search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா"

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #SAvPAK
    ஜோகனஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஆம்லா 41 ரன்னிலும், டி புருயின் 49 ரன்னிலும் அவுட்டானார். மார்கிராம் பொறுப்புடன் ஆடி 90 ரன்னில் வெளியேறினார்.

    தேனீர் இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கிய தென்ஆப்பிரிக்கா 77.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


    5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆலிவர்

    பாகிஸ்தான் தரப்பில் பாஹிம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமீர், மொகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 41 ரன்னிலும், பாபர் அசாம் 49 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் சர்ப்ராஸ் அகமது அரை சதமடித்து அசத்தினார். அவர் 40 பந்தில் 50 ரன் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 185 ரன்களில் ஆல் அவுட்டானது.

    தென்ஆப்பிரிக்கா சார்பில் டுயான் ஆலிவர் 5 விக்கெட்டும், பிலெண்டர் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் எடுத்தனர். #SAvPAK
    பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #SAvPAK
    ஜோகனஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. ஏற்கனவே, தென்ஆப்பிரிக்கா அணி 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் இன்று தொடங்கியது.
    டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கிராமும், எல்கரும் களமிறங்கினர். எல்கர் 5 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஆம்லா நிதானமாக ஆடினார். அவர்41 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய டி புருயின் அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 49 ரன்னில் அவுட்டானார்.



    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மார்கிராம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 90 ரன்னில் வெளியேறினார்.

    தேனீர் இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா வீரர்கள் நிதானமாக ஆடினர். அதன்பின் ஆட்டம் தொடங்கியதும் பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். ஹம்சா 41 ரன்னில் அவுட்டானதும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. இறுதியில், தென் ஆப்பிரிக்கா 77.4 ஓவரில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் தரப்பில் பாஹிம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமீர், மொகமது அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.  #SAvPAK
    பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய, தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 431 ரன்கள் குவித்தது.

    பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதையடுத்து, 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
     
    பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும்போது தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு தலா 10 சதவிகிதமும், கேப்டன் டு பிளசிசுக்கு 20 சதவிகிதமும் அபராதம் விதித்தது, மேலும், டு பிளசிசுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதித்துள்ளது ஐசிசி. #SAvPAK
    பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதுடன், தொடரையும் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா. #SAvPAK #DuPlessis
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா டு பிளிசிஸ் (103), மார்கிராம் (78), பவுமா (75), டி காக் (59) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 431 ரன்கள் குவித்தது.



    254 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷான் மசூத் 61 ரன்களும், ஆசாத் ஷபிக் 88 ரன்களும், பாபர் ஆசம் 72 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    இதையடுத்து, 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா இன்று களமிறங்கியது. 9.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 2 - 0 என தொடரையும் கைப்பற்றி அசத்தியது. டு பிளசிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 11ம் தேதி நடைபெறுகிறது. #SAvPAK #DuPlessis
    பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில் டு பிளசிஸ் சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 431 ரன்கள் குவித்துள்ளது. #SAvPAK #DuPlessis
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    பாகிஸ்தானின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால், பாகிஸ்தான் 75 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய ஷான் மசூத் 44 ரன்களும், கேப்டன் சர்பிராஸ் அகமது 56 ரன்களும் எடுத்தனர்.இறுதியில், பாகிஸ்தான் 177 ரன்னில் ஆல்அவுட் ஆனது.



    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர் 4 விக்கெட்டும், ஸ்டெயின் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும், பிலாண்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இதையடுத்து, தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் 78 ரன்னிலும், டு பிளசிஸ் சிறப்பாக ஆடி சதமடித்து 103 ரன்னிலும், டெம்பா பவுமா 75 ரன்னிலும், குயிண்டான் டி காக் 59 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் மொகமது அமிர், ஷஹின் அப்ரிடி தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். #SAvPAK #DuPlessis
    16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஆக்கி போட்டி புவனேஸ்வரத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. #HockeyWorldCup2018 #India #SouthAfrica
    புவனேஸ்வரம்:

    உலக கோப்பை ஆக்கி போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் நடந்த தொடக்க போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அடுத்த 2 போட்டிகள் 2 ஆண்டுகள் இடைவெளியிலும், 4-வது போட்டி 3 ஆண்டுகள் இடைவெளியிலும் நடைபெற்றது.

    1978-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை ஆக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.



    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி டிசம்பர் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் 16 நாட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் இடத்தில் உள்ளதுமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா அணிகளும், ‘சி’ பிரிவில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பெல்ஜியம், 5-வது இடத்தில் இருக்கும் இந்தியா, கனடா, தென்ஆப்பிரிக்கா அணிகளும், ‘டி’ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். கடைசி இடம் பெறும் அணிகள் கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறும்.

    ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் கிராஸ் ஓவர் முறையில் மற்ற பிரிவில் 2-வது, 3-வது இடத்தை பெறும் அணியுடன் ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் 4 அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். வருகிற 9-ந் தேதியுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. 2-வது சுற்று ஆட்டங்கள் வருகிற 10, 11-ந் தேதிகளில் நடக்கிறது. வருகிற 12, 13-ந் தேதிகளில் கால்இறுதி ஆட்டமும், வருகிற 15-ந் தேதி அரைஇறுதி ஆட்டமும், வருகிற 16-ந் தேதி இறுதிப்போட்டியும் நடை பெறுகிறது.

    மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பை உச்சி முகர்ந்து இழந்த பெருமையை மீட்டெடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான இந்திய அணி உலக கோப்பையை ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அஜித் பால்சிங் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பிறகு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதிகபட்சமாக 5-வது இடத்தையே பெற்றுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது.

    இந்த உலக கோப்பை போட்டி தொடரில், தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகியவை இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், துடிப்பு மிக்க இளம் வீரர்களும் சம அளவில் இடம் பிடித்துள்ளனர். 2016-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த 7 இளம் வீரர்கள் இந்த உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். தடுப்பு ஆட்டத்தில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தினால் இந்திய அணி சாதிக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    உலக கோப்பை போட்டியையொட்டி ஒடிசா மாநிலம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த போட்டிக்காக ஒடிசா மாநில அரசு ஏறக்குறைய ரூ.82 கோடி செலவிட்டுள்ளது. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் மற்றும் வீரர்கள் தங்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெல்ஜியம்-கனடா (மாலை 5 மணி), இந்தியா-தென்ஆப்பிரிக்கா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டதாகும். முதல் நாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    உலக கோப்பை ஆக்கி போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். 1982-ம் ஆண்டு மும்பையில் நடந்த போட்டியில் இந்தியா 5-வது இடமும், 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த போட்டியில் இந்தியா 8-வது இடமும் பெற்றது.  #HockeyWorldCup2018 #India #SouthAfrica
    ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #Australia #SouthAfrica #AUSvsSAT20
    கார்ரா:

    ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கார்ராவில் நேற்று நடந்தது. போட்டி தொடங்கும் முன்பு மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டதால் இந்த ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 27 ரன்னும், குயின்டான் டி காக் 22 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் கவுல்டர் நிலே, ஆன்ட்ரூ டை தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களே எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 38 ரன்னும் (23 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்), கிறிஸ் லின் 14 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி, கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் போட்டிக்கான கோப்பையை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
    பெர்த்தில் இன்று நடக்கும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. #ODI #SouthAfrica #Austrialia #Perth
    பெர்த்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று நடக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது. அதுவும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியா மிகவும் பலவீனமாகி விட்டது. கடைசியாக மழை பாதிப்பின்றி முழுமையாக நடந்த 18 ஒரு நாள் போட்டிகளில் 16-ல் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது. தற்போது புதிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் எழுச்சி பெறும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

    பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் காயம் காரணமாக அம்லா, டுமினி இடம் பெறவில்லை. என்றாலும் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் அந்த அணி வலுவாகவே காணப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், இந்த தொடரில் அசத்தினால் உலக கோப்பைக்கான அணியில் இடத்தை சிக்கலின்றி தக்க வைத்துக்கொள்ளலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 96 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 47-ல் ஆஸ்திரேலியாவும், 45-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் ‘டை’ ஆனது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஷான் மார்ஷ், கிறிஸ் லின், கிளைன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, மிட்செல் ஸ்டார்க் அல்லது நாதன் கவுல்டர்-நிலே, பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், எய்டன் மார்க்ராம், ரீஜா ஹென்ரிக்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டேவிட் மில்லர், பெஹர்டைன், பெலக்வாயோ அல்லது பிரிடோரியஸ், ஸ்டெயின், காஜிசோ ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.

    இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங் கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  #ODI #SouthAfrica #Austrialia #Perth 
    தென் ஆப்பிரிக்காவின் கடற்கரை நகரான டர்பன் விமான நிலையத்தில் விமான என்ஜினில் கூடுகட்டிய தேனீக்களை நிபுணர்கள் பத்திரமாக வெளியேற்றினர். #Bees #SouthAfricanPlanes
    டர்பன்:

    தென் ஆப்பிரிக்காவின் கடற்கரை நகரான டர்பன் விமான நிலையத்தில் மேங்கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது என்ஜினில் இருந்து தேனீக்கள் வெளியே வந்து பறந்தன.

