என் மலர்
நீங்கள் தேடியது "one day series"
- சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
- இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
டெஸ்ட் தொடரை இழந்ததால் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணியினர் ஒரு நாள் தொடரை வெற்றியோடு தொடங்கி பரிகாரம் தேடிக் கொண்டனர். விராட் கோலியின் சதமும், ரோகித் சர்மா, கேப்டன் லோகேஷ் ராகுலின் அரைசதமும் 349 ரன்கள் குவிக்க உதவியதோடு வெற்றிக்கும் வித்திட்டது. பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் கலக்கினர். இன்றைய மோதலிலும் கோலி, ரோகித் சர்மாவின் ரன்வேட்டை தொடருமா? இந்த ஆட்டத்தோடு இந்திய அணி தொடரை சொந்தமாக்கி விடுமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் மார்கோ யான்சென் (70 ரன்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன்), கார்பின் பாஷ் (67 ரன்), ஆகியோரது அதிரடியால் இலக்கை நெருங்கி வந்தது. எக்ஸ்டிரா வகையில் அதிகமான ரன்களை (23) விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உடல்நலக்குறைவால் முதல் ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் பவுமா அணிக்கு திரும்புகிறார். அவரது வருகை அந்த அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும்.
'பொதுவாக நான் டாப்-3 வரிசையில் ஆடுவேன். ஆனால் இப்போது எந்த இடம் காலியாக உள்ளதோ அந்த இடத்தில் களம் காணுவேன்' என பவுமா குறிப்பிட்டார். சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் சுப்ராயனுக்கு இடமிருக்காது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
போட்டி நடக்கும் ராய்ப்பூரில் இதற்கு முன்பு ஒரே ஒரு, ஒரு நாள் ஆட்டம் நடந்துள்ளது. 2023-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை 108 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா.
தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக் அல்லது ரையான் ரிக்கெல்டன், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், நன்ரே பர்கர், பார்த்மேன்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.
- ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி கோப்பையை வென்றது.
ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்று 3வது ஒருநாள் போட்டி தலைநகர் ஹராரேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 44.5 ஓவர்கள் முடிவில் 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிபட்சமாக அந்த அணியின் சிகந்தர் ரசா 38 ரன்கள் அடித்தார். ஆப்கான் தரப்பில் அதிபட்சமாக ரசித்கான் 3 விக்கெட்களையும், பரூக்கி, நபி தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பின்னர் களம் இறங்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்தது. அதிபட்சமாக கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 38 ரன்கள் அடித்தார். முகமத் நபி 34 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது.
ஜிம்பாப்பே அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் வாஷ் அவுட் ஆனது அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






