search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைபயணம்"

    • ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக அரசு மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சிக்கு ஆதரவு திரட்டவும், பலம் சேர்க்கவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடைபயணம் செல்வதற்கு திட்டமிட்டு உள்ளார்.

    இந்த நடைபயணம் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நாளை மறுநாள் (28-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா வருகை தர உள்ளார்.

    ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பரந்த நிலப்பரப்பில் பாராளுமன்ற வடிவில் மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அமருவதற்காக தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமித்ஷா, அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்களை வரவேற்று விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை நடைபயணத்தில் பங்கேற்க இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 234 தொகுதிகளிலும் 100 நாட்கள் நடைபயணம் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது.

    ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது.

    அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடைகிறது. இந்த நிறைவு நாளில் பிரதமர் பங்கேற்க இருக்கிறார். மேலும் இதில் பங்கேற்க வருமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த நடைபயண பிரசாரத்தின் போது வழிநெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கவும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டு உள்ளனர். நடைபயணத்தின் போது 11 இடங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    இந்த யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த பெட்டியில் மக்கள் தங்கள் புகார்களையும் எழுதி போடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முக்கிய இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்பட்டு அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணாமலை நடைபயணம் தொடக்கம், அமித்ஷா வருகையால் ராமேசுவரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • நடைபயணம் மேற்கொள்வது ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பக்தி முயற்சியாகும்.
    • நாட்டு மக்களுக்காக ஜெபமாலை செபித்தும், இறைவேண்டல் பாடல்கள் பாடியும் சென்றனர்.

    நாகர்கோவில் :

    இந்திய மரபில் வழிபாட்டு முறைகளில் ஒன்றாகவும், தியாகத்தின் வெளிப்பாடாகவும் மக்கள் தங்கள் சமயம் சார்ந்த புன்னிய தலங்களுக்கு நடைப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி திருத்தலம், பூண்டி மாதா கோயில், மலையாற்றூர் தோமையார் திருத்தலம் ஆகிய திருதலங்களுக்கு நடைபயணம் மேற்கொள்வது ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பக்தி முயற்சியாகும்.

    இந்திய திருநாட்டில், கேரள மாநிலம் பரணங்கா னத்தில் பிறந்து சீரோ மலபார் திருச்சபை யில் தூய துறவியாக வாழ்ந்து 1946-ம் ஆண்டு விண்ணகம் சென்ற அருட்சகோதரி அல்போன்சாவை 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந்தேதி திருத்தந்தை 16 பெனடிக்ட் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு புனிதையாக அறிவித்தார். தமிழ்நாட்டில் புனித அல்போன்சாவை பாதுகாவலியாக கொண்ட முதல் ஆலயம் நாகர்கோ வில் புனித அல்போன்சா ஆலயமாகும்.

    அல்போன்சா புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட ஆண்டு முதல் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் இத்திருத்தலம் நோக்கி நடைப்பயணம் மேற்கொ ண்டு வருகின்றனர். அந்த வகையில் இத்திருத்தலத்தின் இரண்டாம் திருவிழாவின் போது குமரி மாவட்டத்தின் தக்கலை மறைமாவட்டத் திற்கு உரிய 6 மறை வட்டங்களிலிருந்தும், தென்காசி மாவட்டம் புளியறை மறை வட்டத்திலி ருந்தும் நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் அமைந்துள்ள புனித அல்போன்சா திருத்தலத்திற்கு மக்கள் நடைபயணம் வந்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.

    இதில் 1000-க்கும் மேற்பட்ட விசுவாசிகளுடன், 20-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும், 50-க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளும் கலந்து கொண்டனர். திருத்தல பயணமானது காலை 6மணிக்கு ஆரம்பமாகி காலை 11 மணிக்கு நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தை வந்து சேர்ந்தது. திருநடைப்பயணத்தின் போது திருப்பயணிகள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்தினர்க்காகவும், நாட்டு மக்கள் அனைவருக்காகவும் ஜெபமாலை செபித்தும், இறைவேண்டல் பாடல்கள் பாடியும் சென்றனர்.

