்கள் வீதிகளில் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டி யும் புத்தாண்டை வரவேற்ற னர். நண்பர்களும் உறவி னர்களும் ஒருவருக்கொருவர் இரவு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் களை இழந்த நிலையில் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் விமரிசையாக இருந்தது. இன்று காலை யில் சுற்றுலா ஸ்தலங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் கடலில் கால் நனைப்பதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். கடற்கரை ஓரங்களில் குடும்பத்தோடு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். வீடுகளில் இருந்தபடியும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    புத்தாண்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    • பேராயர் ஆர்தர் செல்லராஜா தலைமையில் பிரார்த்தனை.
    • ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வழங்கல்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி மோட்டாண்டிதோப்பில் உள்ள சீயோன் பிரார்த்தனை மையத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் சபை போதகர் குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். நாகை சீயோன் பேராலய தலைமை பேராயர் ஆர்தர் செல்லராஜா தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. விழாவில் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வழங்கினர்.

    முடிவில் சின்னசாமி நன்றி கூறினார். விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • திருச்சி தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்
    • தேவாலயங்கள் வண்ண வண்ண ஸ்டார்கள், அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன

    திருச்சி :

    இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை–யொட்டி நேற்று இரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் குடில்களில் இயேசு கிறிஸ்துவின் சொரூபம் வைக்கப்பட்டு பிரார்த்தனை நடந்தது. அதே–போன்று இன்று அதிகாலை 5 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடை–பெற்றன. இதற்காக தேவாலயங்கள், வண்ண வண்ண ஸ்டார்கள், அலங்கார மின்விளக்குகள், குடில்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தன. திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியசாமி, திருச்சி-தஞ்சை திருமண்டல பேரா–யர் தன்ராஜ் சந்திரசேகரன், லுத்ரன் திருச்சபை பேராயர் ஆகி–யோர் தேவாலயங்களில் நடைபெற்ற பிரார்த்த–னை–களில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி அளித்தனர். திருச்சி மேலப்புதூர் மரியன்னை ஆலயம், பாலக்கரை பசிலிக்கா, புத்தூர் பாத்திமா, மெயின் கார்டு கேட் தூய வளனார் ஆல–யம், பொன்மலை புனித சூசையப்பர் ஆலயம், பெரிய மிளகுபாறை சந்தியாகப்பர் ஆலயம், கருமண்டபம் ஆரோக்கிய மாதா ஆலயம், மார்க் ஆலயம், காட்டூர் பிலோமினாள் ஆலயம், வெனிஸ் நகர் செபஸ்தியார் ஆலயம், கே.கே.நகர் ஜெகன் மாதா ஆலயம், திருச்சி பொன்ன–கர் ஏ.ஜி. சபை, தலைமை தபால் நிலையம் லூத்ரன் திருச்சபை உள்ளிட்ட ஏரா–ளமான தேவா–லயங்க–ளில் சிறப்பு பிரார்த்த–னைகள் நடைபெற்றன. கிறிஸ்தவ தேவலாயங்க–ளில் வழங்கப்பட்ட நற் செய்திகளில் இயேசு கிறிஸ்து உலகில் மனிதர் களை பாவங்களில் இருந்து ரட்சிக்கவும், ஏழை–களுக்கு இரங்கவும், மாட்டுத்தொ–ழுவத்தில் கன்னி மரியா–ளுக்கு மகனாக பிறந்தார். இயேசுவின் பிறப்பு எளி–மையானது. ஏழை–களிடம் இரக்கம் காட்டுங்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் நாம் இயேசுவின் பிள்ளைகளாக மாறுகிறோம். ஏழைகளுக்கு உதவி செய்கிற ஒவ்வொரு நேரத்திலும் இயேசு உங்க–ளுக்குள் பிரவே–சிப்பார். அந்த ஒவ்வொரு நாளும் நன்னாள்தான் என செய்தி அளித்தனர். தேவாலயங்களுக்கு வந்த கிறிஸ்தவர்கள் ஒருவ–ருக்கொருவர் ஆரத்தழுவி–யும், கை குலுக்கியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.


    ×