என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா"

    • முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக், அர்ஸ்தீப் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
    • மறுமுனையில் பிரெவிஸ் கண்ணும் கருத்துமாக விளையாடினார்.

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    திலக் வர்மா 26 ரன்னும், அக்சர் படேல் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 28 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், லூதோ சிபம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

    முதல் ஓவரின் 2-வது பந்திலேயே டி காக், அர்ஸ்தீப் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அர்ஸ்தீப் பந்துவீசிய 2-வது ஓவரில் ஸ்டப்ஸ் 14 ரன்களில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரம் 14 ரன்னில் சுருண்டார். டேவிட் மில்லர் 1 ரன், டோனோவன் பெரீரா 5 ரன்கள், மார்கோ ஜான்சன் 12 ரன்கள் மட்டும் ஸ்கோர் செய்து வெளியேற மறுமுனையில் பிரெவிஸ் கண்ணும் கருத்துமாக விளையாடினார்.

     ஒரு வழியாக அவரும் 22 ரன்களில் மூட்டையை கட்ட 12.3 ஓவரில் 76 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வெற்றியை பறிகொடுத்தது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.   

    • 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது.
    • 2015-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை.

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பிப்ரவரி, மார்ச் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி மொத்தம் பத்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. அவற்றில் இந்த தொடரும் ஒன்று. உலகக் கோப்பை போட்டிக்கான கனகச்சிதமான அணியை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் பக்கபலமாக இருக்கும் என்பதால் அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக எட்டு 20 ஓவர் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. இதில் ஆசிய கோப்பை மற்றும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் அடங்கும். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளனர். மற்றபடி அணியில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. கேப்டன் சூர்யகுமார் யாதவின் பார்ம் தான் சற்று கவலைக்குரியதாக உள்ளது. அவர் கடைசியாக களம் கண்ட 18 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரும் கணிசமாக ரன் குவித்தால் இந்தியாவின் பேட்டிங் வரிசை இன்னும் வலிமையடையும். 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா சூப்பர் பார்மில் உள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய அவர் அண்மையில் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 பந்துகளில் 148 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இந்த தொடரிலும் அவரது அதிரடி ஜாலத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். பும்ரா இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 100 விக்கெட் மைல்கல்லை எட்டுவார். விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா இடையே போட்டி நிலவுகிறது.

    கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இப்போது ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் இருவரையும் பார்ப்பதற்கு நல்ல ஆரோக்கியத்துடன், உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யாவின் வருகை அணியை சரியான கலவையில் வைத்துக் கொள்வதற்கு வழிவகுக்கும். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் புதிய பந்தில் அருமையாக பந்து வீசினார். அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும்.

    2026-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான எங்களது தயாரிப்பு, 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற உடனே தொடங்கி விட்டது. அதில் இருந்து சில புதிய விஷயங்களை முயற்சித்து பார்த்துள்ளோம். அவை அணிக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது. கடைசியாக விளையாடிய 5-6 தொடர்களில் ஒரே மாதிரியான அணி கலவையுடன் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். அதாவது அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்ததில்லை. எல்லாமே நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதை தொடருவோம்' என்றார்.

    தென்ஆப்பிரிக்க அணி எய்டன் மார்க்ரம் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. டிவால்ட் பிரேவிஸ், குயின்டான் டி காக், கார்பின் பாஷ், ரீஜா ஹென்ரிக்ஸ் என 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய அதிரடி பட்டாளங்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். மூத்த பேட்ஸ்மேன் டேவிட் மில்லர், வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு வந்துள்ளனர். கேஷவ் மகராஜ், மபகா, இங்கிடி, மார்கோ யான்சென் ஆகியோர் பந்து வீச்சு தாக்குதலுக்கு ஆயத்தமாக உள்ளனர்.

