search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்கேற்பு"

    • கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
    • அரசு அலுவலர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் நாலு கோட்டை ஊராட்சி யில் அமைந்துள்ள 7 சங்கிலி தொடர் கண்மாய்களை சின்ஜென்டா நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் செயலாக்கத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் மடை சீரமைப்பு, கழுங்குகள் சீரமைப்பு, வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால் தூர் வாருதல், கண்மாய் நீர் பிடிப்பு பகுதி தூர்வாருதல் மேலும் அனைத்து கண்மாய் கரையிலும் 1000 மரக்கன்று கள் நடுதல் போன்ற பணிகளை கடந்த ஆண்டு அப்போதைய கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையொட்டி அதன் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன் நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண் டன், சின்ஜென்டா நிறு வன இயக்குனர் வைத்தியநாதன், தமிழ்நாடு வர்த்தக மேலாளர் ஜெயமோகன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை இயக்குனர்-மேலாளர் கொண்டராதாகிருஷ்ணா, துணைத்தலைவர் கண்ணன், துணைப்பொதுமேலாளர் ஏழுமலை, திட்டமேலாளர் கார்த்திக், சமூக ஒருங்கி ணைப்பாளர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலகர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கண்மாய் கரைகளில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    • அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பங்கேற்றார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பஸ்நிலையம் அருகே தி.மு.க. அரசை கண்டித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட அவைத்தலைவர் ஜெய பெருமாள், முனியாண்டி, முத்துராமலிங்கம், சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் கலாவதி சந்திரன், பனைக்குடி கூட்டுறவு சங்கதலைவர் ராஜா, பட்டமங்களம் கூட்டுறவு சங்கத்தலைவர் மனோகரன், வரிசையூர் வீர மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் பேசுகை யில், நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டிடப்பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவா ரணம் வழங்க வேண்டும்.

    நரிக்குடி அருகே உள்ள உண்டுறுமி கிடாக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக்கழிவுகள் எரியூட்டும் நிலையத்தை நிரந்தரமாக தடை செய்து மூட வேண்டும் என்றார்.

    • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 1 கோடி பேர் பங்கேற்றனர்.
    • இந்தியாவே திரும்பி பார்க்கிற வகையில் இந்த மாநாடு அமையும்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் வார்டு எண் 94,95, 96, மதுரை கிழக்கு தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த இலக்கியேந்தல், பனைக்குளம், ராஜாக்கூர், திண்டியூர், கருப்பாயூரணி,, வெள்ளி யங்குளம், அரும்பனூர், காதக்கிணறு, புதுப்பட்டி, சிட்டம்பட்டி, பூலாம்பட்டி, கொடிக்குளம், நரசிங்கம், ஒத்தக்கடை, திருமோகூர், புது தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

    திருப்பரங்குன்றத்தில் நடந்த முகாமிற்கு திருப்ப ரங்குன்றம் கிழக்குப்பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தற்போது தி.மு.க. விழுந்து கொண்டு வருகிறது. நமக்கு இது சரியான தருணமாகும். தி.மு.க. தனது பலவீனத்தை மறைக்க உறுப்பினர் சேர்க்கையை தேடிச் செல்கிறது. ஆனாலும் யாரும் சேரவில்லை. இன்றைக்கு அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் மக்கள் ஆர்வமாக இணைந்து வருகின்றனர். இதன் மூலம் நாம் பலம் வாய்ந்த இயக்கமாக உள்ளோம்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்ப ரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் தலா 1 லட்சம் வீதம் 3 லட்சம் உறுப்பி னர்களை சேர்த்து விட வேண்டும். அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் எடப்பாடியாரின் கரங்களால் விருதுகள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் அனுமதி இல்லாமல் மதுபார்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் பல லட்சம் ரூபாய் வரை சென்று கொண்டி ருக்கிறது. எத்தனை மது பார்கள் உரிமை பெற்றது? என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க, கலாச்சார மிக்க செங்கோல் வைப்பது நமக்கு பெருமையாகும்.

    வருகிற ஆகஸ்டு 20-ந் தேதி மதுரை ரிங் ரோடு அருகே 50 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் மாநாடு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதில் ஒரு கோடி தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவே திரும்பி பார்க்கிற வகையில் இந்த மாநாடு அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவில் தி.மு.க. பங்கேற்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டிளித்தார்.

