search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ம.க."

    • மது விலக்கு குறித்து பேரணி நடத்த பா.ம.க. மனு அளித்தது
    • மராத்தான் ஓட்டத்திற்கு அனுமதி வழங்குவதை நீதிபதி குறிப்பிட்டார்

    பாட்டாளி மக்கள் கட்சி, தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கோரி பல வருடங்களாக தமிழ்நாட்டின் ஆளும் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறது. அக்கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக பூரண மதுவிலக்கை நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

    தங்களின் கோரிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய அக்டோபர் 5-ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

    அனுமதி மறுக்கப்பட்டதால் பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    பேரணி செல்லும் பாதையில் பிற மதத்தினர் உள்ளனர் என கூறி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பா.ம.க. மதம் சார்ந்த கட்சி அல்ல என்றும் பா.ம.க. வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் அரசு தரப்பு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.

    அவர் விசாரணையின் போது கேட்டதாவது:

    ஆளும் கட்சியினர் மராத்தான் ஓடவும், நடப்பதற்கும் அனுமதி வழங்குகிறீர்கள்; மதுவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கினால் என்ன? யாருக்காக காவல்துறை உள்ளது? தமிழ்நாட்டில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்தினால் அவை மத்திய அரசின் ஏஜென்சிகள் என குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படி என்றால் தமிழ்நாடு காவல்துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது? ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் காவல்துறை செயல்படுமா?

    இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    விவாதங்களுக்கு பிறகு வழக்கை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • அலங்கை ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவேல் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங் காநல்லூர் அருகே முடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலை வர் செல்லம்பட்டி முருகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா, அலங்கை ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் செந் தில்குமார், பொருளாளர் ரேவதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப் பினர் செல்வம், ஸ்டாலின் வரவேற்றார். செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஈஸ்வ ரன் சிறப்புரையாற்றி னார். இந்த கூட்டத்தில் மது ஒழிப்பு மற்றும் தடை செய் யப்பட்ட போதை பொருட் கள் விநியோகத்தை கட்டுப்ப டுத்த வலியுறுத்தி தீர்மா னங் கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் அலங்கை ஒன் றிய பெருந்தலைவர் சண் முகவேல் நன்றி கூறினார்.

    • பா.ம.க. சார்பில் கொடியேற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • முனியாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மூடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தலை வர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி கட்சி யின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் நேர்மையான அரசியல் குறித்து விழிப்பு ணர்வு உறுதிமொழி எடுத் துக் கொண்டனர். இதற்கு ஒன்றிய பொருளாளர் ரேவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் செல்லம் பட்டி முருகன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பு செயலா ளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், குரு பாலமுருகன், நிர்வாகிகள் நாராயணன், அமரன், முருகன், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்காநல்லூர் முனி யாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    • மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் -பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ளது மேச்சேரி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் நுழைவுப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக சாக்கடை நீர் தேங்கி நின்றது. கனரக வாகனங்க ள்செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோரின் மீது சாக்கடை வாரி இறைக்கப்படுகிறது. இந்தநிலையில் பல்வேறு முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.மான கார்த்திக் போராட்டத்தை விளக்கிப் பேசினார், மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • செயற்குழு கூட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பா.ம.க .கவுரவ தலைவர் பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    கடத்தூர்,

    தருமபுரி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க .கவுரவ தலைவர் பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசாங்கம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தருமபுரி தேர்தல் பணிக்குழு தலைவர் ஸ்டீல்ஸ் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, செந்தில், ராமசுந்தரம், முத்துசாமி, ஜெயகுமார், சிவகுமார், வணங்காமுடி, இமயவர்மன், ராமலிங்கம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஜி.கே. மணி பேசும் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கட்சியின் 35-வது ஆண்டு துவக்கவிழா எழுச்சியோடு கொண்டாட வேண்டும். ஆழுகின்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கட்சியாக பாமக உள்ளது என பேசினார்.