    2015-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வேட்கையில் உள்ளனர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில், 'ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன். சிறந்த வீரர். உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். தனிநபராக அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய திறமைசாலி. அவரது விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவோம் என்று நம்புகிறேன். இந்த போட்டிக்கு என்று பிரத்யேக வியூகம் எதுவும் தீட்டவில்லை. 20 ஓவர் கிரிக்கெட் என்றாலே குதூகலப்படுத்தும் வடிவமாகும். நாங்களும் அந்த பாணியிலேயே விளையாட விரும்புகிறோம். வீரர்கள் அழுத்தமின்றி உற்சாகமாக விளையாடி தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் இந்தியாவும், 12-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டி நடக்கும் கட்டாக்கில் இந்திய அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது. இரு தோல்வியும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சந்தித்தவையாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் அல்லது ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா அல்லது வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், மார்க்ரம், டிவால்ட் பிரேவிஸ், ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கார்பின் பாஷ் அல்லது ஜார்ஜ் லின்டே, மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், இங்கிடி, அன்ரிச் நோர்டியா.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • விசாகப்பட்டினம், கோலிக்கு ராசியான மைதானம்.
    • போட்டி நடக்கும் விசாகப்பட்டினத்தில் இந்திய அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

    நடப்பு தொடரில் இந்தியாவின் பேட்டிங் சூப்பராக இருக்கிறது. விராட் கோலி, ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல் ரன் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். ஆனால் 2-வது ஆட்டத்தில் 358 ரன்கள் குவித்த போதிலும் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சொதப்பியதால் வெற்றி வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது. இரவில் பனியின் தாக்கம் இருப்பதால் பவுலர்கள் பந்தை கச்சிதமாக பிடித்து வீச முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் எடுக்க முடிகிறது. அதாவது சூழல் 2-வது பேட்டிங்குக்கே சாதகமாக காணப்படுவதால் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் 'டாஸ்' இந்தியாவை துரத்தும் துரதிர்ஷ்டமாக இருக்கிறது. கடைசி 20 ஒரு நாள் ஆட்டங்களில் தொடர்ச்சியாக டாசில் தோற்றுள்ள இந்தியாவுக்கு இன்றைய போட்டியிலாவது அதிர்ஷ்டம் அடிக்குமா என்பதை பார்க்கலாம்.

    மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் இந்த ஆண்டில் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். அதனால் அவர்கள் வெற்றியோடு நிறைவு செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் இரு ஆட்டங்களில் முறையே 135 மற்றும் 102 ரன்கள் வீதம் எடுத்த விராட் கோலி 'ஹாட்ரிக்' சதம் விளாசுவாரா? என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். விசாகப்பட்டினம், கோலிக்கு ராசியான மைதானம். இங்கு ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் 3 சதங்கள் அடித்துள்ள கோலி மறுபடியும் சதம் கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே சமயம் தடுமாறும் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பார்முக்கு திரும்பினால் பேட்டிங் இன்னும் வலிமையடையும்.

    நமது பந்து வீச்சு தான் மெச்சும்படி இல்லை. கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 85 ரன்களை வாரி வழங்கினார். ஆனால் மாற்று வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் இந்த ஆட்டத்திலும் அவருக்கு இடம் கிடைக்கும். இந்திய அணி சொந்த மண்ணில் ஒரே பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை 1986-87-ம் ஆண்டுக்கு பிறகு இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைக்க இன்றைய மோதலில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, பிரேவிஸ், யான்சென் நல்ல பார்மில் உள்ளனர். முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். தசைப்பிடிப்பால் அவதிப்படும் நன்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜிக்கு இடமிருக்காது என்று தெரிகிறது.

    தென்ஆப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு இந்தியா வலுவாக மீண்டு வரும் என்பது தெரியும். அத்துடன் இது தொடரை தீர்மானிக்கும் ஆட்டம் என்பதால் உண்மையிலேயே சிறந்த போட்டியாக இருக்கப்போகிறது. எங்களது அணியில் சில பவுலர்கள் பேட்டிங்கும் செய்வதன் மூலம் அணியின் கலவை சரியாக அமைந்துள்ளது. அதிரடியாக ஆடக்கூடிய பிரேவிஸ், யான்சென், கார்பின் பாஷ் போன்ற வீரர்கள் எந்த தருணத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள். தற்போதைய பேட்டிங் வரிசை மீது நிறைய நம்பிக்கை உள்ளது. நாளைய தினம் (இன்று) நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.

    மொத்தத்தில் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் அனல்பறக்கும் என்று நம்பலாம்.

    போட்டி நடக்கும் விசாகப்பட்டினத்தில் இந்திய அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டம் சமனில் முடிந்தது. தென்ஆப்பிரிக்கா இங்கு இதற்கு முன்பு ஒரு நாள் போட்டியில் ஆடியதில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா

    தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, ரையான் ரிக்கெல்டன், டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி, பார்த்மேன்.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
    • இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.

