search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    • மூலிமங்கலம் பகுதியில் தீப்பிடித்து எரிந்து தென்னை மரங்கள் நாசமானது
    • காய்ந்த செடி, கொடிகளில் தீப்பிடித்ததால் தென்னை மரங்கள் நாசம்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் மூலமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (50).விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்களை பயிர் செய்துள்ளார். இந்நிலையில் தென்னை மரங்கள் உள்ள பகுதியில் ஏராளமான செடி கொடிகள் முளைத்து காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென காய்ந்திருந்த செடி கொடிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து. தென்ன மரங்களிலும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.அதை பார்த்த ராமமூர்த்தி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார்.இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர்.இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • கரும்புத்தோட்டம் அருகே திடீர் தீவிபத்து ஏற்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே உள்ள கரும்பு தோட்டம் அருகே இருந்த முள்வேலிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள கரும்பு தோட்டங்களுக்கும், குடியிருப்பு வீடுகளுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது
    • அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டையில் நகராட்சி குப்பை கிடங்கில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் பலமணி நேரம் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, திமுக நகர செயலாளர் செந்தில், கவுன்சிலர் கவிவேந்தன், மற்றும் பிரேம் ஆனந்த் நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து தீயை கட்டுபடுத்து பணியை துரிதப்படுத்தினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரா;களுக்கு தகவல் தரப்பட்டவுடன் இரண்டு வாகனத்திற்கும் மேலாக கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். விடிய,விடிய தீயை அணைக்க போராடி வருகின்றனர் . வருடத்திற்கு இரண்டு முறை இதுபோல் தீ விபத்து நடப்பது தொடர் கதையாக வருகிறது என அப்பகுதியின் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் தொpவிக்கின்றனர் . நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர் கள் தங்கள் இஷ்டம் போல் குப்பைகள் போட்டு வருவதால் இதுபோன்று தீ விபத்துக்கள் நடைப்பெறுவதாகவும் குற்றசாட்டுகின்றர் . தமிழக வாழ்வுரிமை கட்சி நியாஸ் இதற்கு கடுமையான கண்டனம் தொpவித்துள்ளார். குப்பை கிடங்கிற்கு சாpயான இடத்தை தோ;வு செய்யாத காரணமும், குப்பைகளை கையாளும் முறையே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்றும் சமூக விரோதிகள் செயல் என்று சொல்லி கடந்து விடமுடியாது, அதிகாரிகளும் சமூக விரோதிகளாவர் கள் என்கிறார். எனவே மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு குப்பை கிடங்கை சரிவர பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • கந்தர்வகோட்டை அருகே துணை மின் நிலையத்தில் தீ விபத்து
    • தீ விபத்தில் 30 மின்கலன்கள் எரிந்து நாசமானது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை- வெள்ளாள விடுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான 440 கேவி துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள பேட்டரி குடோனில் இன்று அதிகாலை தீ பிடித்து எரிந்தது.இதனை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவும் சூழல் ஏற்பட்ட நிலையில், கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினர் உடனடியாக அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீரர்கள் தண்ணீர் மற்றும் மணல்களை கொண்டு போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் 30 மின்கலன்கள் தீயில் எரிந்து நாசமாகின.துணை மின் நிலையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ள சூழலில் இது குறித்து மின்துறை அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது
    • தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

    திருச்சி,

    அரியமங்கலம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் பல ஆண்டுகளாக இங்கு கொட்டப்பட்டு வந்தது. இதனால் அரியமங்கலம் குப்பை கிடங்கில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடந்து வந்தது/

    இந்நிலையில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் அதில் இருந்து கிளம்பிய புகை அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகள் சென்று குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு 3 தீயணைப்பு வாகனங்களும், 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தண்ணீர் டேங்கர் லாரிகளும் சென்று, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. அரியமங்கலம் குப்பை கிடங்கில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு குப்பைகள் எரிந்ததால், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அரியமங்கலம் எஸ்.ஐ.டி, யில் இருந்து மேலகல்கண்டார் கோட்டை செல்லும் சாலையில் புகை மூட்டங்களுடன் காணப்பட்டது. தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. அப்போது தீயணைப்பு வீரர்கள் தீ பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