    இந்த திருப்பயணத்தை தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தாமஸ் பௌவத்துப்பறம்பில் தொடங்கிவைத்தார். தக்கலை மறைமாவட்ட இளைஞர் இயக்க இயக்குநர் பேரருட்தந்தை ஜோசப் சந்தோஷ் தலைமை தாங்கி வழிநடத்தினார்.

    நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்த லத்தல்திற்கு நடைபயணமாக வந்த திருப்பயணிகளை திருத்தல பங்குத்தந்தை பேரருட்தந்தை சனில் ஜாண் பந்திச்சிறக்கல், திருத்தல துணை பங்குத்தந்தை அருட்தந்தை ஜார்ஜ் கண்டத்தில் மற்றும் திருத்தல பங்குமக்கள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் திருத்தலத்தில் திருப்பயணிக ளுக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. திருத்தல பயணிகளுக்கு திருத்தலத்தில் தேவையான வசதி மற்றும் ஏற்பாடுகளை புனித அல்போன்சா திருத்தல பங்குமக்கள் செய்திருந்தனர்.

    • குப்பைகளை வெளியே கொட்டாமல் உறிஞ்சி குழாய் மூலம் உரமாக மாற்ற வேண்டும்
    • மக்கும் குப்பைகளை குழாய் வழி உரம் ஆக்குதல் போன்ற வாசகங்களுடன் கூடிய அட்டைகள் ஏந்திச் சென்றனர்.

    கன்னியாகுமரி :

    தமிழகத்தில் முதல்முறையாக குமரி மாவட்டத்தில் குலசேகரம் பேரூராட்சி சார்பாக கான்வென்ட் சந்திப்பில் இருந்து குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்ற தலைப்பில் நடை பயணம் தொடங்கப்பட்டது. பேருராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், துணைத் தலைவர் ஜோஸ்எட்வர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு நடை பயணத்தை தொடங்கி வைத்து நடந்து சென்றார். இந்த நடைபயணம் கான்வென்ட் வழியாக அண்ணாநகர், அரசுமூடு, மணலிவிளை, செருப்பாலூர், இட்டகவேலி, புலியங்கி வழியாக கல்லடி மாமூடு வரை சுமார் 5 கி.மீட்டர் சென்றது.

    இதில் பங்கேற்றவர்கள், வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே கொட்டாமல் உறிஞ்சி குழாய் மூலம் உரமாக மாற்ற வேண்டும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அனனவரும் தவிர்க்க வேண்டும், மக்கும் குப்பைகளை குழாய் வழி உரம் ஆக்குதல் போன்ற வாசகங்களுடன் கூடிய அட்டைகள் ஏந்திச் சென்றனர்.

