search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    என்ஜினீயரிங் மாணவி வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து பலாத்காரம்- காதலன் வெறிச்செயல்
    X

    என்ஜினீயரிங் மாணவி வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து பலாத்காரம்- காதலன் வெறிச்செயல்

    • கல்லூரி மாணவியும், அனுதீப்பும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
    • அனுதீப்பிடம் இருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், துக்கிராலாவை சேர்ந்தவர் அனுதீப் (வயது 25). இவரது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். தாய் வெளியூரில் தங்கி வீட்டு வேலை செய்து வருகிறார். இதனால் அனுதீப் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    இவரது பக்கத்து ஊரை சேர்ந்த 23 வயது மாணவி காக்கிநாடாவில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    கல்லூரி மாணவியும், அனுதீப்பும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி கல்லூரி மாணவியின் விடுதிக்கு சென்ற அனுதீப் மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    அப்போது உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி ஆசைக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தினார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை ஒரு அறையில் தள்ளி பூட்டினார்.

    இதையடுத்து வெளியே சென்ற அனுதீப் மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு மாணவியை வற்புறுத்தினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்த எண்ணெய்யை கொதிக்க வைத்து மாணவியின் கை கால்களில் ஊற்றினார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். பின்னர் மாணவியை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து 13 நாட்களாக பலாத்காரம் செய்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார்.

    அனுதீப்பிடம் இருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். மாணவியை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து ஏலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அனுதீப்பை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    தனியாக இருந்ததால் போதைக்கு அடிமையாகி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

    போதைக்கு அடிமையான அவர் பல பெண்களை மயக்கி பலாத்காரம் செய்து அவர்களது வாழ்க்கையை சீரழித்து உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×