search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minilorry"

    • வாழைதார் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி நள்ளிரவு 12 மணிக்கு சேலம் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.
    • தொப்பூர்-வெள்ளாறு செல்லும் வழியில் உள்ள சின்னம்கம்மம்பட்டியில் மினிலாரி சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    மேட்டூர்:

    ஈேராடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வாழைதார் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி நள்ளிரவு 12 மணிக்கு சேலம் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது சேலம் மாவட்டம் தாரமஙகலம் அருகே உள்ள செலவடை பகுதிைய சேர்ந்த வல்லரசு (23), கார்த்திக் (26) ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிந்தனர்.

    தொப்பூர்-வெள்ளாறு செல்லும் வழியில் உள்ள சின்னம்கம்மம்பட்டியில் மினிலாரி சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான வல்லரசு, கார்த்திக் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முத்துசாமி (46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரசோழபுரம் சுங்கச்சாவடி அலுவலக பகுதியில் சாலையில் வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது
    • அப்போது கொதிகலன் திடீரென வெடித்து சிதறி தீ பற்றி எறிந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் சுங்கச்சாவடி அலுவலக பகுதியில் சாலையில் வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை மினி லாரியில் வெள்ளை கோடு போடுவதற்கான பவுடர்களை கொதிகலன் மூலம் சூடேற்றும் பணி நடந்தது.  அப்போது கொதிகலன் திடீரென வெடித்து சிதறி தீ பற்றி எறிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மினி லாரியில் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். மேலும் இந்த விபத்தில் கொதிகலன் சூடேற்றும் பணியில் ஈடுபட்டு இருந்து படுகாயமடைந்த கும்பகோணம் மாவட்டம் சோழபுரம் அருகே மானப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 48), பாண்டியன் மகன் சுந்தர் (22) ஆகியோரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலையில் வெள்ளை கோடு போடும் பணியில் ஈடுபட்டபோது லாரியில் இருந்த கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் 2- பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நிலை தடுமாறிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
    • சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அரியப்பம் பாளையம் நோக்கி மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 18 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு மினிலாரி நேற்று இரவு புறப்பட்டது.

    அப்போது சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஜெயசக்தி மேடு என்ற பகுதியில் சென்ற போது ஒரு வளைவில் திரும்ப டிரைவர் திடீர் பிரேக் போட்டார்.

    இதில் நிலை தடுமாறிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் மினி லாரியில் இருந்த 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×