search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகத்தில்"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
    • தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் பால்வ ளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். தமிழகத்தில் 9,673 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. 4 லட்சம் விவசாயிகளிடம் இருந்து தினசரி 35 லட்சம் லிட்டர் பால் பெற்று வினி யோகம் செய்யப்படுகிறது.

    தற்போது 45 லிட்டர் பால் கையாளும் வசதி உள்ளது. அதை இந்த ஆண்டு 70 லட்சமாக லிட்டராக உயர்த்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமுல் நிறுவனம் வியாபார நோக்குடன் வருவதாகவும், அது ஆவினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு மாநில பால் கூட்டுறவு சங்கங்களும் அவர்களது எல்லையை மீறாமல் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் ஆவின் போல கேரளா, கர்நாடாவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படு கின்றன. தற்போது பால் உற்பத்தி பகுதி மீறல் வந்து விட கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

    எனவே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கலக்கம் அடைய வேண்டாம். தமிழகத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு தான் இன்சூ ரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து மாடுகளையும் இன்சூரன்ஸ் செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது.

    செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து அது செயல்படாததற்கான காரணத்தை அறிந்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அச்சப்பட வேண்டாம். பாதிப்பு ஏற்ப டும் என பயப்பட வேண் டாம்.

    பால் உற்பத்தி நிறுவ னங்கள் கூட்டுறவு சட்டப் படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பால் உற்பத்தி பகுதியில் விதி மீறல் ஏற்பட கூடாது. தற்போது பால் உற்பத்தி பகுதியை மீறுகின்ற செயல் போல தெரிகிறது. எனவே தான் 2 விஷயங்களை கூறி முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    ஆவினை உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதி தேவை அதிகமாக உள்ளது. பால் உற்பத்தியை பெருக்க இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகள் கொடுக்கப்பட உள்ளன.

    ஆவினில் வே புரோட்டின் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் பொருட்களின் எண்ணிக்கை அதிகாரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ளது. மேய்ச்சல் நிலத்தை கண்டறிந்து மேம்படுத்தி பச்சை புல் தயாரிக்கும் திட்டம் கெண்டு வர ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியை பெருக்க என்ன நடவடிக்கை தேவை என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    அமுல் விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக பார்க்கவில்லை.

    பொதுவாக ஒரு மாநி லத்தில் செயல்படுகிற சங்கம் மற்றொரு மாநிலத்தில் தலையிடுவது இல்லை.

    அமுல் நிறுவனம் கொள் முதல் விலையை உயர்த்தி தருவதாக கூறுகிறார்கள். ஆனால் ஆவின் சார்பில் இன்ஸ்சூரன்ஸ் உள்பட பல்வேறு விஷயங்கள் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் பால் உற்பத்தி யாளர்களின் கோரிக்கை களை வருங்காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பால்வளத்துறை மூலம் மாடுகள் இனச்சேர்க் கைக்கு உயர்ரக மாடுகளின் விந்துவை சேகரித்து விந்து உறைவைப்பு நிலையம் முறையாக செயல்படுத் தப்பட்டு வருகிறது. நாட்டு இன மாடுகளில் தரமான மாடுகளை கண்டறிந்து அபிவிருத்தி செய்து இனப் பெருக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஓரிரு வாரங்களில் அனைத்து ஆவின் எந்தி ரங்களின் செயல்பாடுகளை ஆராய வேலை நடக்கிறது. அது முடிந்ததும் எந்த எந்திரங்களை மேம்படுத்த முடியும், மாற்றி அமைக்க முடியும் என்பது ஆராயப் படும். ஆவினில் பால் வாங்குவது பாதுகாப்பானது. ஆவின் தரத்துக்கு போட்டி யாக எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
    • நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் மான்கி பாத் நிகழ்ச்சி நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மான்கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் 100-வது மான் கி பாத் நிகழ்ச்சி இன்றுநாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

    நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் மான்கி பாத் நிகழ்ச்சி நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபோல நெச வாளர் காலனியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி யை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் கூட மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. நேர்மையான அதிகாரிகள் பணி செய்ய முடியவில்லை. தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி கொண்டு கொடுக்கப்படும் என்று கூறியது போன்று மதுவை வீடு தேடிக் கொண்டு கொடுக்காமல் இருந்தால் சரி. காங்கிரஸ் ஆட்சியின் மிசா. பா.ஜ.க. ஆட்சியில் வருமானவரித்துறை சோதனை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் குறித்து கேள்வி எழுப்பிய போது மிசாவின் கொடுமைகளை அவரது தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. அல்லது ஆர்காடு வீராசாமியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை பா.ஜ.க. மகத்தான வெற்றி பெறும்.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. பலமுறை குற்றம் சாட்டியும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அச்சம் காரணமாக குமரி மாவட்ட அதிகாரிகள் ஒதுங்கி நிற்கிறார்கள். நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு இடையேயான சீட்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் தெரியும். பா.ஜ.க. மீதான குற்றச்சாட்டுகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்கட்டும். இதுதொடர்பாக மாநில தலைவர் ஏற்கனவே பதில் கூறியிருக்கிறார். கலைஞர் முதல்வராக, திரைப்பட தயாரிப்பாளராக, திரைக்கதை எழுத்தாளராக பல முகங்கள் அவருக்கு உண்டு. அவருடைய நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும். அவருக்கு நிறைய புகழ் சேர்க்க முடியும். ஒரு பேனா மட்டும் போதும் என்று கூறுவது பேதமை. பேனாவிற்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் அவர் மிக முக்கிய தலைவர். இது எனது சொந்த கருத்து. பேனா மட்டுமல்ல அவருக்கு நிறைய செய்ய முடியும். அதனையும் அவர்கள் யோசிக்க வேண்டும். கலைஞருக்கு உரிய மரியாதை அவருக்கு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி கட்சியின் சார்பில் பவானி தேர் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
    • முன்னதாக பா.ம.க. தலைவராக பதவி ஏற்று கொண்ட அன்புமணி ராமதாஸ் முதன் முறையாக பவானி நகருக்கு வந்ததை யடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ப்பட்டது. பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்

