search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவிப்பு"

    • அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு ஆதார் திருத்தம் செய்ய பொதுமக்கள் வந்தனர். இந்த சேவை சரியாக செயல்படாததால் அவர்கள் ஆதார் எடுக்க முடியாமல் திரும்பி ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
    • இதனை உடனடியாக சரி செய்து ஆதார் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர், ஆக .7-

    நாடு முழுவதும் அரசு தேவைகளுக்கும முக்கிய அடையாள அட்டையாக பயன்படுத்தக்கூடிய ஆதார் அட்டை ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடையாள அட்டையாகவும் பயன்படு கிறது.

    அந்த வகையில் எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்டவை திருத்தங்கள் செய்யவும் புதியதாக ஆதார் எடுப்பவர்களும் எடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக இந்த சேவை (இணைய தளம்வேலை செய்யாததால்) சரிவர செயல்படவில்லை என கூறப்படுகின்றது.

    இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட அந்தியூர் தவிட்டு பாளையம், வெள்ளை யம்பாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கரா பாளையம், அண்ணாமடுவு, அம்மா பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, அத்தாணி, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய புதியதாக எடுப்பதற்கும் வருகிறார்கள்.

    அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு ஆதார் திருத்தம் செய்ய பொதுமக்கள் வந்தனர். இந்த சேவை சரியாக செயல்படாததால் அவர்கள் ஆதார் எடுக்க முடியாமல் திரும்பி ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

    எனவே இதனை உடனடியாக சரி செய்து ஆதார் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில மாதங்களாகவே செங்கல் சூளைகளுக்கு செங்கல் அறுக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • சத்தியமங்கலம் சுற்று–வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை–வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான கொண்டப்ப நாயக்கன்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அத்தியப்பகவுண்டன்புதூர், சின்னட்டிப்பாளையம், டி.ஜி.புதூர், அரசூர், இண்டியன் பாளையம், காளிகுளம், குப்பந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்க தயாரிக்கப்படும் செங்கற்கள் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தொழிலை நம்பி இந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே செங்கல் சூளைகளுக்கு செங்கல் அறுக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பெரும்பாலான செங்கல் சூளைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மண் தீர்ந்த நிலையில் தற்போது புதியதாக செங்கல் தயார் செய்ய தேவைப்படும் மண் எடுக்க கனிமவளத்துறை அனுமதி வழங்காததால் தற்போது சத்தியமங்கலம் சுற்று–வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை–வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு–றியாகி உள்ளது.

    இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் செங்கல் தயாரிக்கும் தொழிலை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிலையில் செங்கல் தயாரிப்பதற்காக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்த போதிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று மண் எடுக்க அனுமதி வழங்குமாறு கேட்டால் இன்னும் எங்களுக்கு சுற்றறிக்கை வரவில்லை என தெரிவிக்கின்றனர்.

    இதனால் தற்போது செங்கல் சூளைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்வா–தாரம் கேள்விக்குறியா–கியுள்ள நிலையில் அவர்களின் குழந்தைகளின் கல்விகளும் பாதிக்கப்பட்டு–ள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம், அரசு இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் செங்கல் தயாரிப்பதற்காக தேவைப்படும் மண் எடுக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்து வருகின்றனர்.
    • ஏராளமான விவசாயிகள் இ சேவை மையங்களுக்கு வருகின்றனர்.

    உடுமலை :

    ஆண்டுக்கு ரூ. 6,000 பெறும் பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உடுமலை, பல்லடம், தாராபுரம் என திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இணைந்துள்ளனர். விவசாயி அல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் எ போலி பயனாளிகளை கண்டறிந்து அவர்களை நீக்கும் பணியில் வேளாண் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள், தங்கள் நில ஆவணங்களை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் வழங்கி பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்து வருகின்றனர்.

    இதன் வாயிலாக அவர்களின் நில விபரம் 'அப்டேட்' செய்யப்படும். இதில் தங்களை இணைத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே வரும் நாட்களில் கவுரவ ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற நிலையில், இப்பணியை இம்மாதம் இறுதிக்குள் முடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நில ஆவணங்களை அப்டேட் செய்ய இ சேவை மற்றும் கம்ப்யூட்டர் நிலையங்கள் வாயிலாக சிட்டா நகலை விவசாயிகளை பெற வேண்டும். ஆன்லைன் வழியாகவே சிட்டா நகல் பெறப்படும் நிலையில், பல இடங்களில் சர்வர் பிரச்னையால், இதை பெற முடியாத நிலையில், விவசாயிகள் அலைமோதுகின்றனர்.கால அவகாசம் குறைவாக உள்ள நிலையில் தினமும் ஏராளமான விவசாயிகள் இ சேவை மையங்களுக்கு வருகின்றனர். தொடர் பயன்பாடால் வரும் நாட்களில் சர்வர் முடங்கும் நிலை ஏற்படும் என்பதால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதால் பக்தர்கள் தவித்து வருகின்றனறர்.
    • உடனடியாக விசாரிக்கப்பட்டு விதி மீறி அங்கு கடைகள் அமைத்து இருந்தால், வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தால் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என்றார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா ஜூன் 1-ந்தேதி தொடங்கி, 30-ந்தேதி முடிவடைகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    சந்தனக்கூடு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ளனர். இதனால் தர்கா பகுதி மக்கள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது.

    இந்த நிலையில் தர்காவின் முன்புறம் அமைந்துள்ள அரசால் தடைசெய்யப்பட்ட நிலமான சர்வே எண்.502 மற்றும் 504-ல், வாடகை கார், வேன், ஆட்டோக்கள், தண்ணீர் லாரிகள் மற்றும் வியாபார கடைகள் ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்கு இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

    திருவிழாக்காலங்களில் கூடும் மக்களுக்கு நிற்கக்கூட இடமில்லாமல், குறிப்பிட்ட இடத்தில் இடையூறாக ஆக்கிரமிப்புகள் உள்ளது. மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றியும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க போலீஸ் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் கூறுகையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக விசாரிக்கப்பட்டு விதி மீறி அங்கு கடைகள் அமைத்து இருந்தால், வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தால் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    ×