    அதை பார்த்த விமானி ஒருவர் விமான என்ஜினில் சோதனை செய்தார். அங்கு தேனீ கூடு கட்டி இருந்தது தெரிய வந்தது. உடனே தேனீ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவை அங்கிருந்து அகற்றப்பட்டன. மொத்தம் 20 ஆயிரம் தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அங்கிருந்து புறப்பட வேண்டிய 3 பயணிகள் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றன. விமான என்ஜினில் தேனீக்கள் கூடு கட்டுவது இல்லை. இது மிகவும் அபூர்வமானது என நிபுணர்கள் தெரிவித்தனர். #Bees #SouthAfricanPlanes
    தென்ஆப்பிரிக்காவில் சுதந்திரத்துக்கு பிறகும் நிரந்தரமாக தங்கி இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் உள்ள நிலங்களை பறிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
    பிரிட்டோரியா:

    ஆப்பிரிக்க நாடான தென்ஆப்பிரிக்கா இந்தியா போல நீண்டகாலமாக வெள்ளைக்காரர்களின் அடிமை நாடாக இருந்து வந்தது. 1961-ல் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டாலும் வெள்ளைக்காரர்களிடம் தான் ஆட்சி இருந்து வந்தது. 1994-ல் தான் முழு சுதந்திர நாடாக உருவெடுத்தது.

    ஆனால் ஆப்பிரிக்க சுதந்திர நாடாக மாறினாலும் அங்கு வசித்த வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை. நிரந்தர குடிமக்களாக அங்கேயே உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்காவின் மொத்த மக்கள் தொகை 5 கோடிய 15 லட்சம். அதில் 8 சதவீதம் பேர் வெள்ளைக்காரர்களாக உள்ளனர். தென்ஆப்பிரிக்காவின் பெரும்பாலான சொத்துக்கள் அவர்களிடம் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக  வளம்கொழிக்கும் நிலங்கள் அனைத்தும் அவர்களிடம் தான் உள்ளது.

    அதே நேரத்தில் நாட்டின் பூர்வீக குடிமக்களான கருப்பர்கள் பலரிடம் நிலம் எதுவும் இல்லை. எனவே வெள்ளைக்காரர்களிடம் இருந்து நிலத்தை பறித்து கருப்பர்களுக்கு வழங்குவதற்கு ஏற்கனவே அரசு முயற்சிகள் மேற்கொண்டது.

    இவ்வாறு 30 சதவீத சொத்துக்களை பறிப்பது என்று திட்டமிட்டு இருந்தது. ஆனால் இதுவரை 10 சதவீத சொத்துக்கள் கூட கைப்பற்றப்படவில்லை.

    எனவே வெள்ளைக்காரர்களிடம் இருக்கும் பெரும்பாலான சொத்துக்களை பறிக்க அரசு இப்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


    இதற்காக இப்போது புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக அதிபர் ராமபோசா தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தின்படி எந்த இழப்பீடும் கொடுக்கப்படாமல் வெள்ளைக்காரர்களிடம் இருந்து சொத்துக்கள் பறிக்கப்படும். அவை நிலம் இல்லாத கருப்பர்களுக்கு அவர்களுடைய தகுதிகளின் அடிப்படையில் பிரித்து வழங்கப்படும்.

    ஆப்பிரிக்க அரசின் இந்த முயற்சியால் வெள்ளைக்காரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    அண்டை நாடான ஜிம்பாப்வே நாட்டில் இதேபோல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெள்ளைக்காரர்களின் பெரும்பாலான சொத்துக்கள் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. #ENGvIND
    தம்புல்லா:

    இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா (69 ரன்), கேப்டன் மேத்யூஸ் (79 ரன்) அரைசதம் அடித்தனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலக்வாயோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குயின்டான் டி காக் 87 ரன்களும் (78 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் பிளிஸ்சிஸ் 49 ரன்களும், அம்லா 43 ரன்களும் விளாசினர்.

    வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் வருகிற 5-ந்தேதி கண்டியில் நடக்கிறது.  #SriLanka #SouthAfrica #2ndODI  #கிரிக்கெட்  #தென்ஆப்பிரிக்கா #இலங்கை 
    தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின் உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #DaleSteyn #SouthAfrica

    தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின். காயத்தால் அவதிப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்.

    இந்த நிலையில் 2019-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாட முயற்சிப்பேன். உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை என்றார். #DaleSteyn #SouthAfrica
    ×