    நிகழ்ச்சியில் பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட அரசு வக்கீல் ஜாண்சன், பேருராட்சி தலைவர்கள் பொன் ரவி, அகஸ்டின், பொன்மனை பேருராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, ஊராட்சிமன்ற தலைவர்கள் விமலாசுரேஷ், சலேட் கிறிஸ்டோபர், திருவட்டார் பேரூராட்சி துணைத் தலைவர் சுந்தர்ராஜ் கவுன்சிலர்கள், பொது மக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உடுமலை ராஜகோபால்,தாராபுரம் வெங்கட்ராமன், திருப்பூர் இயேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்
    • லோகநாதன், லெனின், ஈஸ்வரமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் பல்லடம் சங்க அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய நிர்வாகிகள் பல்லடம் சுப்பிரமணி,உடுமலை ராஜகோபால்,தாராபுரம் வெங்கட்ராமன், திருப்பூர் இயேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பல்லடம் ஒன்றிய செயலாளர் வை.பழனிச்சாமி வரவேற்றார். திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார் விளக்க உரையாற்றினார். பின்னர் இந்தக் ஆலோசனைக் கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் ஏற்பட்டு வரும் நீர் பற்றாக்குறையை போக்கிடவும், பாசன விவசாயிகள் பாதிப்பு இல்லாமல் பயிர் செய்து உணவு உற்பத்தியை பெருக்கிடவும், ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டங்களை விரைவாக நிறைவேற்றிட வேண்டும் என திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    அரசு தரப்பில் அவ்வ ப்போது நிபுணர் குழு அமைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிட ப்படுகிறது. ஆனாலும் இந்த திட்டத்தின் அவசியம் குறித்து போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே இனியும் தாமதம் செய்யாமல் இந்த அணைத்திட்ட ங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் "நம்ம நல்லாறு நடைபயணம்" வருகிற ஜூன் 10, 11, 12 தேதிகளில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் துவங்கி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம் ஒன்றியங்கள் வழியாக உடுமலையை அடைந்து கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. 10-ந்தேதி துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், த.வி.ச மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு மற்றும் 12-ந்தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் த.வி.ச. மாநில தலைவர் பெ.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள். எனவே இந்த நடைபயணத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் திருப்பூர் மாவட்ட குழு கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அருண்பிரகாஷ், லோகநாதன், லெனின், ஈஸ்வரமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்குசி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நடைபயணம் நடத்தினர்.
    • 7 குழுவினர் 2700 கி.மீ. தூரம் நடைபயணம் செய்கிறார்கள்.

    மானாமதுரை

    உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 7 குழுவினர் 2700 கி.மீ. தூரம் நடைபயணம் செய்கிறார்கள். இதன் ஒரு குழுவிற்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் மாவட்டத் தலைவர் வீரையா தலைமையில், செயலாளர் சேதுராமன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார், மாநில செயலாளர்கள் தங்கமோகன், சிவாஜி, மாநிலக்குழு உறுப்பினர் சிங்காரம் ஆகியோர் தலைமையில் வந்த நடைபயணக்குழுவிற்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, துணைத் தலைவர் லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்க பூபதி, ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    நடைபயண நோக்கங்களை விளக்கி மாநில துணைப் பொதுச் செயலாளர் குமார் பேசினார்.

    • நடைப்பயணத்தால் உடலுக்கு ஏற்படும் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு களைப் பற்றி விழிப்பு ணர்வை ஏற்படுத்துவ தற்காக உலக இரத்த அழுத்த தினம் ஆண்டு தோறும் மே 17-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பாக ரத்த அழுத்த விழிப்புணர்வு நடைபயணம் இன்று நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே.இனியன், மருத்துவமனையின் மூத்த நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.ரமேஷ்பாபு, டாக்டர் அக்சயா இனியன், டாக்டர் கே.மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு இருந்து தொடங்கிய நடைபயணத்மாதை நகராட்சி மேயர் சண்.ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பொதுமக்கள், மாணவர்கள், டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடைப்பயணமாக புறப்பட்டனர்.

    அப்போது நடைப்பயணத்தின் அவசியம் குறித்தும், நடைப்பயணத்தால் உடலுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும், உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், அதை எவ்வாறு குணப்படுத்துவது (அல்லது) வாழ்கை முறையினால் கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து பொது மக்களுக்கு தெளிவாக விளக்கி கூறப்பட்டது.

    இந்த நடைப்பயண மானது தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் வழியாக சுமார் 3 கி.மீ. சென்று மீண்டும் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி நுழைவு வாயிலில் முடிவடைந்தது.

    நடைப்பயணத்தில் பங்கேற்ற அனைவரும் உயர் இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாடாக வைக்கப்படும் என்ற எடுத்துக் கொண்டனர்.

    நடைப்பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

    முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேயர் சண்.ராமநாதனுக்கு, ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே. இனியன் நினைவு பரிசு வழங்கினார்.

    • கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு தி.மு.க. துணை நிற்கும் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்
    • கூட்டத்திற்கு மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார்

    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் பா.ஜ.க.வை அகற்றுவோம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உறையூர் குறத்தெருவில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இதனை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்கு நடைபெ்றற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்திற்கு மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் சிவா வரவேற்றுப் பேசினார். பொதுச்செயலாளரும், கவுன்சிலருமான சுரேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் சுரேஷ் முத்துசாமி, முருகன், பார்வதி, அஞ்சுகம். சையது அபுதாகிர், ராஜா, ராஜலிங்கம், அண்ணாதுரை. திராவிட மணி. இப்ராஹிம், முத்துலட்சுமி, கருணாகரன், சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. பத்மாவதி, மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர், கவுன்சிலர் பைஸ் அகமது, விடுதலை சிறுத்தை கட்சி அருள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஹபிபுர் ரஹ்மான், சி.பி.ஐ. மாநில குழு உறுப்பினர் ஞானதேசிகன், தி.க. மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், சி.பி.ஐ. மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் சொக்கி சண்முகம், செல்வகுமார், சிவசூரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    மேற்கு பகுதி துணை செயலாளர் முருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், பகுதி செயலாளர்கள் நாகராஜன், இளங்கோ, தில்லைநகர் கண்ணன், காங்கிரஸ் எத்திராஜ், ம.தி.மு.க., பெல் ராஜமாணிக்கம், ஆசிரியர் முருகன், கோபாலகிருஷ்ணன், ம.ம.க. இப்ராஹிம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாற்றத்தை நோக்கி என்ற புத்தகத்தை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.

    அதனை முத்தரசன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-கம்யூனிஸ்ட் கட்சிகள் தைரியமாக பா.ஜ.க.வை அகற்றுவோம் என்று எதிர்த்து வருகிறது. இதற்கு தி.மு.க.வும் முழு ஆதரவை தரும். மேற்கு தொகுதியில் ஆறு நாட்கள் நடை பயணமாக சென்று மக்கள் மத்தியில் இயக்கத்தை நடத்துகிறார்கள். இதில் எங்கள் கட்சியினர் உறுதுணையாக இருப்பார்கள். இது பயணம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். சமதர்ம சமுதாயம் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே திராவிடமாடல் ஆட்சியின் நோக்கம். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய இந்த நடைபயண இயக்கத்திற்கு தி.மு.க. துணை நிற்கும்.இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

    • எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.
    • அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கோட்டமருதூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பத்தியநாதன் மனைவி சம்மனசுமேரி (வயது 57). இவர் தனது சொந்த ஊரிலிருந்து வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று இருக்கிறார். திருக்கோவிலூர் செவலை ரோட்டின் வழியாக வீரட்டகரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டி ருந்தபோது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மோதியது.

    இதில் சம்மன சுமேரிக்கு பின் தலையில் அடிபட்டது. உடன் அவரை திருக்கோ விலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பா க்கத்தில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் அனும தித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது.
    • நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது. அத்தியூரில் தொடங்கிய நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார். இந்த பிரசார நடைபயணம் சின்னகொள்ளியூர், சிவபுரம், ஓடியந்தல் கிராமங்கள் வழியாக வாணாபுரம் பகண்டை கூட்டுரோட்டை வந்தடைந்தது. இதையடுத்து அங்கு நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமாலை, ஆட்டோ சங்கத் தலைவர் செந்தில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள் உத்தரக்கோட்டி, பாலமுருகன், அம்பிகா, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். வேளாண் விளைபொருள்களுக்கு கூடுதல் ஆதார விலை வேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின்சார சட்டத்தை திரும்பப் பெறுதல், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துத வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    • 500 கிலோ மீட்டர் தூரத்தை 15 நாட்களில் கடந்து வந்தனர்
    • தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் தேசம் காப்போம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த மேக் இந்தியா நம்பர் 1 என்ற திட்டத்தை வலியுறுத்தி நடத்தப்பட்டது

