search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துணை மின் நிலையத்தில் தீ விபத்து
    X

    துணை மின் நிலையத்தில் தீ விபத்து

    • கந்தர்வகோட்டை அருகே துணை மின் நிலையத்தில் தீ விபத்து
    • தீ விபத்தில் 30 மின்கலன்கள் எரிந்து நாசமானது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை- வெள்ளாள விடுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான 440 கேவி துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள பேட்டரி குடோனில் இன்று அதிகாலை தீ பிடித்து எரிந்தது.இதனை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவும் சூழல் ஏற்பட்ட நிலையில், கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினர் உடனடியாக அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீரர்கள் தண்ணீர் மற்றும் மணல்களை கொண்டு போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் 30 மின்கலன்கள் தீயில் எரிந்து நாசமாகின.துணை மின் நிலையத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ள சூழலில் இது குறித்து மின்துறை அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×