search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி விலை"

    • அரசு ரேஷன்கடை, பண்ணை பசுமை காய்கறி கடைகள் ஆகியவை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
    • தக்காளி விலை உயர்வால் சில ஓட்டல்களில் தக்காளி சட்னியையும் ரத்து செய்துவிட்டனர்.

    திட்டக்குடி:

    திட்டக்குடியில் காய்கறி மார்க்கெட்டில் 200 கிலோ தக்காளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி இந்த ஆண்டு கிலோ 100 ரூபாயை தாண்டியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதைடுத்து அரசு ரேஷன்கடை, பண்ணை பசுமை காய்கறி கடைகள் ஆகியவை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

    தக்காளி விலை உயர்வால் சில ஓட்டல்களில் தக்காளி சட்னியையும் ரத்து செய்துவிட்டனர். தற்போது தக்காளி கிலோ ரூ.100-க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில் சில இடங்களில் தக்காளி கடத்தல், திருட்டு போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. இதேபோல் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள காய்கறி மார்க்கெட்டிலும் மர்ம நபர்கள் தக்காளியை திருடிச்சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    திட்டக்குடி பஸ் நிலையம் பின்புறம் அண்ணா காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்குள்ள சில கடைகளில் கடந்த சில நாட்களாக தக்காளி திருடு போவது தெரியவந்தது.

    சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு சென்றனர். பின்னர் காலை கடைகளை திறக்க வந்தபோது சில கடைகளின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் கடைகளில் புகுந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ தக்காளியை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்க பொருளாளர் வளையாபதி, செயலாளர் ரவிச்சந்திரன், தாயுமான், ராமன், சக்திவேல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உற்பத்தி நடக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
    • தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தக்காளி மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை ஏறுமுகமாகவே இருந்தது. இன்று கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு 30 லாரிகளில் தக்காளி வந்து குவிந்தது.

    நேற்று 23 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் இன்று அதன் வரத்து சற்று அதிகரித்து உள்ள போதிலும் தக்காளி விலை குறையாமல் மேலும் அதிகரித்து உள்ளது. உற்பத்தி நடக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தக்காளி மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ130-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.150 வரையிலும் விற்கப்படுகிறது. அதேபோல் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ ரூ.160 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது இல்லத்தரசிகள் இடையே பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் 2 நாட்களில் தக்காளி ஒரு கிலோ ரூ.200 ஐ எட்டி இரட்டை சதம் அடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் மற்ற காய்கறிகளும் விலை உயர்வாகவே உள்ளது. அதன் விலை விபரம் வருமாறு:-

    நாசிக் வெங்காயம் 1 கிலோ-ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.110, உருளைக்கிழங்கு-ரூ.35, பீன்ஸ்-ரூ.120, அவரை ரூ.50, வெண்டை ரூ.50, உஜாலா கத்தரிக்காய் ரூ.50, ஊட்டி கேரட் ரூ.50, பீட்ரூட் ரூ.40, வெள்ளரி ரூ.20, முருங்கை ரூ.40, பாகற்க்காய் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.70, முட்டை கோஸ் ரூ.25, முள்ளங்கி ரூ.25, புடலை ரூ.25, கோவக்காய் ரூ.25, இஞ்சி ரூ.270.

    • கடந்த 2 நாட்களாக 280 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது.
    • தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்கள் மற்றும் சென்னைக்கு தக்காளி ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஆந்திராவில் கனமழை காரணமாக தற்போது விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    நேற்று முதல் தக்காளி கிலோ 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே அங்கல்லு தக்காளி மொத்த விற்பனை சந்தை உள்ளது.

    சித்தூர், மதனப்பள்ளி, கலகடா, குர்ரம் கொண்டா, வால்மீகிபுரம், முலகலா செருவு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் இங்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக 280 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது.

