search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருத்தோலை பவனி, சிறப்பு பிரார்த்தனை
    X

    குருத்தோலை பவனி, சிறப்பு பிரார்த்தனை

    • பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது.
    • இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.

    நாமக்கல்:

    கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளுக்கு முன் கடைபிடிக்கும் தவக்காலம், பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.

    ஜெருசலேம் நகரில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து, ஒலிவ மரக்கிளை களைக் கையில் ஏந்தி 'தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்' என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.

    அவற்றை நினைவு கூறும் வகையில், இந்த குருத் தோலை பவனியானது, ஆண்டு தோறும் கொண்டா டப்படுகிறது. இந்த குருத் தோலை ஞாயிறு திருப் பலியின் மூலம் புனித வார கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. அதன்படி, இந்த புனித வாரத்தில் வரும் வியாழக் கிழமை (6-ந் தேதி) புனித வியாழனாக கடைப்பிடிக்கப் படுகிறது.

    மறுநாள் புனித வெள்ளி திருநாளன்று, முழு நாளும் நற்கருணை ஆராதனை நடக்கும். தொடர்ந்து, இறுதி சிலுவை பாதை நடக்கும். வரும், 8-ந் தேதி இரவு திருவிழிப்பு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் விசுவாசிகள் மன்றாட்டு, நற்கருணை வழிபாடு அனைத்தும் நடக்கும். அதையடுத்து, உயிர்ப்பு பெருவிழா, நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    9-ந் தேதி, ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப் படும். புனித வெள்ளி திரு நாளன்று, உலக மக்களுக் காகப் பாவங்களைச் சுமந்து உயிர் விட்ட இயேசுநாதர், 3-ம் நாள் உயிர்த்தெழும் திருநாளே, ஈஸ்டர் பெரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவால யத்தில் கிறிஸ்தவர்கள், பங்கு தந்தை செல்வம் தலைமையில், குருத்தோலை களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    தேவாலய வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், துறையூர் சாலை வழியாக சென்று, மீண்டும் தேவா லயத்தை அடைந்தது. தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    அதேபோல், நாமக்கல் கணேசபுரம் சி.எஸ்.ஐ. சர்ச், தமிழ் பாப்திஸ்து திருச்சபை, ஏ.ஜி. சர்ஜ், மோகனூர் அடுத்த பேட்டப்பாளையம் புனித செசிலீ ஆலயம் என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில், குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, சிறப்பு பிரார்த் தனை நடந்தது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×