search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலாத்காரம்"

    • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் தைக்கூடம் விட்டிலாவை சேர்ந்தவர் கார்த்திக்(19).

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா மண்ணாடிமங்கலம் பகுதியில் வசித்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொ டுமை செய்தார்.

    சமயநல்லூர் மகளிர் ேபாலீசார் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த கார்த்திக் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கலெக்டருக்கு சிபாரிசு செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் அனீஷ்சேகர் கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்க உத்தர விட்டார்.

    இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேலை செய்யும் இடத்தில் வைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.
    • போலீசார் கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் நெகமம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் எனது ஊரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயன் (வயது 45) என்பவருடன் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். வேலை செய்யும் இடத்தில் வைத்து அவர் எனது கை பிடித்து இழுத்தும், கட்டி பிடித்து முத்தம் கொடுத்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். இது குறித்து நான் கட்டிட உரிமையாளரிடம் தெரிவித்தேன். அவர் விஜயனை கண்டித்து அனுப்பினார்.

    சம்பவத்தன்று நான் சம்பள பணம் வாங்குவதற்காக விஜயனின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அங்கு இருந்த அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த நான் சத்தம் போட்டேன். அப்போது நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டினார். எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் கட்டிட தொழிலாளி விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் வேலை செய்யும் இடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காட்டு பகுதியில் வைத்து அவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி.

    இவர் 10-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். தந்தை இறந்து விட்டதால் சிறுமி தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

    சிறுமியின் வீட்டு அருகே தாஸ் என்ற கவுதம் (வயது 30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி விட்டது

    சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த தாஸ், சிறுமியிடம் பேச வேண்டும் என கூறி, அருகே உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து அவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு தாஸ் அங்கு இருந்து சென்றார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து அவரது தாய் சிறுமியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமியை காட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டாக்டர்கள் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்.
    • தலைமறைவாக உள்ள சுசீந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் கூலி வேலை செய்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்து வருகிறார்.

    கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அந்த பகுதியில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார்.

    அப்போது சிறுமிக்கு ஏ.பி.எஸ். காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுசீந்திரன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது சுசீந்திரன் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார்.

    பின்னர் அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து அவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இதனால் கடந்த சில நாட்களாக மாணவி வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். அப்போது மாணவியை அவரது தாய் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்.

    அவர்கள் இது குறித்து மாணவியின் தாயிடம் தெரிவித்தனர். அவர் தனது மகளிடம் விசாரித்தார்.

    அப்போது சுசீந்திரன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

    இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் 9-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சுசீந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கல்லூரி மாணவியும், அனுதீப்பும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
    • அனுதீப்பிடம் இருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், துக்கிராலாவை சேர்ந்தவர் அனுதீப் (வயது 25). இவரது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். தாய் வெளியூரில் தங்கி வீட்டு வேலை செய்து வருகிறார். இதனால் அனுதீப் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    இவரது பக்கத்து ஊரை சேர்ந்த 23 வயது மாணவி காக்கிநாடாவில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    கல்லூரி மாணவியும், அனுதீப்பும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி கல்லூரி மாணவியின் விடுதிக்கு சென்ற அனுதீப் மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    அப்போது உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி ஆசைக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தினார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை ஒரு அறையில் தள்ளி பூட்டினார்.

    இதையடுத்து வெளியே சென்ற அனுதீப் மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு மாணவியை வற்புறுத்தினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்த எண்ணெய்யை கொதிக்க வைத்து மாணவியின் கை கால்களில் ஊற்றினார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். பின்னர் மாணவியை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து 13 நாட்களாக பலாத்காரம் செய்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார்.

    அனுதீப்பிடம் இருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். மாணவியை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து ஏலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அனுதீப்பை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    தனியாக இருந்ததால் போதைக்கு அடிமையாகி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

    போதைக்கு அடிமையான அவர் பல பெண்களை மயக்கி பலாத்காரம் செய்து அவர்களது வாழ்க்கையை சீரழித்து உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் இருந்த வாலிபர், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
    • மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி.

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது 10-ம் வகுப்பிற்கு தேர்வு நடந்து வருவதால் மாணவிக்கு மதியத்திற்கு பிறகே வகுப்புகள் தொடங்கும்.

    சம்பவத்தன்று, மாணவி, பள்ளி செல்வதற்காக புறப்பட்டு தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வந்தார்.

