என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பளம் கேட்க சென்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கட்டிட தொழிலாளி
    X

    சம்பளம் கேட்க சென்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கட்டிட தொழிலாளி

    • வேலை செய்யும் இடத்தில் வைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.
    • போலீசார் கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் நெகமம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் எனது ஊரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயன் (வயது 45) என்பவருடன் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். வேலை செய்யும் இடத்தில் வைத்து அவர் எனது கை பிடித்து இழுத்தும், கட்டி பிடித்து முத்தம் கொடுத்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். இது குறித்து நான் கட்டிட உரிமையாளரிடம் தெரிவித்தேன். அவர் விஜயனை கண்டித்து அனுப்பினார்.

    சம்பவத்தன்று நான் சம்பள பணம் வாங்குவதற்காக விஜயனின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அங்கு இருந்த அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த நான் சத்தம் போட்டேன். அப்போது நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டினார். எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் கட்டிட தொழிலாளி விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் வேலை செய்யும் இடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×