    • வெங்கடாசலபுரத்தில் பகுதி நேர ரேசன்கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் தென்காசி வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அய்யாபுரம் போலீஸ் நிலையத்தில் பா.ம.க. பிரமுகர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். திருவேங்கடம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் பகுதி நேர ரேசன்கடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், துணைச்செயலாளர் பால் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர்கள் அய்யம்பெருமாள், சேது ஹரிஹரன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட துணைச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் மேரி புஷ்பலதா, விவசாய சங்க செயலாளர் மதிராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கரன்கோவில் நகர செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

    • பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை
    • தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து அதிகாரிகள் வாக்குவாதம் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி, அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது பழுதடைந்து உள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

    இதையடுத்து பழு தடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப் பட்ட மின்வாரிய அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    ஆனால் டிரான்பார்மரை மாற்றி அமைக்க அதிகாரி ஒருவர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மாமல்லபுரம் நகர பாட்டாளி மக்கள் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ரூ.14 ஆயிரத்தை சில்லரை காசுகளாக சேகரித்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஒத்தவாடை தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அவர்கள் சில்லரை காசுகளுடன் மற்றொரு தட்டில் பூ, பழம் உள்ளிட்ட தாம்பூலத்துடன் மேளதாளத்துடன் வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மின்வாரிய அலுவலகத்தின் நுழைவு வாயில் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் மேஜை என இரண்டு இடங்களில் கொண்டு வந்த சில்லரை காசு மற்றும் தாம்பூலத்தட்டை வைத்தனர். இதனை பார்த்து அலுவலகத்தில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாம்பூலத்தையும், சில்லரை காசையும் வாங்க மறுத்து வாக்குவாதம் செய்தனர்.

    பின்னர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க வினர் டிரான்ஸ்பர் மாற்ற முதல் தவணையாக ரூ.14 ஆயிரம் கொடுத்து உள்ளோம், இனியாவது வந்து டிரான்ஸ்பார்மரை மாற்றுங்கள் எனக்கூறி விட்டு அங்கிருந்த மேஜையில் சில்லரை காசை வைத்து சென்றுவிட்டனர். இதனால் அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் விழித்தனர்.

    பழுதடைந்த டிரான்ஸ்பர்மரை மாற்ற அதிகாரிகள் லஞ்சம் கேட்டனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    • போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகினர்.
    • இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில், வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகினர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பல்லடம் பச்சாபாளையத்தில் நடைபெற்ற இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில் தியாகிகள் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் காளியப்பன், மணிகண்ணன், எம்.ஏ. நகர் குமார், பிரகாஷ், முன்னவன், நந்தகோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி கட்சியின் சார்பில் பவானி தேர் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
    • முன்னதாக பா.ம.க. தலைவராக பதவி ஏற்று கொண்ட அன்புமணி ராமதாஸ் முதன் முறையாக பவானி நகருக்கு வந்ததை யடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ப்பட்டது. பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்

    சித்தோடு:

    ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி கட்சியின் சார்பில் பவானி தேர் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

    மாநில துணைத்தலைவர் எஸ். எல். பரமசிவம், எம்.பி.வெங்கடாஜலம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சி. ஆர். கோபால், எஸ்.பி. வல்லவராயன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக வடக்கு மாவட்ட தலைவர் செ ங்கோட்டையன் வரவேற்று பேசினார்.

    இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    தமிழ்நாட்டில் தொடர்ந்து திராவிட கட்சிகள் தி.மு.க. அ.தி.மு.க. என அரை நூற்றாண்டுகள் 55 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. ஆனால் நமக்கு முன்னேற்றம் கிடைத்ததா? இல்லை முன்னேற்றம் என்றால் அவர்களுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது.

    நாளை நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் நாம் அதே குடிசை யில் வேலை வாய்ப்புகள் இன்றி உள்ளோம்.

    இந்த பவானி நகர் என்றவுடன் நினைவுக்கு வருவது உலக புகழ்பெற்ற பவானி ஜமுக்காளம் ஆகும். ஆனால் அந்த தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. அந்த தொழில் செய்பவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதில் தற்போது ஒரு புது பிரச்சினை நூல் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. போன்றவற்றினால் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர்.

    அதேபோல் அந்தியூர் பர்கூர் மலை வாழ் மக்கள் சுமார் 35 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக எஸ்.டி. சாதி சான்றிதழ் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த மாவட்டத்தில் அந்த சான்றிதழ் வழங்க ப்படவில்லை. இதனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஏன் தர மறுக்கின்றனர் என தெரிய வில்லை. கிருஷ்ணகிரியில் கொடுத்துள்ளனர்.

    கர்நாடகா மாநிலத்தில் கொடுத்துள்ளனர். இங்கு மட்டும் இதுவரை கிடைக்க வில்லை. உடனடியாக தமிழக அரசும், மத்திய அரசும் மலை வாழ் மக்களுக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

    பாட்டாளி மாடல் என்றால் தமிழ்நாட்டில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாதது தான் ஆகும். பெண்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக செல்லலாம். தரமான இலவசமான கல்வி வழங்கப்படும். இலவசமாக சுகாதாரம் கிடைக்கும், நீர் நிலைகள் பாதுகாக்கப்படும். புதிய ஏரிகள் உருவாக்க ப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்க அனைத்து விதமான நடவடி க்கையும் மேற்கொள்ளப்படும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கலாம். வருகின்ற 2026-ல் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் நன்றி கூறினார்.

    முன்னதாக பா.ம.க. தலைவராக பதவி ஏற்று கொண்ட அன்புமணி ராமதாஸ் முதன் முறையாக பவானி நகருக்கு வந்ததை யடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ப்பட்டது. பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் யோகபிரபு, துணைத் தலைவர் சர்வேயர் வேலு, துணை செயலாளர் முருகானந்தம், ஜம்பை பேரூர் செயலாளர் சம்பத், பேரூர் தலைவர் கார்த்தி, உழவர் பேரியக்க நிர்வாகி சக்திவேல், பேரூராட்சி கவுன்சிலர் குமார், முன்னாள் கவுன்சிலர் தாண்டவன், மாணவர் சங்க பொறுப்பாளர் பிரேம் ஆனந்த், ஜம்பை பேரூர் பொறுப்பாளர் சக்திவேல், அம்மாபேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் பிரபு, ஈரோடு வடக்கு மாவட்ட பா.ம.க. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெகதீசன், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய கவுன்சி லர் வனிதா ஜெகதீசன், டாஸ்மாக் பாட்டாளி தொழிற் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் சுதாகர், மாநில துணை செய லாளர் சேகர், மாணவர் சங்க பொறுப்பா ளர் பிரேம் ஆனந்த், மாநில இளைஞர் சங்க முன்னாள் துணை செயலாளரும், மாவட்ட இளைஞர் சங்க தலைவருமான முனுசாமி, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் முன்னாள் சேர்மன் முத்து லட்சுமி முனுசாமி, மத்திய மாவட்ட முன்னாள் செய லாளர் துர்க்கா கோவிந்த ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் மனோகரன், அந்தியூர் தெற்கு செயலாளர் பிரகாஷ், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கோவிந்தசாமி, மத்திய மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பழனிவேல், காஞ்சிகோவில் பேரூர் செயலாளர் அய்யனார், பள்ளா பாளையம் பேரூர் செயலாளர் முத்துசாமி, அம்மாபேட்டை முன்னாள் சேர்மன் குமரவேல், மாவட்ட துணை செயலாளர் ஆண்டவர், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் செந்தில்குமா ர், மாவட்ட துணை செயலாளர் நடராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சி லர் பிரகாஷ், ஒன்றிய தலைவர் ராஜூ, முன்னாள் ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய தலைவர் கண்ணன் என்ற தண்டாயுத பாணி, பாட்டாளி சமூக ஊடக பேரவை குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையை சீரமைக்க பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள பிள்ளைக்குழி (மயானம்) பகுதியில் உள்ள மண்சாலை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது.இந்தசாலை 3 கிலோமீட்டர் தூரம் சென்று மெயின் ரோட்டை அடையும். இந்தப்பகுதி முழுவதும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி ஆகும்.

    எனவே இந்த சாலை முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் உரிய முறையில் பராமரிக்காததால் இந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள்அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின்விளக்குகள் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளில் அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

    • கந்துவட்டி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.
    • ஏழை அப்பாவி தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

    சிவகாசி

    விருதுநகர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனியல், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சிவகாசி பகுதியில் கந்து வட்டிக்காரர்கள் தரும் தொல்லை அதிகளவில் உள்ளது. இது குறித்து புகார் கொடுக்க பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தொழிலாளர்களை வஞ்சித்து வரும் கந்துவட்டி கும்பல் குறித்து யாரும் புகார் அளிக்க முன்வருவதில்லை.

    அதனால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்கள் வாங்க மாவட்ட அளவில் அல்லது தாலுகா அளவில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இதில் கொடுக்கப்படும் மனுக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் கந்து வட்டிக் காரர்களின் பிடியில் இருந்து ஏழை அப்பாவி தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

    துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் பல தொழிலாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை கந்துவட்டி கும்பல் பறித்து கொண்டு வட்டி வசூல் செய்வதாக தகவல் வருகிறது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×