    குடிபோதையில் இருந்த அவர், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அவரை பார்த்த மாணவி, சத்தம் போட முயன்றார். அதற்குள் வாலிபர், மாணவியின் வாயை பொத்தி அவரை வீட்டில் இருந்த அறைக்குள் தூக்கி சென்றார்.

    அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் இருந்து தப்பிக்க மாணவி எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அவர் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார்.

    அப்போது வீட்டிற்கு மாணவியின் தம்பி வந்து விட்டார். அவர் சத்தம் கேட்டு அறைக்கு சென்றார். இதை பார்த்த சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு மாணவியிடம் பழகி வந்ததாகவும், இதனை மாணவியின் குடும்பத்தினர் தட்டி கேட்டதால், அவர்களது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்ததும் குறிப்பிடத்தக்கது.

    • செல்வம் (வயது 54) சிறுமியிடம் தனக்கு பீடி வாங்கிக் கொண்டு வர பணம் கொடுத்துள்ளார்
    • செல்வம் அந்த மாணவிலை கையை பிடித்து இழுத்து வாயைப் பொத்தி அருகில் உள்ள கருவக்காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது

    கடலூர்:

    பெண்ணாடம் பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பில் மாணவி படித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு மளிகை சாமான் வாங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வம் (வயது 54) சிறுமியிடம் தனக்கு பீடி வாங்கிக் கொண்டு வர பணம் கொடுத்துள்ளார். மாணவியும் கடைக்கு சென்று மளிகை பொருட்களையும், செல்வத்திற்கும் பீடியும் வாங்கி வந்துள்ளார். பீடியை செல்வத்திடம் கொடுத்துள்ளார். அது சமயம் செல்வம் அந்த மாணவிலை கையை பிடித்து இழுத்து வாயைப் பொத்தி அருகில் உள்ள கருவக்காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.   நடந்த சம்பவத்தை மாணவி அவரது தங்கையிடம் கூறியுள்ளார். தங்கை தாயிடம் கூறவே, இது குறித்து அவரது தாய் ஆவனங்குடி போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் செல்வத்தை போக்சோ பிரிவில் கைது செய்தனர். திட்டக்குடி அருகே 54 வயதான முதியவர் மாணவிலை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள மானுப்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் தம்புராஜ் (வயது 22) .கூலி தொழி லாளியான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். மாணவி மாயமானதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தம்புராஜ் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீ சார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தம்புராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டி பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவர் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாதாரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • அதன் பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரங்கனை கைது செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டி பட்டியை சேர்ந்தவர் ரங்கன் (வயது 50), கூலி தொழிலாளி.

    இவர் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாதாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரங்கனை கைது செய்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு ரங்கன் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுரேஷ் சிறுகனூர் நோக்கி வந்துள்ளார்.
    • பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 46). இவர் நேற்று முன்தினம் மதியம் ரெட்டிமாங்குடியில் இருந்து சிறுகனூருக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்ற 42 வயதுடைய ஒரு பெண், மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷிடம் 'லிப்ட்' கேட்டுள்ளார்.

    இதையடுத்து அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுரேஷ் சிறுகனூர் நோக்கி வந்துள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்திய சுரேஷ், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய சுரேஷ், மீண்டும் அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து சிறுகனூர் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மதுபான கூடத்தில் மது அருந்திகொண்டிருந்த சுரேசை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை லால்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது 2-வது கணவருடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, ரெட்டிமாங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து 3 நாட்களாக தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
    • அப்போது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பிஓடியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட காட்டுக் கூடலுரை சேர்ந்தவர் சோழன். தொழிலாளி.

    இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தை கூறி பாலியல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பிஓடியுள்ளார். இது குறித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சோழனை தேடி வந்தனர். கடந்த 2 மாதகாலமாக தலை மறைவாக இருந்த சோழன் பஸ் நிறுத்தம்அருகில்நின்று கொண்டிருந்தபோது அவரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி காத்தமுத்து(35) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பி ஓடி விட்டார்.

    கடலூர்:

    மாற்றுதிறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த மாற்று திறனாளி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போதுஅதே பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி காத்தமுத்து(35) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவரை தள்ளிவிட்டு சிறுமிதப்பி ஓடி விட்டார்

    இது குறித்து மகளிர் போலீஸ நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கரும்பு வெட்டும்தொழிலாளி காத்த முத்துவைதேடி வந்தனர்.கடந்த ஓராண்டு காலமாக தலை மறைவாக இருந்த காத்தமுத்து நேற்று புதுப்பேட்டை பஸ் நிறுத்தம்அருகில்நின்று கொண்டிருந்தபோது அவரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×