search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி"

    • காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50, விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.50, கத்தரிக்காய் ரூ.55, பீர்க்கங்காய் ரூ.50,பெரிய வெங்காயம் ரூ.25 ,சின்ன வெங்காயம் ரூ. 55, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.60, புடலங்காய் ரூ.60, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.200, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.60, பச்சை மிளகாய் ரூ.80, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • உள்ளூர் மட்டுமின்றி திண்டுக்கல், பழனி, உடுமலை பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
    • தக்காளி விலை மீண்டும் சரிவால் இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் அதன் விலை ஒரு கிலோ ரூ.40 ஆக சரிந்துள்ளது.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மே மாதம் வரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்தது.

    மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக அந்நேரத்தில் ஒரு கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.15-க்கு என குறைந்த விலையில் விற்பனையானது.

    பின் கோடை மழைப்பொழிவு போதியளவு இல்லாததால், பல கிராமங்களில் தக்காளி சாகுபடி குறைந்தது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வழக்கத்தைவிட மிகவும் குறைவாக இருந்தது.

    இதனால் கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.120 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். இந்நிலையில், சில வாரத்துக்கு பிறகு, மார்க்கெட்டில் தற்போது தக்காளி வரத்து சற்று அதிகரித்தது. இதனால், அதன் விலை குறைய தொடங்கியது.

    உள்ளூர் மட்டுமின்றி திண்டுக்கல், பழனி, உடுமலை பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மார்க்கெட்டில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.500 முதல் ரூ.600-க்கு ஏலம் போனது. சராசரியாக ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையானது. சில வாரத்துக்கு பிறகு தக்காளி விலை மீண்டும் சரிவால் இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

    • தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது
    • தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி, இஞ்சி, மிளகாய்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளிலும் தக்காளி கிலோ ரூ.180 வரை விற்பனையானது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. தக்காளியின் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிக மாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் சரிய தொடங்கியுள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு ஏற்கனவே பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், நெல்லை மாவட்டம் பணக்குடி, வள்ளியூர் பகுதி யில் இருந்தும் அதிகளவு தக்காளி அப்டா மார்க்கெட டில் விற்பனைக்கு வருகிறது. இதனால் தக்காளியின் விலை தினமும் குறைந்து வருகிறது.

    நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.10 சரிந்து ரூ.70 ஆக குறைந் துள்ளது. மேலும் தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரி வித்துள்ள னர். தக்கா ளியின் வரத்து அதிகரிக்க தொடங்கியதால் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் இஞ்சி விலையும் குறைய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.300 வரை விற்கப்பட்டது. தற்போது ரூ.250 ஆக சரிந்துள்ளது. புதிதாக வரக்கூடிய இஞ்சி கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை ஆகிறது. இதேபோல் சிறிய வெங்காயத்தின் விலையும் சரிய தொடங்கியுள்ளது. கிலோ ரூ.120 வரை விற்கப்பட்ட சிறிய வெங்காயம் இன்று ரூ.90 ஆக குறைந்துள்ளது.

    இதேபோல் அனைத்து காய்கறிகளையும் விலை குறைந்துள்ளது. நாகர்கோ வில் மார்க்கெட்டில் விற்ப னையான காய்கறிகளின் விலை விபரம் வருமாறு:-

    கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.80, மிளகாய் ரூ.60, சேனை ரூ.65, வெள்ளரிக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.30, தடியங்காய் ரூ.40, பூசணிக்காய் ரூ.30, கத்திரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, சவ்சவ் ரூ.40, பீட்ரூட் ரூ.40, உள்ளி ரூ.90, பல்லாரி ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.30 விற்பனையானது.

    • தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையானது.
    • தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது.

    சேலம்:

    சேலம் உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்களுக்கு வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் வரை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்க ளுக்கு தக்காளி வரத்து அடியோடு சரிந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையா னது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளி வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் சேலம் மார்க்கெட்கள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்க ளில் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது.

    இதனால் பொதுமக்கள் தக்காளியை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். இனி வரும் நாட்களில் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். 

    • சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்துள்ளது.

    கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கடந்த 3 நாட்களில் வருகை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ஆசியாவின் மிகப்பெரிய தக்காளி சந்தையான மதனபள்ளியில் இருந்து சந்தைகளுக்கு அதிக அளவில் தக்காளி வருவதால், தமிழ்நாடு, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் சித்தூர் மாவட்டத்திற்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதனால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மொத்த விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த ஒரு வாரமாக அனந்தப்பூர் மாவட்டத்தின் அனைத்து சந்தைகளில் இருந்தும் தினமும் சுமார் 35 முதல் 40 லாரிகள் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சென்னை, வேலூர் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் தமிழகத்திலும் விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் தக்காளி கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்து, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மாநிலங்களில் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது.
    • வெளிநாட்டில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வை தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்து, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது.

    இந்நிலையில், நேபாளத்தில் இருந்து 10 டன் தக்காளியை தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதல் செய்துள்ளது. அந்த தக்காளி, இன்றும், நாளையும் உத்தரபிரதேசத்தில் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

    வெளிநாட்டில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    • கடந்த சில நாட்களாக 25 டன், 50 டன் என வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.
    • உழவர் சந்தைகளில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.64 வரை விற்பனை செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை எம்.ஜி.ஆர். மொத்த காய்கனி மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு நேற்று ஓரே நாளில் தக்காளி வரத்து 130 டன்களாக அதிகரித்தது. இதனால், நாட்டுத்தக்காளி விலை கிலோ ரூ.60 ஆக சரிந்தது.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், கோவை க்கு வழக்கமாக வரும் உள்ளூர் தக்காளிகளின் வரத்து குறைவாக இருந்தது. கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து இருந்தது.

    இந்தநிலையில், கடந்த சில நாட்களாக கோவைக்கு உள்ளூர் தக்காளியின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தக்காளியின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை விலை குறைந்து வருகிறது.

    இதுகுறித்து கோவை தியாகி குமரன் மார்க்கெட்டின் அனைத்து மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறும் போது, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட உள்ளூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு தக்காளி வரத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக 25 டன், 50 டன் என வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது.

    நேற்று எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டுக்கு உள்ளூர் பகுதிகளில் இருந்து நாட்டுத்தக்காளி 100 டன்னும், தியாகி குமரன் மார்க்கெட்டுக்கு 30 டன்னும் வந்துள்ளது.

    அதே சமயம் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆப்பிள் தக்காளி வரத்து குறைந்துள்ளது. நாட்டுத் தக்காளி கிலோ ரூ.50, ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி மொத்த விற்பனையில் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

    உழவர் சந்தைகளில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.64 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும்.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    போரூர்:

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை சரிந்து வருகிறது.

    வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும். விலை உச்சத்தில் இருந்தபோது 20 முதல் 30 லாரிகள் என்ற அளவிலேயே தக்காளி வரத்து இருந்தன.

    இப்போது தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் கடந்த 2 நாட்களாக மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டது.

    மேலும் தக்காளி வரத்தும் கடந்த சில நாட்களாக சராசரியாக 35 லாரிகளாக வரத் தொடங்கியது.

    இதற்கிடையே இன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 40 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தன. விலை அதிகரிப்புக்கு பிறகு கடந்த ஒரு மாதத்துக்கு பின்னர் தக்காளி வரத்து 40 லாரியாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் தக்காளி விலை மேலும் குறைந்து மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.200 வரை சென்று உச்சம் தொட்ட தக்காளியின் விலை குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை மேலும் படிப்படியாக குறைந்து வீழ்ச்சி அடையும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது.
    • இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி சரக்கு ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கடந்த மாதத்தில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் தக்காளி வரத்து பாதிக்கு மேல் குறைந்தது.
    • தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது.

    போரூர்:

    தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வருகிறது. கிலோ ரூ.200-வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை ரூ.100-க்கு கீழ் இறங்கி வருவதால் இல்லத்தரசிகள் இப்போது நிம்மதி அடைந்து உள்ளனர்.

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வழக்கமாக 60 லாரிகளுக்கு மேல் தக்காளி வரும். கடந்த மாதத்தில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் தக்காளி வரத்து பாதிக்கு மேல் குறைந்தது. 25 லாரிகளே சராசரியாக வந்தன. இதனால் தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.