    சித்தோடு:

    ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி கட்சியின் சார்பில் பவானி தேர் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

    மாநில துணைத்தலைவர் எஸ். எல். பரமசிவம், எம்.பி.வெங்கடாஜலம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சி. ஆர். கோபால், எஸ்.பி. வல்லவராயன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக வடக்கு மாவட்ட தலைவர் செ ங்கோட்டையன் வரவேற்று பேசினார்.

    இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    தமிழ்நாட்டில் தொடர்ந்து திராவிட கட்சிகள் தி.மு.க. அ.தி.மு.க. என அரை நூற்றாண்டுகள் 55 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. ஆனால் நமக்கு முன்னேற்றம் கிடைத்ததா? இல்லை முன்னேற்றம் என்றால் அவர்களுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது.

    நாளை நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் நாம் அதே குடிசை யில் வேலை வாய்ப்புகள் இன்றி உள்ளோம்.

    இந்த பவானி நகர் என்றவுடன் நினைவுக்கு வருவது உலக புகழ்பெற்ற பவானி ஜமுக்காளம் ஆகும். ஆனால் அந்த தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. அந்த தொழில் செய்பவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதில் தற்போது ஒரு புது பிரச்சினை நூல் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. போன்றவற்றினால் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர்.

    அதேபோல் அந்தியூர் பர்கூர் மலை வாழ் மக்கள் சுமார் 35 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக எஸ்.டி. சாதி சான்றிதழ் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த மாவட்டத்தில் அந்த சான்றிதழ் வழங்க ப்படவில்லை. இதனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஏன் தர மறுக்கின்றனர் என தெரிய வில்லை. கிருஷ்ணகிரியில் கொடுத்துள்ளனர்.

    கர்நாடகா மாநிலத்தில் கொடுத்துள்ளனர். இங்கு மட்டும் இதுவரை கிடைக்க வில்லை. உடனடியாக தமிழக அரசும், மத்திய அரசும் மலை வாழ் மக்களுக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

    பாட்டாளி மாடல் என்றால் தமிழ்நாட்டில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாதது தான் ஆகும். பெண்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக செல்லலாம். தரமான இலவசமான கல்வி வழங்கப்படும். இலவசமாக சுகாதாரம் கிடைக்கும், நீர் நிலைகள் பாதுகாக்கப்படும். புதிய ஏரிகள் உருவாக்க ப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்க அனைத்து விதமான நடவடி க்கையும் மேற்கொள்ளப்படும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கலாம். வருகின்ற 2026-ல் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் நன்றி கூறினார்.

    முன்னதாக பா.ம.க. தலைவராக பதவி ஏற்று கொண்ட அன்புமணி ராமதாஸ் முதன் முறையாக பவானி நகருக்கு வந்ததை யடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ப்பட்டது. பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் யோகபிரபு, துணைத் தலைவர் சர்வேயர் வேலு, துணை செயலாளர் முருகானந்தம், ஜம்பை பேரூர் செயலாளர் சம்பத், பேரூர் தலைவர் கார்த்தி, உழவர் பேரியக்க நிர்வாகி சக்திவேல், பேரூராட்சி கவுன்சிலர் குமார், முன்னாள் கவுன்சிலர் தாண்டவன், மாணவர் சங்க பொறுப்பாளர் பிரேம் ஆனந்த், ஜம்பை பேரூர் பொறுப்பாளர் சக்திவேல், அம்மாபேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் பிரபு, ஈரோடு வடக்கு மாவட்ட பா.ம.க. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெகதீசன், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய கவுன்சி லர் வனிதா ஜெகதீசன், டாஸ்மாக் பாட்டாளி தொழிற் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் சுதாகர், மாநில துணை செய லாளர் சேகர், மாணவர் சங்க பொறுப்பா ளர் பிரேம் ஆனந்த், மாநில இளைஞர் சங்க முன்னாள் துணை செயலாளரும், மாவட்ட இளைஞர் சங்க தலைவருமான முனுசாமி, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் முன்னாள் சேர்மன் முத்து லட்சுமி முனுசாமி, மத்திய மாவட்ட முன்னாள் செய லாளர் துர்க்கா கோவிந்த ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் மனோகரன், அந்தியூர் தெற்கு செயலாளர் பிரகாஷ், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கோவிந்தசாமி, மத்திய மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பழனிவேல், காஞ்சிகோவில் பேரூர் செயலாளர் அய்யனார், பள்ளா பாளையம் பேரூர் செயலாளர் முத்துசாமி, அம்மாபேட்டை முன்னாள் சேர்மன் குமரவேல், மாவட்ட துணை செயலாளர் ஆண்டவர், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் செந்தில்குமா ர், மாவட்ட துணை செயலாளர் நடராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சி லர் பிரகாஷ், ஒன்றிய தலைவர் ராஜூ, முன்னாள் ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய தலைவர் கண்ணன் என்ற தண்டாயுத பாணி, பாட்டாளி சமூக ஊடக பேரவை குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×