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்த மேக் இந்தியா நம்பர் 1 என்ற திட்டத்தை வலியுறுத்தி திருச்சி முதல் கன்னியாகுமரி வரை புரட்சி நடைபயணம் நடத்து முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 5-ந்தேதி திருச்சியில் இருந்து கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் தலைமையில் புரட்சி நடைபயணம் புறப்பட்டது. இந்த நடை பயணத்தை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா தொடங்கி வைத்தார். இந்த புரட்சி நடைபயணத்தின் நிறைவு விழா இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடந்தது. அதன்பின்னர் மாதவபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் புரட்சி நடை பயணத்தின் நிறைவு விழாகூட்டம் நடந்தது. திருச்சியிலிருந்து கன்னியாகுமரி வரையிலான 500 கிலோ மீட்டர் தூரத்தை இவர்கள் 15 நாட்களில் கடந்து வந்துஉள்ளனர்.

    • 36 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கி.மீ நடைபயணம் நிர்ணயம்.
    • முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம் நிர்ணயம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்னர் வீல் சங்கமும், வீ.கே.சி. பிரைடு நிறுவனமும் இணைந்து வருகிற 18-ந்தேதி காலை 7 மணிக்கு தஞ்சை பெரிய கோவிலிருந்து அனைத்து மகளிருக்கான "புடவையில் ஓர் நடைப்பயணம்", பாரம்பரிய உடைகளுக்கான கவுரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக நடத்த இருக்கிறது.

    நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைக்கிறார்.

    மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மேயர் சண். இராமநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டின் குழுத்தலைவர் டாக்டர். உஷா நந்தினி, தலைவர் டாக்டர். சோபியா மற்றும் இன்னர் வீல் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    இதில் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 4 கி.மீ நடைபயணமும், 36 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கி.மீ நடைபயணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுவர்களுக்கு முதல்பரிசாக ரூ. 7 ஆயிரத்து 500-ம், 2-ம் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரத்து 500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 1 கி.மீ தூரம் நிர்ணயம் செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆதார் அட்டையுடன் ரூ. 100 பதிவு கட்டணத்தை இன்று மாலைக்குள் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    போட்டியன்று பதிவு செய்பவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ. 200 ஆகும்.

    மேலும், கல்லூரி மாணவிகளுக்கு பதிவுக்கட்டணம் இல்லை. ஆனால், கல்லூரி அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக புடவை அணிந்து வர வேண்டும்.

    இதுகுறித்த விபரங்களுக்கு நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகவடிவு தொலைபேசி எண். 9730669869 மற்றும் புவனா தொலைபேசி எண். 9894866277 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

    • நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி. நிறுவனம் உள்ளது.
    • வானதிராயபுரத்தில் இருந்து இன்று நண்பகல் நடைபயணத்தை தொடங்கினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்க பணியினை தொடங்கி உள்ளது. இதற்காக புதிய அலகு அமைக்கப்பட உள்ளது. அதன்படி என்.எல்.சி. நிறுவனம் அந்த பகுதியில் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது,

    எனவே மாவட்ட அதிகாரிகள் என்.எல்.சி.க்கு நிலத்தை கையககப்படுத்த வந்தனர். ஆனால் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு தங்களுக்கு குடும்பத்துக்கு நிரந்தர வேலைவழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் இதற்கு அரசு செவிமடுக்கவில்லை. 

    எனவே கிராம மக்களுக்கு ஆதரவாகவும், என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த கோரியும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, இன்றும் , நாளையும் நடைபயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வானதிராயபுரத்தில் இருந்து இன்று நண்பகல் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆவேசமாக பேசினார். இதனை தொடர்ந்து அவர் கங்கைகொண்டான், ,வடக்குவெல்லூர், தென்குத்து, அம்மேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்றார். அவருடன் பா.ம.க.வினர் மற்றும் கிராம மக்கள் சென்றனர். 

    ×