    • சம்பவ இடத்திற்கு கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • தீ விபத்தில் கயிறு ஆலையில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நார் பொருள்கள், டிராக்டர் எந்திரங்கள் எரிந்து சேதமாகி உள்ளன.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு அருகே உள்ள வடுகனூரில் கயிறு மில் ஒன்றை கடந்த 5 வருடங்களாக குத்தகைக்கு எடுத்து கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த ஆலையில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அருகிலேயே தங்கி உள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென தேங்காய் நார்களில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் ஆலை முழுவதும் மளமளவென தீ பிடிக்க தொடங்கி கொளுந்து விட்டு எறிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். தீ வேகமாக பரவியதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கும், போலீருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புவீரர்கள் தீயை முழுவதும் அணைத்தனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் கயிறு ஆலையில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நார் பொருள்கள், டிராக்டர் எந்திரங்கள் எரிந்து சேதமாகி உள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த சிவகிரி போலீசார் தீ விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

    • தீ அணைக்கப்பட்டாலும் கடையில் இருந்து கடும் புகை மூட்டம் வெளியே வந்து கொண்டு இருந்தது.
    • தெரு நாய் ஒன்று அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் சுற்றி சுற்றி வந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையில் உள்ள மரக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 10 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கடையில் இருந்த மரப்பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. தீ அணைக்கப்பட்டாலும் கடையில் இருந்து கடும் புகை மூட்டம் வெளியே வந்து கொண்டு இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் செல்ல முடியாமல் திணறிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் சுற்றி சுற்றி வந்தது. இதனை வேடிக்கை பார்த்தவர்கள் அந்த நாயை விரட்டிவிட்டனர். ஆனாலும் அந்த நாய் தொடர்ந்து அங்கேயே வந்தது. அப்போதுதான் கடை உரிமையாளர், கடைக்குள் நாய் குட்டி போட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த நாய்க்கு கடையின் வெளியே நின்றவர்கள் வழிவிட்டனர். உடனே அந்த தாய் நாய், புகை மூட்டத்தில் மோப்பம் பிடித்தபடி உள்ளே சென்று மரப்பலகையின் கீழ் தீயிலும் பாதுகாப்பாக இருந்த 6 குட்டிகளை ஒவ்வொன்றாக பாசத்துடன் வாயில் கவ்வியபடி வெளியே எடுத்து வந்தது. பின்னர் அந்த குட்டிகளை கடையின் அருகில் உள்ள பின்பகுதியில் மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக ஒளித்து வைத்தது. இதில் இரண்டு நாய்க்குட்டிகள் இறந்து இருந்தன. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் வருத்தம் அடைந்தனர். பின்னர் இறந்த 2 குட்டிகளையும் தனியாக எடுத்தனர். மீதியிருந்த 4 குட்டிகளுக்கும் தாய் நாய் பாசத்துடன் பாலூட்டியது.

    • சுக்கிரன் விடுதி கிராமத்தில் திடீரென குடிசையில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமானது
    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்

    புதுக்கோட்டை,

    கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளி. இவர் மனைவி, மகன் மற்றும் பெற்றோருடன் குடிசையில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலமுருகன் மகனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று இரவு பாலமுருகனின் குடிசையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பாலமுருகனின் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    • கண்ணூரில் இன்று தீப்பிடித்து எரிந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி 3 பயணிகள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டனர்.
    • டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து அதனை ரெயிலின் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது ஊற்றி தீவைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு எக்ஸ்கியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் கண்ணூர் ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு அருகே உள்ள 8-வது யார்டில் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்து கரும்புகை வந்தது. இதனை பார்த்த ரெயில்வே ஊழியர்கள், அந்த பெட்டிக்கு விரைந்து சென்றனர்.

    அதற்குள் அந்த பெட்டி தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்றும் பலமாக வீசியதால் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சிறிது நேரத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. உடனே ரெயில்வே ஊழியர்கள் இதுபற்றி கண்ணூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அங்கிருந்து வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். என்றாலும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் 2 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 3 வாகனங்கள் ரெயில் பெட்டியில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. என்றாலும் ரெயில் பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை என தெரிகிறது.

