search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுதீயை அணைக்க உதவாமல் படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய இளைஞர்கள்
    X

    காட்டுதீயை அணைக்க உதவாமல் படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய இளைஞர்கள்

    • அன்னவாசலில் வேதனை சம்பவம்
    • 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து அன்னவாசல், இலுப்பூர், புதுக்கோட்டை என பல பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புதுறை வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் தீயணைப்பு பணிக்கு உதவி செய்தனர். பெரும்பாலானவர்கள் தீ பற்றி எரிவதையும் அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க போராடுவதையும் தங்களது செல்போன்களில் படம் எடுப்பத்திலேயே குறியாக இருந்தனர். தீப்பற்றி எரியும் வேலையில் அதனை அணைக்க முயற்சிக்காமல் செல்போனில் படம் எடுக்கும் மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டது வேதனைக்குரியதாக இருந்தது.இயற்கையை காக்கும் போராட்டத்தில் மனித சமுதாயம் இதுபோன்ற நிலைக்கு சென்றது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    Next Story
    ×