search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    • சுக்கிரன் விடுதி கிராமத்தில் திடீரென குடிசையில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமானது
    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    புதுக்கோட்டை,

    கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளி. இவர் மனைவி, மகன் மற்றும் பெற்றோருடன் குடிசையில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலமுருகன் மகனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று இரவு பாலமுருகனின் குடிசையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பாலமுருகனின் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    • கண்ணூரில் இன்று தீப்பிடித்து எரிந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி 3 பயணிகள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டனர்.
    • டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து அதனை ரெயிலின் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது ஊற்றி தீவைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு எக்ஸ்கியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் கண்ணூர் ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு அருகே உள்ள 8-வது யார்டில் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்து கரும்புகை வந்தது. இதனை பார்த்த ரெயில்வே ஊழியர்கள், அந்த பெட்டிக்கு விரைந்து சென்றனர்.

    அதற்குள் அந்த பெட்டி தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றும் பலமாக வீசியதால் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சிறிது நேரத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. உடனே ரெயில்வே ஊழியர்கள் இதுபற்றி கண்ணூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அங்கிருந்து வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். என்றாலும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் 2 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 3 வாகனங்கள் ரெயில் பெட்டியில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. என்றாலும் ரெயில் பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை என தெரிகிறது.

    இதற்கிடையே தகவல் அறிந்து ரெயில்வே உயர் அதிகாரிகளும், கண்ணூர் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயில் எரிந்து நாசமான ரெயில்பெட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கண்ணூரில் இன்று தீப்பிடித்து எரிந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி 3 பயணிகள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டனர். டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து அதனை ரெயிலின் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது ஊற்றி தீவைத்தார்.

    இதில் 3 பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 9 பேர் தீக்காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்திற்கு பின்னணியில் சதிவேலை இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். மத்திய உளவு துறையும் இதுகுறித்து ரகசிய விசாரணையில் இறங்கியது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தான், பயணிகள் எரித்து கொல்லப்பட்ட அதே ரெயிலின் பெட்டி இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது, ரெயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாமா? என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

    இதையடுத்து தீ விபத்து நடந்த பகுதிக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சென்று சோதனை செய்தனர். மேலும் ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையைும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்பின்பே ரெயில் பெட்டி எப்படி தீப்பிடித்து எரிந்தது, இதன் பின்னணியில் சதி வேலை உள்ளதா? என்பது குறித்து தெரியவரும்.

    • கொட்டப்பட்டு உர மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
    • ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து வீரர்கள்

    திருச்சி,

    திருச்சி கொட்டப்பட்டு அருகில் இருக்கும் ஜெ.ஜெ. நகர் பகுதியில் மாநகராட்சியின் மண்டலம் 3. நுண் உர செயலாக்க மையம் உள்ளது.இந்த மையத்தில் பொன்மலை பகுதியை சேர்ந்த குப்பைகள் கொண்டுவரப்பட்ட தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து எடுப்பதற்கு என்று தனியாக பிளாஸ்டிக் குடோன் உள்ளது.இந்த நிலையில் இன்று நுண் உர மையத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது..இந்த தீ மள மள என பரவியது.இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினார்கள் .இது குறித்து உடனடியாக திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு தகவல் அறிந்து 46 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ், மாநகராட்சி உதவி பொறியா ளரும் மற்றும் ஊழியர்களும் தீயை அணைக்கும் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.உரிய நேரத்தில் தீயணை ப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ கட்டுப்பா ட்டுக்குள் கொண்டு வர ப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தீயணை ப்பு துறையினர் மற்றும் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரசோழபுரம் சுங்கச்சாவடி அலுவலக பகுதியில் சாலையில் வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது
    • அப்போது கொதிகலன் திடீரென வெடித்து சிதறி தீ பற்றி எறிந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் சுங்கச்சாவடி அலுவலக பகுதியில் சாலையில் வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை மினி லாரியில் வெள்ளை கோடு போடுவதற்கான பவுடர்களை கொதிகலன் மூலம் சூடேற்றும் பணி நடந்தது.  அப்போது கொதிகலன் திடீரென வெடித்து சிதறி தீ பற்றி எறிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மினி லாரியில் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். மேலும் இந்த விபத்தில் கொதிகலன் சூடேற்றும் பணியில் ஈடுபட்டு இருந்து படுகாயமடைந்த கும்பகோணம் மாவட்டம் சோழபுரம் அருகே மானப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 48), பாண்டியன் மகன் சுந்தர் (22) ஆகியோரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலையில் வெள்ளை கோடு போடும் பணியில் ஈடுபட்டபோது லாரியில் இருந்த கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் 2- பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கல்லக்குடி சுங்கச்சாவடியில் பரபரப்பு
    • திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