    டெஸ்ட் தொடரை இழந்ததால் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணியினர் ஒரு நாள் தொடரை வெற்றியோடு தொடங்கி பரிகாரம் தேடிக் கொண்டனர். விராட் கோலியின் சதமும், ரோகித் சர்மா, கேப்டன் லோகேஷ் ராகுலின் அரைசதமும் 349 ரன்கள் குவிக்க உதவியதோடு வெற்றிக்கும் வித்திட்டது. பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் கலக்கினர். இன்றைய மோதலிலும் கோலி, ரோகித் சர்மாவின் ரன்வேட்டை தொடருமா? இந்த ஆட்டத்தோடு இந்திய அணி தொடரை சொந்தமாக்கி விடுமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

    முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் மார்கோ யான்சென் (70 ரன்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன்), கார்பின் பாஷ் (67 ரன்), ஆகியோரது அதிரடியால் இலக்கை நெருங்கி வந்தது. எக்ஸ்டிரா வகையில் அதிகமான ரன்களை (23) விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உடல்நலக்குறைவால் முதல் ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் பவுமா அணிக்கு திரும்புகிறார். அவரது வருகை அந்த அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும்.

    'பொதுவாக நான் டாப்-3 வரிசையில் ஆடுவேன். ஆனால் இப்போது எந்த இடம் காலியாக உள்ளதோ அந்த இடத்தில் களம் காணுவேன்' என பவுமா குறிப்பிட்டார். சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் சுப்ராயனுக்கு இடமிருக்காது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    போட்டி நடக்கும் ராய்ப்பூரில் இதற்கு முன்பு ஒரே ஒரு, ஒரு நாள் ஆட்டம் நடந்துள்ளது. 2023-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை 108 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா.

    தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக் அல்லது ரையான் ரிக்கெல்டன், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், நன்ரே பர்கர், பார்த்மேன்.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • தனி விமானம் மூலம் 153 பாலஸ்தீனர்கள் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையம் வந்தடைந்தனர்.
    • அதிகாரிகள் அவர்களை தரையிறங்க அனுமதிக்காமல் விமானத்திலேயே காத்திருக்க வைத்தனர்.

    150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களுடன் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமானம நிலையம் வந்த தனி விமானத்தில் (charter plane) இருந்து, அவர்களை இறங்க அனுமதிக்காததால் 12 மணி நேரம் உள்ளேயே இருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா மாநிலத்தில் உள்ள ஜோகன்னஸ்பர்க் ஓ.ஆர். டாம்போ சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை தனி விமானம் ஒன்று தரையிறங்கியது.

    இந்த விமானத்தில் 9 மாத கர்ப்பிணி உள்பட 153 பாலஸ்தீனர்கள் இருந்தனர். அவர்களிடம் இஸ்ரேல் முத்திரை கொண்ட ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தென்ஆப்பிரிக்காவில் எங்கு தங்குவார்கள் உள்ளிட்ட எந்த தகவலும் இல்லை.

    இதனால் அதிகாரிகள் அவர்களை விமானத்தில் இருந்து இறக்க அனுமதிக்கவில்லை. சுமார் 12 மணி நேரம் விமானத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் கூட தங்கவைக்கப்படவில்லை.

    சுமார் 12 மணி நேரம் கழித்து தென்ஆப்பிரிக்க மந்திரி தலையிட, அவர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர். பின்னர் தொண்டு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு தங்க இடம் கொடுக்க முன்வந்ததால், அவர்கள் தென்ஆப்பிரிக்கா தங்க அனுமதிக்கப்பட்டனர்.

    இஸ்ரேல்- காசா இடையிலான சண்டையில் காசா மக்களுக்காக தென்ஆப்பிரிக்கா குரல் கொடுத்தது. அப்படி குரல் கொடுத்த தென்ஆப்பிரிக்கா, இவ்வாறு செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு விமானங்களில் இதுபோன்று பாலஸ்தீனர்கள் வந்துள்ளனர். அவர்கள் காசாவில் இருந்து வந்தவர்களாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், இவர்களுக்கான தனி விமானம் ஏற்பாடு செய்தது யார் என்பது தெரியவில்லை.