    இதனால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக வடமாநிலங்கள் மற்றும் சென்னைக்கு தக்காளி ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவை போல சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    வரும் ஆகஸ்டு மாதம் இறுதி வரை இதே நிலை நீடிக்கும் என தக்காளி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    • தக்காளி விலை குறையாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.
    • ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை தினசரி அதிகரித்து கிலோ ரூ.200-ஐ எட்டும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி பின்னர் கடந்த வாரம் சற்று குறைந்து ரூ.100-க்கு விற்கப்பட்டது. மேலும் பண்ணை பசுமை கடைகள் மற்றும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து வரும் நாட்களில் வரத்து அதிகரித்து தக்காளி விலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தக்காளி விலை குறையாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்றும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மேலும் குறைந்து உள்ளது. 23 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்து உள்ளன. வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சுமார் 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வரும். இந்த மாத தொடக்கத்தில் விலை அதிகரிக்க தொடங்கியது முதலே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தன. இன்று முதன் முதலாக தக்காளி வரத்து 30 லாரிகளுக்கும் கீழ் குறைந்துவிட்டது.

    தக்காளி வரத்து குறைவு காரணமாக மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கும், வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-ஐ கடந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதே நிலை நீடித்தால் ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை தினசரி அதிகரித்து கிலோ ரூ.200-ஐ எட்டும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும். தக்காளியின் வரத்து கடந்த ஒரு மாதமாக 40-க்கும் குறைவான லாரிகளில் மட்டுமே வருவதால் அதன் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. நேற்று 30 லாரிகளில் விற்பனைக்கு வந்த தக்காளியின் வரத்து இன்று மேலும் குறைந்து 23 லாரிகளாக சரிந்துவிட்டது. அதுவும் ஒவ்வொரு லாரியிலும் 10 டன் என்கிற முழு கொள்முதல் அளவில் தக்காளி வரவில்லை. 7 முதல் 8 டன் என்கிற அளவிலேயே வந்துள்ளது. இதனால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை மேலும் உச்சத்தை எட்டும்.

    மேலும் வடமாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அந்த மாநில வியாபாரிகள் தக்காளியை அதிக அளவில் கொள்முதல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து விலையும் அதிகரிக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்துள்ளனர்.
    • வரலாறு காணாத வகையில் இந்தாண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் 1 கிலோ வாங்கும் இடத்தில் 100 கிராம், கால் கிலோ என வாங்கி வருகின்றனர். திண்டுக்கல் மார்க்கெட்டில் கடந்த 15 நாட்களாக ரூ.120 க்கு தக்காளி விற்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்து வந்த போதிலும் பல கடைகளில் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் காந்தி காய்கறி மார்க்கெட்டில் இன்று தக்காளி கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. தக்காளி வியாபாரியான சந்தோஷ் முத்து இது குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடன் பொதுமக்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் குவியத் தொடங்கினர். திண்டுக்கல் ஆர்.எம். காலனியை சேர்ந்த சந்தோஷ்முத்து காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் தக்காளி வாங்கும் அளவை குறைத்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சேவையுடன் அனைத்து தரப்பினரும் தக்காளியை வாங்கி பயன்படுத்தும் வகையில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முன் வந்ததாக தெரிவித்தார். இதனை அறிந்த பொதுமக்கள் காலை 6 மணிக்கே கடையில் குவிந்தனர். வரிசையில் நின்று தக்காளியை ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    இது குறித்து தக்காளி வியாபாரி கூறுகையில், கடந்த 23 ஆண்டுகளாக தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். வரலாறு காணாத வகையில் இந்தாண்டு தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெண்கள் சமையலில் தக்காளி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்யும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.120 க்கு விற்கப்படும் தக்காளியை பாதிக்கு பாதி குறைத்து ரூ.60க்கு விற்பனை செய்து வருகிறேன். தரமானதாக ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்து மக்களின் நலனுக்காக விலையை குறைத்து வழங்கி வருகிறேன். இன்று மாலை வரை தக்காளி விற்கப்படும் என்று தெரிவித்தார்.

    இன்று மலிவு விலை தக்காளி பொதுமக்களுக்கு வழங்க 5 டன் வரவழைக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. வியாபாரிகளுக்கு வழங்கவில்லை.

    கடைகளில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்கும் பொழுது அதே தரமான தக்காளியை ரூ.60க்கு கொடுப்பதால் கால் கிலோ, அரை கிலோ என வாங்க வந்த நாங்கள் மகிழ்ச்சியுடன் 2 கிலோ வாங்கி செல்கின்றோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகளில் சுமார் 600 டன் வரை தக்காளி தினசரி விற்பனைக்கு குவிந்து வருவது வழக்கம்.
    • பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலையும் வரத்து குறைவால் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளி விலை தாறுமாறாக அதிகரித்து ரூ.130 வரை விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக சற்று குறைய தொடங்கியது. கிலோ ரூ.100-க்கு கீழ் இறங்கியதால் வரும் நாட்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த வாரத்தை விட மேலும் குறைய தொடங்கி உள்ளது.

    இதன் காரணமாக தக்காளி விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்றைவிட கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரித்து இருக்கிறது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.110 வரை விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.140 வரை விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 60 லாரிகளில் சுமார் 600 டன் வரை தக்காளி தினசரி விற்பனைக்கு குவிந்து வருவது வழக்கம். ஆனால் இன்று 30 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நடந்து வரும் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட வடமாநில வியாபாரிகளும் தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து விலையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இனி வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.200 வரை விற்க வாய்ப்பு உள்ளது.

    இதேபோல் பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலையும் வரத்து குறைவால் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.80-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.280-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் இதன் விலை மேலும் அதிகரித்து விற்கப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சென்னையில் 300 ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்தது.
    • குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்றால் இல்லை என்று சொல்லி விடுவதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    தக்காளி விலை ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தக்காளி கிலோ இன்னும் ரூ.120 முதல் ரூ.130 வரை சில்லறை காய்கறி கடைகளில் விற்கப்படுவதால் குறைந்த அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சென்னையில் 300 ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்தது. கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே குறைந்த விலையில் தக்காளி விற்கப்படுகிறது.

    கர்நாடகாவில் தக்காளியை அதிக விலைக்கு வாங்கி வந்து நஷ்டத்திற்கு தான் கூட்டுறவு சங்கங்கள் தற்போது தக்காளியை விற்கின்றன. இதனால் குறைந்த அளவில் தான் ரேஷன் கடைகளில் தக்காளி வினியோகிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு விற்பனைக்கு வரும் தக்காளி 11.30 மணிக்குள் விற்று விடுகின்றன.

    இதனால் ரேஷன் கடைகளில் தக்காளி கிடைப்பது இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்றால் இல்லை என்று சொல்லி விடுவதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.

    அடையார், மயிலாப்பூர், அசோக் நகர், கே.கே.நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, 60 டி.யு.சி.எஸ். நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கடைக்கு 42 கிலோ தக்காளி வினியோகம் செய்கிறோம். அவை 11 மணிக்குள் விற்று விடும். தக்காளி அதிக விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு கிலோ ரூ.60-க்கு விற்பதால் கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை நஷ்டம் ஏற்படுகிறது. அரசின் முடிவை ஏற்று விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

    • இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 34 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது.
    • ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது மீண்டும் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

    போரூர்:

    தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருகிறது. கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இந்த நிலையில் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக சற்று குறைய தொடங்கியது. வெளிமார்க்கெட்டில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது.

    மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.80க்கு விற்பனை ஆனது. இதனால் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மேலும் குறைந்தது. ஏற்கனவே வழக்கமான நாட்களை விட 50 சதவீத தக்காளி லோடுகளே வரும் நிலையில் இன்று 34 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது.

    இதன் காரணமாக தக்காளி விலை மீண்டும் சற்று அதிகரித்து சதம் அடித்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டிலேயே இன்று காலை தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆனது வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் மீண்டும் தக்காளி விலை உயர்ந்து ரூ.120 வரை விற்கப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வரும். இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 34 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது.

    ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது மீண்டும் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வரத்து குறைந்து விட்டது. வரும் நாட்களில் தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்றனர்.

    • ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.
    • மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர்.

    புதுச்சேரி:

    பொதுவாக எந்த மதத்தில் திருமணம் நடந்தாலும் மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் பரிசு வழங்குவது வழக்கம்.

    தற்போது தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. விலை உயர்வால் குடும்ப தலைவிகள் தக்காளி வாங்குவதையே தவிர்த்து வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.

    இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை சுட்டி காட்டும் வகையில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் 2 கிலோ தக்காளி பரிசாக வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

    காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவருக்கும் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரஹமத் நிஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    திருமணத்தில் பங்கேற்ற கருக்கங்குடியைச் சேர்ந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர். ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். தக்காளியை மண மகனுக்கு பரிசு அளிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது.
    • கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்றை விட கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக ஏறுமுகமாகவே இருந்தது. கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    இந்த நிலையில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்றை விட கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வழக்கமாக கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 33 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது தக்காளி விளைச்சல் பாதிப்பு இல்லாததால் வரும் நாட்களில் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது. அப்போது தக்காளி விலை மேலும் சரிந்து பழைய நிலைக்கு வரும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை சற்று குறைந்து இருந்தாலும் வெளிஇடங்களில் உள்ள சில்லறை கடைகளில் தக்காளி விலை குறையவில்லை. கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது.

    • தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும்.
    • தக்காளி விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது.

    நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்ந்தால், அவற்றை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என்று உத்தரபிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    உ.பி.அரசு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய மரம் நடும் திட்டத்தின் கீழ் தோட்ட இயக்கத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சுக்லா மரக்கன்றுகளை நட்டார்.

    பின்னர் அமைச்சர் சுக்லா கூறியதாவது:-

    தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையும் பயன்படுத்தலாம். தக்காளியை யாரும் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறைந்துவிடும். எது விலை அதிகமாக இருந்தாலும் அதை நிராகரிக்கவும். அது தானாகவே மலிவாகிவிடும்.

    அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் செய்துள்ளோம். கிராமத்தில் உள்ள பெண்கள் சத்துணவுத் தோட்டத்தை அமைத்துள்ளார்கள். அதில் தக்காளியும் நடலாம். இந்த விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது. தக்காளி எப்பொழுதும் விலை உயர்ந்தது. தக்காளி விலை உயர்வது புதிதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தக்காளி திருட்டை தடுக்க விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ள நிலங்களில் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வியாபாரிகள் தக்காளியை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்துக்கு நிகராக தக்காளிக்கு மவுசு கூடி உள்ளது. இந்த நிலையில் தக்காளியை திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

    தக்காளி திருட்டை தடுக்க விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ள நிலங்களில் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரிகள் தக்காளியை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி பெங்களூருவில் இருந்து தக்காளியை வாகனத்துடன் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்துள்ளனர்.

    பெங்களூரு அருகே உள்ள சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி மல்லேஷ். இவர் தோட்டத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். விளைச்சல் அதிகரித்த நிலையில் அவற்றை அறுவடை செய்தார். இதில் அவருக்கு 2 டன் தக்காளி சேர்ந்தது. பின்பு அவற்றை கோலார் மாவட்டத்திற்கு சரக்கு வாகனத்தில் விற்பனைக்கு எடுத்து வந்தார். பெங்களூரு எலகங்கா அருகே ஹெப்பால் சாலையில் வந்தபோது ஒரு இடத்தில் தக்காளி வாகனத்தை அவரும், டிரைவரும் டீ குடிப்பதற்காக நிறுத்தினர். பின்னர் வாகனத்தில் புறப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை வழி மறித்தனர். தங்களது மோட்டார் சைக்கிளில் சரக்கு வாகனம் மோதியதாக கூறி அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கூட்டாளிகள் 3 பேர் அங்கு வந்தனர். 5 பேரும் சேர்ந்து பின்னர் மல்லேசையும், டிரைவர் சிவண்ணாவையும் தாக்கி கீழே தள்ளினர். பின்னர் 2 டன் தக்காளியை சரக்கு வாகனத்துடன் அவர்கள் கடத்தி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லேஷ், ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் தக்காளி இல்லாமல் வாகனம் மட்டும் தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. உடனே போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

    விசாரணையில் சரக்கு வாகனத்துடன் தக்காளியை கடத்தியது தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாஸ்கர்(வயது 38), அவரது மனைவி சிந்துஜா(36) உள்ளிட்ட 5 பேர் கும்பல் என்று தெரிந்தது. தக்காளியை வாகனத்துடன் கடத்திய கும்பல் அதை சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.

    சென்னையில் 2 டன் தக்காளியையும் ரூ.1.60 லட்சத்துக்கு விற்பனை செய்து உள்ளனர். மேலும் அந்த பாஸ்கர், சிந்துஜா உள்ளிட்ட உள்பட 5 பேரும் பணத்தை ஆளாளுக்கு பிரித்துக்கொண்டனர். அதன்பின்னர் சரக்கு வாகனத்தை பெங்களூருவுக்கு எடுத்து வந்துள்ளனர். போலீசிடம் இருந்து தப்பிக்க, சரக்கு வாகனத்தை தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கர், சிந்துஜாவை வாணியம்பாடிக்கு வந்தனர். அங்கு அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களுடன் வந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×