    மதுரை

    மதுரை பரவை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஐ.டி. ரெய்டு மிக தாமதமாக நடக்கிறது. இது முன்கூட்டியே நடந்தி ருந்தால் கள்ளச்சாராய மரணம், போலி மதுவால் ஏற்பட்ட மரணம் உள்ளிட்ட வை நடந்திருக்காது. சோத னைக்கு வந்த ஐ.டி. அதிகாரிகளை தாக்குவதன் மூலம் தி.மு.க. வன்முறை கட்சி என்பதை காட்டுகிறது.

    முதல்-அமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்று பயணம் இன்ப சுற்றுலா போல தான் இருக்கிறது. அவர் முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை. முதலீடு செய்வதற்கு சென்றுள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் பட எம்.ஜி.ஆர்., போல வித விதமான உடைகளை அணிந்து கொண்டு பின்னி எடுக்கிறார். அதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. தி.மு.க. ஒரு விளம்பர அரசு, செயல்படுகிற அரசு அல்ல.

    காவல்துறை டி.ஜி.பி.,யை சுதந்திரமாக செயல்பட விடவில்லை.அவருடைய கை கட்டப்பட்டுள்ளது. அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழ்நாட்டில் மதுவால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.

    புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்வில் தி.மு.க. பங்கேற்க வேண்டும். செங்கோல் மீது மத சாயம் பூச கூடாது. செங்கோல் விஷயத்தில் உண்மையான தமிழனாக நாம் பெருமைப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி பெறுவதற்கு உதவாத தி.மு.க. இன்று அவர்களை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என சொல்வது வெளிவேஷம்.

    ஐ.பி.எல்., போட்டியில் சி.எஸ்.கே தான் வெற்றி பெற வேண்டும். தோனி கோப்பையை கைப்பற்ற வேண்டும். ''தல'' என சொல்லப்படுபவர்கள் யாரும் தல இல்லை.உண்மையான தல தோனி ஜெயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கமுதி அருகே நடந்த கபடி போட்டியில் 43 அணிகள் பங்கேற்றனர்.
    • சாமிபட்டி அணி முதல் பரிசை பெற்றது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சேர்ந்த கோட்டை கிராமத்தில், ஆண்டுதோறும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கபடி போட்டி நடத்தப்படும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் பல்வேறு விளை யாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டு 42-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், லக்கி கார்னர் உள்பட பல போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரியவர்கள், சிறியவர்கள்,பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரசு பணியில் புதிதாக இணைந்தவர்கள் மற்றும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுத்தொகை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    எஸ்.ஆர்.எம். கபடி குழுவினர் நடத்திய கபடி போட்டியில் சேர்ந்த கோட்டை, சாமிபட்டி, ஆலங்குளம், கலையூர், ஏனாதி ஆகிய கிராமங்கள் உட்பட ஏராளமான பகுதியிலிருந்து 43 கபடி அணிகள் பங்கேற்றன. போட்டியில் சாமிபட்டி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

    இந்த அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த சேர்ந்த கோட்டை எஸ்.ஆர்.எம். "பி" அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்க பரிசும், 3-ம் இடம் பிடித்த எஸ்.ஆர்.எம். "ஏ" அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும், 4-ம் இடம் பிடித்த ஆலங்குளம் அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திரனாக நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் செய்திருந்தனர்.

    • இலவச சேவை மையத்தை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இலவச இ-சேவை மையம் திறப்பு விழா நடந்தது.இதை மானாமதுரை எம்.எல்.ஏ.-முன்னாள் அமைச்சர் தமிழரசி திறந்துவைத்து, கணினியை இயக்கி வைத்தார். பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

    தொகுதியில் உள்ள குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம் என்று எம்.எல்.ஏ. தெரிவித்தார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், கவுன்சிலர் இந்துமதி திருமுருகன், தி.மு.க. நிர்வாகிகள் நெட்டூர் அய்யா சாமி, வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • த.மு.மு.க. எஸ்.பி.பட்டணம் கிளை சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • மாநில செயலாளர் சாதிக் பாட்சா பங்கேற்றார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எஸ்.பி.பட்டணம் கிளையின் சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட துணை செயலாளர் நிசார் பாய் தலைமையில் நடந்தது.