    திருச்சி,

    ராமேஸ்வரத்திலிருந்து அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு ஒரு ராட்சத கிரேன் வாகனம் வந்து கொண்டிருந்தது. இதனை உத்திர பிரதேச மாநிலம் ஜோகன்பூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கிரேன் வாகனம் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி அருகே உள்ள கீழரசூர் சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தபோது அந்த கிரேன் வாகனத்தின் எஞ்சினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த புள்ளம்பாடி மற்றும் டால்மியாபுரம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர்கள் பாரதி, சிவக்குமார் தலைமையில் அசாருதீன், ரமேஷ், குமார், கனகராஜ், அருண்ராஜ்,பிரகாஷ் உள்ளிட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து நுரை கலவையை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கிரேன் வாகனம் முற்றிலும் இருந்து நாசமானது. தீ விபத்துக்குள்ளான ராட்சத கிரேன் வாகனம் 200 டன் எடை கொண்டது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அன்னவாசலில் வேதனை சம்பவம்
    • 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து அன்னவாசல், இலுப்பூர், புதுக்கோட்டை என பல பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புதுறை வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் தீயணைப்பு பணிக்கு உதவி செய்தனர். பெரும்பாலானவர்கள் தீ பற்றி எரிவதையும் அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க போராடுவதையும் தங்களது செல்போன்களில் படம் எடுப்பத்திலேயே குறியாக இருந்தனர். தீப்பற்றி எரியும் வேலையில் அதனை அணைக்க முயற்சிக்காமல் செல்போனில் படம் எடுக்கும் மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டது வேதனைக்குரியதாக இருந்தது.இயற்கையை காக்கும் போராட்டத்தில் மனித சமுதாயம் இதுபோன்ற நிலைக்கு சென்றது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    • மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது.
    • வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திருக்குன்றம் கிராமத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்ந்த கனமழையால் காற்று கொட்டாய் பகுதியில் வசிக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது . வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் பணம் 4 பவுன் நகை ,நிலத்தின் பத்திரம் மோட்டார் சைக்கிள், சைக்கிள், வெங்காய மூட்டைகள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு2 லட்சத்திற்கு மேல் எனக் கூறப்படுகிறது. இன்று காலை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதய சூரியன் எரிந்து போன வீட்டை நேரில் பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு அரசு மூலம் புதிய வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணி மாறன் ,தாசில்தார் இந்திரா, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசி பாண்டியன் ,துணைத் தலைவர் தன பாலகிருஷ்ணன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சந்திரா (வயது 60). இவர் தனது வீட்டில் தியாகதுருகத்தை சேர்ந்த செல்வியுடன் (58) சேர்ந்து கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 60). இவர் தனது வீட்டில் தியாகதுருகத்தை சேர்ந்த செல்வியுடன் (58) சேர்ந்து கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். ராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் சந்திரா, செல்வி மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகியோர் மீது தீ பரவியது.   இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.  இதில் தீக்காயமடைந்த சந்திரா, செல்வி, கண்ணன் ஆகியோர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது பற்றி அறிந்த தாசில்தார் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    • பண்ருட்டி ஒன்றியம்பத்திரக்கோட்டைகாலனிஅம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சிவமணி(45)
    • இவரது கூரை வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி ஒன்றியம்பத்திரக்கோட்டைகாலனிஅம்பேத்கார் நகரை சேர்ந்தவர் 45) ,இவரது கூரை வீட்டில் மின்சார கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு மேலும் பரவாமல் தீஅணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார்
    • இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடி குமரக் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்.இவரது மனைவி சின்னபொண்ணு (வயது 40). இவர்களது மகன் மணிகண்டன்.  மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதனால் 2 குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இது குறித்து மகளிர் போலீசில் புகார் செய்து வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் மணிகண்டன் குடும்பத்தாரை வீட்டோடு தீ வைத்து கொளுத்தி விடுவதாக கோமதியின் தந்தை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டன் வீட்டிற்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதில் வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருந்த போதும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமாயின.

    இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கோமதியின் தந்தை முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கமலம் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்
    • நேற்று இரவு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அதன் அருகாமையில் உட்கார்ந்திருந்தார்

    கடலூர்:

    புவனகிரி அடுத்த வடக்குத்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம் (வயது 80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அதன் அருகாமையில் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது சேலை தீப்பற்றியது. இதனை மூதாட்டி கவனிக்காததால், தீ மள மளவென பரவி உடல், கை, கால்கள் முற்றிலும் எரிந்தது.

    இவரின் அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியின் முன் பகுதி மற்றும் பைக்கில் தீ பரவியதால் இரு வாகனங்களும் நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது.
    • காவேரிப்பாக்கம் போலீசார் கருகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே வழியாக வந்த பைக் வாலாஜா அடுத்த சுமைதாங்கி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியும் பைக்கும் திடீரென தீப்பற்றி எரிந்தது. லாரியின் முன் பகுதி மற்றும் பைக்கில் தீ பரவியதால் இரு வாகனங்களும் நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது.

    லாரியின் அடியில் சிக்கிய பைக் தீப்பற்றி எரிந்தது. இதனால் தீயில் சிக்கிய பைக்கில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்து இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டனர்.

    காவேரிப்பாக்கம் போலீசார் கருகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×