search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    7 சங்கிலி தொடர் கண்மாய்கள்
    X

    விழாவில் கலெக்டர் ஆஷா அஜீத் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    7 சங்கிலி தொடர் கண்மாய்கள்

    • கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
    • அரசு அலுவலர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் நாலு கோட்டை ஊராட்சி யில் அமைந்துள்ள 7 சங்கிலி தொடர் கண்மாய்களை சின்ஜென்டா நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் செயலாக்கத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் மடை சீரமைப்பு, கழுங்குகள் சீரமைப்பு, வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால் தூர் வாருதல், கண்மாய் நீர் பிடிப்பு பகுதி தூர்வாருதல் மேலும் அனைத்து கண்மாய் கரையிலும் 1000 மரக்கன்று கள் நடுதல் போன்ற பணிகளை கடந்த ஆண்டு அப்போதைய கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையொட்டி அதன் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன் நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண் டன், சின்ஜென்டா நிறு வன இயக்குனர் வைத்தியநாதன், தமிழ்நாடு வர்த்தக மேலாளர் ஜெயமோகன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை இயக்குனர்-மேலாளர் கொண்டராதாகிருஷ்ணா, துணைத்தலைவர் கண்ணன், துணைப்பொதுமேலாளர் ஏழுமலை, திட்டமேலாளர் கார்த்திக், சமூக ஒருங்கி ணைப்பாளர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலகர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கண்மாய் கரைகளில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×