    த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு த.மு.மு.க.வின் சேவைகள், கடந்தகால சேவைகள் பற்றி பேசினார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஜாவித் அஸ்ஸாம் கொடி ஏற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் யாண்பு இப்ராஹிம், முன்னாள் ஒன்றிய செயலாளர் வசந்தம் ரகுமான், தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர் பரக்கத் அலி, மைதீன், மங்களக்குடி கிளை தலைவர் ஜாகிர், புதுவலசை கிளை துணை செயலாளர் செயலாளர் முகம்மது அப்சர், பனைக்குளம் செய்யது இப்ராஹிம், எஸ்.பி.பட்டினம் கிளை தலைவர் பஷீர் அலி, கிளை செயலாளர் ஹாஜி முகம்மது, ஒன்றிய பொருளாளர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர் கவிஞர் பாக்கி, ம.ம.க. கிளை செயலாளர் ஜாவித், இளைஞர் அணி செயலா ளர் புஹாரி, ம.ம.க. கிளை செயலாளர் அப்துல்லாஹ், இஸ்லாமிய பிரசார பேரவை செயலாளர் முஹம்மது இலியாஸ், விளையாட்டு குழு கிளை செயலாளர் மிஸ்பா, கிளை செயலாளர் அபுத்தாஹிர், கிளை நிர்வாகி அப்சர், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா கடலூர் அடுத்த கிளிஞ்சிகுப்பத்தில் நடைபெற்றது
    • கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்

    கடலூர்:

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா கடலூர் அடுத்த கிளிஞ்சிகுப்பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சம்பத், பன்னீர், ராஜேஷ், சக்திமுருகன், ஏழுமலை, ராம்பிரகாஷ், லிங்கேஷ், சித்திரவேல், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
    • புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

    மதுரை

    மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் 17-வது பட்டமளிப்பு விழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரி தலைவர் மற்றும் தாளாளர் எம்.எஸ்.ஷா , தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் எம்.எஸ்.ஷகீலா ஷா, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தபசு கண்ணன், கல்வியியல் கல்லூரி முதல்வர் வெண்ணிலா ஆகியோர் பேசுகிறார்கள்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். பேராசிரியர் ராம சீனிவசான் சிறப்புரை யாற்றுகிறார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    • கடலுார் முதுநகர் ஜூம்மா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்,

    கடலூர்:

    கடலுார் முதுநகர் ஜூம்மா பள்ளி வாசலில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், டாக்டர் பிரவீன் அய்யப்பன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், கீதா குணசேகரன், தமிழரசன், சரத் தினகரன், பாரூக் அலி, சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயகுமார், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேதட குமார், கர்ணன், வக்கீல் சிவராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜ சேகர், பள்ளி வாசல் நிர்வாகிகள் காசிம் மான்பஈ, இமாம் பேஷிம்மா, இப்ராகிம் மரைக்காயர், காதர் மொய்தீன், முகமது காசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் வருகிற 24-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. முப்பெரும் விழாவில் 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.
    • ஓ.பி.எஸ். அணி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை அ.தி.மு.க. புற நகர் வடக்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளைஞரணி மாநில செய லாளர் ராஜ்மோகன், மாணவரணி துணை மாநில செயலாளர் ஒத்தகடை பாண்டியன், பேரவை மாநில இணைச்செயலாளர் சோலை குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன் பேசும்போது கூறியதாவது:-

    வருகிற 24-ந் தேதி திருச்சியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா, நிறுவனர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடை பெறுகிறது. இந்த விழா முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கை நாயகன் ஓ.பி.எஸ். கரத்தினை வலுப்ப டுத்தும் வகையில் மாநாடு போல நடைபெறும்.

    இந்த விழாவில் அனைத்து நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும். மேலும் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து வரிசையாக வாகனங்களில் அணிவகுத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

    • திருக்கோவிலூர் நகரத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் நகரத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், ஒன்றிய செயலாளர்கள் தங்கம், ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் டி.குணா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். காமில் கலந்து கொண்ட விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., உறுப்பினர் சேர்க்கை மேலிட பார்வையாளர் முன்னாள் மத்திய மந்திரி வேங்கடபதி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர். எ.வ.வே. கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை விளக்கமாக கூறினார்கள்.

    நிகழ்ச்சியில் நகர வர்த்தக சங்கத் தலைவர் கே.ஏ.ராஜா, நகராட்சி கவுன்சிலர்கள் ஐ.ஆர்.கோவிந்தராஜன், எல்.தங்கராஜ், அண்ணாதுரை, ஜல்லிபிரகாஷ், மகாலிங்கம், துரைராஜன், பிரமிளாராகவன், சண்முக வள்ளி ஜெகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வெங்கட், லதா சரவணன், தொ.மு.ச. நிர்வாகி டி.கே.சரவணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வி.சந்திரசேகரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகி என்.கே.வி.ஆதிநாராயணமூர்த்தி நன்றி கூறினார்.

    ×