search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளது"

    • பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
    • நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் மான்கி பாத் நிகழ்ச்சி நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மான்கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் 100-வது மான் கி பாத் நிகழ்ச்சி இன்றுநாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

    நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் மான்கி பாத் நிகழ்ச்சி நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபோல நெச வாளர் காலனியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி யை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் கூட மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. நேர்மையான அதிகாரிகள் பணி செய்ய முடியவில்லை. தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி கொண்டு கொடுக்கப்படும் என்று கூறியது போன்று மதுவை வீடு தேடிக் கொண்டு கொடுக்காமல் இருந்தால் சரி. காங்கிரஸ் ஆட்சியின் மிசா. பா.ஜ.க. ஆட்சியில் வருமானவரித்துறை சோதனை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் குறித்து கேள்வி எழுப்பிய போது மிசாவின் கொடுமைகளை அவரது தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. அல்லது ஆர்காடு வீராசாமியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை பா.ஜ.க. மகத்தான வெற்றி பெறும்.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. பலமுறை குற்றம் சாட்டியும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அச்சம் காரணமாக குமரி மாவட்ட அதிகாரிகள் ஒதுங்கி நிற்கிறார்கள். நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு இடையேயான சீட்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் தெரியும். பா.ஜ.க. மீதான குற்றச்சாட்டுகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்கட்டும். இதுதொடர்பாக மாநில தலைவர் ஏற்கனவே பதில் கூறியிருக்கிறார். கலைஞர் முதல்வராக, திரைப்பட தயாரிப்பாளராக, திரைக்கதை எழுத்தாளராக பல முகங்கள் அவருக்கு உண்டு. அவருடைய நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும். அவருக்கு நிறைய புகழ் சேர்க்க முடியும். ஒரு பேனா மட்டும் போதும் என்று கூறுவது பேதமை. பேனாவிற்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் அவர் மிக முக்கிய தலைவர். இது எனது சொந்த கருத்து. பேனா மட்டுமல்ல அவருக்கு நிறைய செய்ய முடியும். அதனையும் அவர்கள் யோசிக்க வேண்டும். கலைஞருக்கு உரிய மரியாதை அவருக்கு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறப்பு பிரார்த்தனையில் ஆயர்கள் பங்கேற்பு
    • புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    நாகர்கோவில்:

    2023-ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நள்ளிரவு 11.45 மணிக்கு கோட்டார் மறை மாவட்டம் ஆயர் நசரேன்சூசை தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. இதைத் தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அங்கிருந்த வர்கள் புத்தாண்டு வாழ்த் துக்களை பரிமாறிக் கொண் டனர்.

    சி.எஸ்.ஐ. பிஷப் செல்லையா தலைமையில் மருதூர் குறிச்சி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனை நடந்தது.கொற்றிகோடு மீட் நகர் சி.எஸ்.ஐ. ஆலயம், எஸ்.டி. மங்காடுவாவறை சாரோன் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் இன்று காலையில் நடந்த பிரார்த்தனையில் பிஷப் செல்லையா கலந்து கொண்டார்.

    நாகர்கோவில் அசிசி ஆலயம், கிறிஸ்து அரசர் ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

    புத்தாண்டையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    நள்ளிரவு 12 மணிக்கு பொதுமக்கள் வீதிகளில் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டி யும் புத்தாண்டை வரவேற்ற னர். நண்பர்களும் உறவி னர்களும் ஒருவருக்கொருவர் இரவு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் களை இழந்த நிலையில் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் விமரிசையாக இருந்தது. இன்று காலை யில் சுற்றுலா ஸ்தலங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். ஆனால் கடலில் கால் நனைப்பதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர். கடற்கரை ஓரங்களில் குடும்பத்தோடு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். வீடுகளில் இருந்தபடியும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    புத்தாண்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ×