search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்-திருச்சி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
    X

    இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்-திருச்சி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

    • இன்று ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு திருச்சி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
    • இயேசு கிறிஸ்து சிலு–வைப்பாடுகள் அனுபவித்து மரித்து உயிரோடு எழுந்த காலத்தை உலகம் முழு–வதும் மக்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பி–டிப்பார்கள்.

    திருச்சி:

    சுமார் 2,000 ஆண்டுக–ளுக்கு முன்பு பாவத்திலிருந்து மனுக்குலத்தை மீட்டு மன்னித்து ரட்சிக்க வந்த இறைமகன் இயேசு கிறிஸ் துவை யூதர்கள் அவர் மீது பொய் குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொன்றனர். 3 நாட்கள் கல்ல–றையில் வைக்கப்பட்ட அவர் 3-ம் நாள் கல்லறை–யிலிருந்து உயிர்ப்பித்து எழுந்தார்.இயேசு கிறிஸ்து சிலு–வைப்பாடுகள் அனுபவித்து மரித்து உயிரோடு எழுந்த காலத்தை உலகம் முழு–வதும் மக்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பி–டிப்பார்கள்.

    அதன் பிறகு இயேசு சிலுவை–யில் அறையபட்ட வெள் ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் கல்ல–றையிலிருந்து உயி–ரோடு எழுந்த நாளான ஞாயிற்றுகிழமையை ஈஸ்டர் திருநாளாகவும் கடை–பிடித்து வருகிறார்கள்.இன்று ஞாயிற்றுக்கி–ழமை ஈஸ்டர் பண்டிகையை–யொட்டி நள்ளிரவு முதல் திருச்சி மாவட்டம் முழு–வதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து–கொண்டு இயேசு உயிர்த்தெ–ழுந்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

    சிறப்பு பிரார்த்தனையிலும் பங் கேற்றனர்.திருச்சி பாலக்கரை பசிலிக்கா, மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயம், ஜோசப் சர்ச், புத்தூர் பாத்திமா ஆலயம், கருமண்ட–பம் மாற்கு ஆலயம், குணமளிக்கும் மாதா ஆலயம், ஆரோக்கிய மாதா ஆலயம், அமலா ஆசிரமம் மற்றும் திருவெறும்பூர், மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி, மணிகண்டம் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள தேவா–லயங்களிலும் ஆயிரக்க–ணக்கான மக்கள் பிரார்த்த–னையில் கலந்து கொண்டு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.

    பல்வேறு கிறிஸ்தவ தேவால–யங்களில் இயேசு மீண்டும் உயிர்த்தெ–ழுந்த காட்சி தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தது.இயேசு உயிர்த்தெழுந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு இனிப்புகள் வழங்கினர். இயேசு உயிர்த்தெழுந்த நேரம் வந்ததும் வானில் வெடி வெடித்து மகிழ்ந்த–னர். இயேசு கிறிஸ்து இன்றும் உயிரோடு ஜீவிக்கி–றார். அவர் அவரை ஏற்றுக்கொண்டு மனம்தி–ரும்பி வரும் பாவிகள் அனை–வரையும் மன்னித்து புது–வாழ்வு அளிக்க வல்ல–வராக இருக்கிறார்.

    எனவே அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டு பாவம் செய்யாமல், பிற–ருக்கு உதவி செய்து இயேசு கிறிஸ்து கூறிய தத்து–வங்களை கடைபிடித்து வாழ வேண்டும். அப்போது இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பிறப்பார். நமக்கு பல ஆசீர்வாதங்களை தருவார், அற்புதங்களை நடத்துவார் என ஈஸ்டர் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.திருச்சியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து–கொண்டு ஒருவருக்கொ–ருவர் வாழ்த்துக்களை தெரி–வித்துக்கொண்டனர்.


    Next Story
    ×