    இந்த விமானம் கென்யாவின் நைரோபியில் தரையிறங்கிய பின்னர், ஜோகன்னஸ்பர்க் வந்துள்ளது.

    • வெள்ளை ஆப்பிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது.
    • டிரம்ப்பின் குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22, 23-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடைபெறுவது முற்றிலும் அவமானகரமானது. அங்கு வெள்ளை நிற விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டு தாக்குதல், கொலை செய்யப்படுகின்றனர்.

    அங்கு சிறுபான்மையினராக உள்ள வெள்ளை ஆப்பிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது. இதனால் அமெரிக்காவில் இருந்து ஜி 20 உச்சி மாநாட்டில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்' என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். தற்போது இந்த மாநாட்டை அமெரிக்கா முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.

    டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
    • இந்திய வீராங்கனைகள் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் வென்ற நிலையில், இந்திய வீராங்கனைகள் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

    இதனையடுத்து இணையத்தில் அமோல் முஜும்தாரின் புகைப்படங்கள் வைரலாகின. யார் இந்த அமோல் முஜும்தார் என்ற பலரும் இணையத்தில் அவரை தேடி வருகின்றனர்.

    யார் இந்த அமோல் முஜும்தார்?

    * அமோல் முஜும்தார் 1974 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.

    * அமோல் முஜும்தார் தான் அறிமுகமான முதல் ரஞ்சி போட்டியிலேயே 260 ரன்கள் குவித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்த காலத்தில் உலக அளவில் அறிமுக போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    * அமோல் முஜும்தார் 171 முதல்தர போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 60 அரைசதங்களுடன் 11167 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 48.13 ஆகும். 113 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் 3286 ரன்கள் சேர்த்துள்ளார்.

    * உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய ஆடவர் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் டிராவிட், சச்சின், வி.வி.எக்ஸ். லட்சுமண் மற்றும் கங்குலி ஆகியோர் இருந்த காலத்தில் அவர் விளையாடியதே அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம்.

    * அமோல் முஜும்தார் 2014 ஆம் ஆண்டில், முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் பயிற்சியாளர் என்ற புதிய அவதாரம் எடுத்தார்

    * தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஐ.பி.எல். இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளாகவும் பணியாற்றினார்.

    * 2023 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர்கா பொறுப்பேற்றார்.

    * கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக, அவர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளார்.

    • கெய்ன்ஸ் ஸ்டேடியத்தில் சர்வதேச 20 ஓவர் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும்.
    • உடல் நலக்குறைவால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணிக்கு திரும்புகிறார்.

    மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    முதல் ஆட்டத்தில் டிம் டேவிட்டின் அதிரடி அரைசதமும், ஹேசில்வுட், பென் துவார்ஷூயிஸ் ஆகியோரது அபார பந்து வீச்சும் (தலா 3 விக்கெட்) ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடித்தந்தன. அடுத்த ஆட்டத்தில் டிவால்ட் பிரேவிசின் மின்னல் வேக சதத்தின் (56 பந்தில் 125 ரன்) மூலம் தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்தது.

    ஆஸ்திரேலிய அணியில் இரு ஆட்டத்திலும் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், கேப்டன் மிட்செல் மார்ஷ் சரியாக ஆடாதது பின்னடைவாகும். தவறுகளை திருத்திக் கொண்டு இந்த ஆட்டத்தில் அதிரடியாக ரன் திரட்ட முயற்சிப்பார்கள். உடல் நலக்குறைவால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணிக்கு திரும்புகிறார்.

    தென்ஆப்பிரிக்க அணி 2-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் தொடரை கைப்பற்ற வரிந்து கட்டுகிறது. இதனால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    கெய்ன்ஸ் ஸ்டேடியத்தில் சர்வதேச 20 ஓவர் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். ஒரு நாள் போட்டி நடந்து கூட 3 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால் இதன் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம். இருப்பினும் இங்கு நடந்த பிக்பாஷ் 20 ஓவர் போட்டிகளின் போது ஓரளவு சுழற்பந்து வீச்சு எடுபட்டதால் இரு அணியினரும் சுழலுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஆரோன் ஹார்டி, பென் துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட் அல்லது மேத்யூ குனேமேன்.

    தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ரையான் ரிக்கெல்டன், லுவான் டிரே பிரிட்டோரியஸ், டிவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வான்டெர் டஸன், கார்பின் பாஷ் அல்லது ஜார்ஜ் லிண்டே, ககிசோ ரபடா, இன்கபா பீட்டர் அல்லது செனுரன் முத்துசாமி, கிவெனா மபகா, இங்கிடி அல்லது நன்ரே பர்கர்

    இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது.
    • வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    டார்வின்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டார்வினில் இன்று நடக்கிறது.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அண்மையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று அசத்திய கையோடு இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

    ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், பென் துவார்ஷூயிஸ் மிரட்டக்கூடியவர்கள். தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் விளையாடுவார்கள் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அரங்கேறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியை அந்த அணி இந்த தொடரில் இருந்தே தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் கடந்த ஜூன் மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. அதன் பிறகு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற தென்ஆப்பிரிக்கா சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் பங்கேற்ற 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்திடம் 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. அந்த தோல்வியில் இருந்து விடுபட்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் ஆர்வத்தில் உள்ளது.

    ஜிம்பாப்வேயில் நடந்த 20 ஓவர் போட்டியில் ஆடாத கேப்டன் மார்க்ரம், ரையான் ரிக்கெல்டன், வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பி இருப்பது தென்ஆப்பிரிக்க அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். மேலும் பேட்டிங்கில் டிரிஸ்டான் ஸ்டப்ஸ், லூஹான் டி பிரிட்டோரியஸ், பந்து வீச்சில் கார்பின் போஷ், லுங்கி இங்கிடி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உள்ளூர் சூழலை கச்சிதமாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடர முனைப்பு காட்டும். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்துவதை பொறுத்தே தென்ஆப்பிரிகாவின் வெற்றி வாய்ப்பு அமையும் எனலாம். வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 17 ஆட்டங்களிலும், தென்ஆப்பிரிக்கா 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், பென் துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

    தென்ஆப்பிரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), ரையான் ரிக்கெல்டன், வான்டெர் டஸன், டிவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஜார்ஜ் லிண்டே, பிரினெலன் சுப்ராயன், கார்பின் போஷ், ககிசோ ரபடா, நன்ரே பர்கர், லுங்கி இங்கிடி.

    இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி சாம்பியன் ஆகியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இந்நிலையில், தென்னாப்ரிக்க அணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " மகத்தான வெற்றி பெற்ற தென்னாப்ரிக்காவுக்கு வாழ்த்துகள். அனைத்து சவால்களையும் எதிர்த்த கேப்டன் பவுமாவுக்கு சிறப்பு பாராட்டு. அற்புதமான ஆட்டத்தால், விமர்சனம் செய்த வாய்களை அடைத்துவிட்டீர்கள்.

    எய்டன் மார்க்ரமின் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும். லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் பெற்ற வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்
    • ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர்

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    சாம்பியன் பட்டம் வென்ற பின்பு பேசிய கேப்டன் பவுமா, "ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர். சில நாட்களுக்கு முன்பு, நான் ICC HALL OF FAME அறிமுக விழாவில் கலந்து கொண்டேன். இன்னும் சில ஆண்டுகளில் ரபடா அதில் இணைந்துவிடுவார்" என்று புகாலாராம் சூட்டினார்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • தென் ஆப்பிரிக்கா அணியில் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என இ டஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இதுவரை டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறையின்படி தான் ரபடா , கேப்டன் பவுமா, லுங்கி இங்கிடி போன்ற கறுப்பின வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    பவுமா தலைமையில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.

    இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அந்த அணியால் ஐசிசி கோப்பையை வெற்றி பெற முடியவில்லை என்று பலரும் பவுமாவை விமர்சித்தனர்.

    குறிப்பாக நிறம், உயரம் உள்ளிட்டவற்றால் பவுமா இணையத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.

    இந்நிலையில், டெம்பா பவுமாவை விமர்சித்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    முன்னதாக தனது பெயர் குறித்து பேசிய பவுமா, "என்னுடைய பாட்டி எனக்கு டெம்பா என்று பெயர் வைத்தார். அதற்கு நம்பிக்கை என்று அர்த்தம்" என கூறினார். அந்த நம்பிக்கை தான் தென் ஆப்பிரிக்கா அணியின் 27 ஆண்டு கால ஏக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது. 

    ×