    இதற்கிடையே தகவல் அறிந்து ரெயில்வே உயர் அதிகாரிகளும், கண்ணூர் போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயில் எரிந்து நாசமான ரெயில்பெட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கண்ணூரில் இன்று தீப்பிடித்து எரிந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி 3 பயணிகள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டனர். டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்ற வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து அதனை ரெயிலின் டி 1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது ஊற்றி தீவைத்தார்.

    இதில் 3 பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். 9 பேர் தீக்காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்திற்கு பின்னணியில் சதிவேலை இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். மத்திய உளவு துறையும் இதுகுறித்து ரகசிய விசாரணையில் இறங்கியது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தான், பயணிகள் எரித்து கொல்லப்பட்ட அதே ரெயிலின் பெட்டி இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது, ரெயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாமா? என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

    இதையடுத்து தீ விபத்து நடந்த பகுதிக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சென்று சோதனை செய்தனர். மேலும் ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையைும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்பின்பே ரெயில் பெட்டி எப்படி தீப்பிடித்து எரிந்தது, இதன் பின்னணியில் சதி வேலை உள்ளதா? என்பது குறித்து தெரியவரும்.

    • கொட்டப்பட்டு உர மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது
    • ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து வீரர்கள்

    திருச்சி,

    திருச்சி கொட்டப்பட்டு அருகில் இருக்கும் ஜெ.ஜெ. நகர் பகுதியில் மாநகராட்சியின் மண்டலம் 3. நுண் உர செயலாக்க மையம் உள்ளது.இந்த மையத்தில் பொன்மலை பகுதியை சேர்ந்த குப்பைகள் கொண்டுவரப்பட்ட தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து எடுப்பதற்கு என்று தனியாக பிளாஸ்டிக் குடோன் உள்ளது.இந்த நிலையில் இன்று நுண் உர மையத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது..இந்த தீ மள மள என பரவியது.இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடினார்கள் .இது குறித்து உடனடியாக திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு தகவல் அறிந்து 46 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ், மாநகராட்சி உதவி பொறியா ளரும் மற்றும் ஊழியர்களும் தீயை அணைக்கும் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.உரிய நேரத்தில் தீயணை ப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ கட்டுப்பா ட்டுக்குள் கொண்டு வர ப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தீயணை ப்பு துறையினர் மற்றும் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரசோழபுரம் சுங்கச்சாவடி அலுவலக பகுதியில் சாலையில் வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது
    • அப்போது கொதிகலன் திடீரென வெடித்து சிதறி தீ பற்றி எறிந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் சுங்கச்சாவடி அலுவலக பகுதியில் சாலையில் வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை மினி லாரியில் வெள்ளை கோடு போடுவதற்கான பவுடர்களை கொதிகலன் மூலம் சூடேற்றும் பணி நடந்தது.  அப்போது கொதிகலன் திடீரென வெடித்து சிதறி தீ பற்றி எறிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மினி லாரியில் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். மேலும் இந்த விபத்தில் கொதிகலன் சூடேற்றும் பணியில் ஈடுபட்டு இருந்து படுகாயமடைந்த கும்பகோணம் மாவட்டம் சோழபுரம் அருகே மானப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 48), பாண்டியன் மகன் சுந்தர் (22) ஆகியோரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலையில் வெள்ளை கோடு போடும் பணியில் ஈடுபட்டபோது லாரியில் இருந்த கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் 2- பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கல்லக்குடி சுங்கச்சாவடியில் பரபரப்பு
    • திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

    திருச்சி,

    ராமேஸ்வரத்திலிருந்து அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு ஒரு ராட்சத கிரேன் வாகனம் வந்து கொண்டிருந்தது. இதனை உத்திர பிரதேச மாநிலம் ஜோகன்பூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். இந்த கிரேன் வாகனம் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி அருகே உள்ள கீழரசூர் சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தபோது அந்த கிரேன் வாகனத்தின் எஞ்சினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த புள்ளம்பாடி மற்றும் டால்மியாபுரம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர்கள் பாரதி, சிவக்குமார் தலைமையில் அசாருதீன், ரமேஷ், குமார், கனகராஜ், அருண்ராஜ்,பிரகாஷ் உள்ளிட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து நுரை கலவையை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கிரேன் வாகனம் முற்றிலும் இருந்து நாசமானது. தீ விபத்துக்குள்ளான ராட்சத கிரேன் வாகனம் 200 டன் எடை கொண்டது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து காரணமாக திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×