    தற்போது வடமாநிலங்களில் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லாததாலும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் வடமாநில வியாபாரிகளின் தக்காளி கொள்முதல் குறைந்ததாலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது.

    இப்போது 30 லாரிகளுக்கு மேல் தக்காளி வரத்து நீடித்து வருகிறது. இன்று கோயம்பேடு சந்தைக்கு 34 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்திருந்தன.

    இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ முதல் ரக தக்காளி ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சுமார் 40 நாட்களை கடந்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த தக்காளியின் விலை தற்போது குறைந்து அனைத்து இடங்களிலும் ரூ.100-க்கு கீழ் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    காய்கறிகளில் பீன்ஸ் கிலோ ரூ.70-க்கும், கேரட் ரூ.60க்கு விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகள் அனைத்தும் கிலோ ரூ.50-க்கும் கீழ் உள்ளது. அவரைக்காய் ரூ.40, வெண்டைக்காய்-ரூ.30, உஜாலா கத்தரிக்காய்- ரூ.50-க்கும் விற்பனை ஆகிறது.

    • ஒரு கிலோ ரூ.120 ஆக குறைந்தது
    • கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.30, கத்தரிக்காய் ரூ.50, மிளகாய் ரூ.70

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை ஏறுமுகமாக இருந்தது. தக்காளியின் உற்பத்தி குறைந்ததையடுத்து விலை உயர்ந்து காணப்பட்டது. விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டது.

    ரேஷன் கடைகள் மூல மாகவும், தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. குமரி மாவட்டத்திற்கு ஏற்கனவே குமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக இங்கிருந்து தக்காளி விற்பனைக்கு வரவில்லை. பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனால் தக்காளியின் விலை தினமும் ஏறுமுகமாக காணப்பட்டது.

    அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலை உயர்ந்து காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் தக்காளியின் பயன்பாட்டை குறைத்தனர். தற்போது தக்காளியின் வரத்து அதிகரிக்க தொடங்கி யுள்ளது. ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடியிலிருந்து தக்காளி விற்பனைக்காக வர தொடங்கியதையடுத்து விலை குறைய தொடங்கி யுள்ளது. ஏற்கனவே ஆரல்வாய்மொழி, பணகுடி பகுதியில் இருந்து 5 பாக்ஸ் தக்காளிகள் வந்த நிலையில் தற்போது 100 பாக்ஸ் தக்காளி விற்பனைக்கு வருகிறது. உள்ளூரில் இருந்து தக்காளிகள் வரத் தொடங்கியதால் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 1 கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. மிளகாய், கத்தரிக்காய், கேரட், பீன்ஸ் விலை குறைந்துள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.30, தக்காளி ரூ.120, கத்தரிக்காய் ரூ.50, மிளகாய் ரூ.70, வழுதலங்காய் ரூ.50, சேனை ரூ.70, வெள்ளரிக்காய் ரூ.30, புடலங்காய் ரூ.25, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.50.

    • கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.
    • கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வந்தது. கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வரும். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 'திடீர்' மழை மற்றும் வடமாநிலங்களில் பெய்த கனமழையால் தக்காளி வரத்து பாதிக்கும் கீழ் குறைந்தால் இந்த விலை உயர்வு என்று கூறப்பட்டது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை அரசு தொடங்கியது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி 30 லாரிகளுக்கும் மேல் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளன. இதனால் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் சரியத் தொடங்கி உள்ளது.

    கோயம்பேடு சந்தைக்கு இன்று 35 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

    கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து உள்ளதால் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளிலும் தக்காளி விலை குறையத்தொடங்கி உள்ளன. இதனால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த வாரத்தில் தக்காளி விலை இரட்டை சதம் அடித்து இருந்தது. கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி விலை குறையத்தொடங்கி விட்டன. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பு குறைந்து உற்பத்தி சீராக நடந்து வருகிறது. எனவே இனி வரும் நாட்களில் தக்காளியின் வரத்து மேலும் அதிகரித்து விலை படிப்படியாக குறையவே வாய்ப்பு உள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் தக்காளியின் விலை பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பீன்ஸ் விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகிறது. மற்ற பச்சை காய்கறிகள் அனைத்தும் கிலோ ரூ.50-க்கு கீழ் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ×