என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்து
    X

    தீ விபத்து

    • குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது
    • அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் நகராட்சி குப்பை கிடங்கில் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் பலமணி நேரம் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, திமுக நகர செயலாளர் செந்தில், கவுன்சிலர் கவிவேந்தன், மற்றும் பிரேம் ஆனந்த் நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து தீயை கட்டுபடுத்து பணியை துரிதப்படுத்தினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரா;களுக்கு தகவல் தரப்பட்டவுடன் இரண்டு வாகனத்திற்கும் மேலாக கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். விடிய,விடிய தீயை அணைக்க போராடி வருகின்றனர் . வருடத்திற்கு இரண்டு முறை இதுபோல் தீ விபத்து நடப்பது தொடர் கதையாக வருகிறது என அப்பகுதியின் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் தொpவிக்கின்றனர் . நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர் கள் தங்கள் இஷ்டம் போல் குப்பைகள் போட்டு வருவதால் இதுபோன்று தீ விபத்துக்கள் நடைப்பெறுவதாகவும் குற்றசாட்டுகின்றர் . தமிழக வாழ்வுரிமை கட்சி நியாஸ் இதற்கு கடுமையான கண்டனம் தொpவித்துள்ளார். குப்பை கிடங்கிற்கு சாpயான இடத்தை தோ;வு செய்யாத காரணமும், குப்பைகளை கையாளும் முறையே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்றும் சமூக விரோதிகள் செயல் என்று சொல்லி கடந்து விடமுடியாது, அதிகாரிகளும் சமூக விரோதிகளாவர் கள் என்கிறார். எனவே மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு குப்பை கிடங்கை சரிவர பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×