search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜமாபந்தி"

    • 55 கோரிக்கை மனு பெறப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று முன்தினம் தொடங்கியது.

    ஜமாபந்தி முகாமில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 55 கோரிக்கை மனு பெறப்பட்டது.

    இந்த மனுக்களில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டது, 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் (நில அளவை) செந்தில்குமார், அலுவலக மேலாளர் நீதியியல் உமாரம்யா, தாசில்தார் குமார், தனி தாசில்தார் (சபா.தி) சுமதி, வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன், துணை தாசில்தார் சித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது.
    • விசுவநாதன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாசில்தார் அலு வலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டரும், மாவட்ட ஜமா பந்தி அலுவலருமான விசுவ நாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தாசில்தார் நெகருன்னிசா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நிகழ்ச்சியாக அக லூர், முக்குணம், தாமனூர், சின்னகரம், அருகாவூர், பணப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஜமாபந்தி மேலாளர் கண்ணன் தனி தாசில்தார்கள் கோவிந்த ராஜ், மனோகரன் துணை தாசில்தார்கள் குணசேகரன், உமாமகேஸ்வரி, ரவி வட்ட வழங்கல் அலுவலர் வெங்க டேசன் வட்ட துணை ஆய்வாளர் முனியன் வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், பழனி, கார்த்திகேயன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று 22 கிராமங்களில் உள்ள பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 22 கிராமங்களின் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து இன்று கள்ளப்புலியூர், மேலத்திப் பாக்கம், எடமலை, பென்னகர் உட்பட 20 கிராமங்களின் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட உள்ளன. ஜமா பந்தி வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி தொடங்கி நடை பெற உள்ளது.
    • பொது மக்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் 1432-ம் பசலிக்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நாளை (புதன்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வருவாய் தீர்வாயம் நடத்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள வருவாய் தீர்வாயம் பற்றிய விவரம் வருமாறு:-

    தரங்கம்பாடி தாலுகாவில் வருவாய் தீர்வாய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் நாளை முதல் 16-ந் தேதி வரை அங்கு ஜமாபந்தி நடத்துகிறார்.

    குத்தாலம் தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக, மாவட்ட வழங்கல் அலுவலர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், மயிலாடுதுறை தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், சீர்காழி தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் நாளை முதல் 22-ந் தேதி வரையும் ஜமாபந்தி நடத்த உள்ளனர்.

    வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளி விட்டு வரிசையில் சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழக்கரை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.
    • 9 கிராமங்களில் 8-ந் தேதி ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (6-ந்தேதி) தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை (சனி, ஞாயிறு, திங்கள், விடுமுறை நாட்கள் தவிர) ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை, ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் தாலுகா வாரியாக நடைபெற உள்ளது. மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவசுப்ரமணியன் தலைமையில் உத்திரகோசமங்கை உள் வட்டம் எக்ககுடி, பனை குளம், மாலங்குடி, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, உத்திரகோசமங்கை ஆகிய 7 கிராமங்களில் இன்று ஜமாபந்தி நடந்தது.

    பனையடியேந்தல், வேளானூர், மாணிக்கநேரி, புல்லந்தை, மாயாகுளம், கீழக்கரை, காஞ்சிரங்குடி, குள பதம், இதம்பாடல், ஏர்வாடி ஆகிய 9 கிராமங்களில் நாளை (7-ந் தேதி) நடைபெற உள்ளது. திருப்புல்லாணி, பள்ளமோர்குளம், களரி 1, 2, வெள்ளாமறிச்சுகட்டி, குதக்கோட்டை, களிமண்குண்டு, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், ரெகுநாதபுரம் ஆகிய 9 கிராமங்களில் (8-ந் தேதி ) ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

    • இதில் கலெக்டர் கலந்து கொள்கிறார்
    • ஆண்டிமடம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 4 தாலுக்கா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. உடையார்பாளையம் வட்டாட்சியர்அலுவலகத்தில் வரும் 13ம் தேதி மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் துவங்குகின்றது. இருகையூர், காரைகுறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், தா.பழுர், கோடங்குடி, நாயகனைப்பிரியாள், இடங்கன்னி, உதயநத்தம், அனைக்குடம், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புக்குடி ஆகிய கிராமங்களில் 13ந்தேதியும், 14ம் தேதி மணகெதி, உல்லியக்குடி, வெண்மாண்கொண்டான், பருக்கல், கோவிந்தபுத்தூர், நடுவலூர், சுத்தமல்லி, கீழநத்தம். ஆம்பாபூர். உடையவரிதியனூர், கடம்பூர், சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களிலும், 15ம் தேதி பாப்பாக்குடி, தர்மசமுத்திரம், இளையபெருமாள்நல்லூர், குண்டவெளி, முத்துசேர்வைமடம், காட்டாகரம், குலோத்துங்கநல்லூர், தழுதாயமேடு, குருவாலப்பர்கோவில் ஆகிய கிராமங்களுக்கும், 16ம் தேதி தேவமங்கலம், அங்குராயநல்லூர், சூரியமணல், இடையார், வாணதிரையான்பட்டிணம். புpலிச்சைகுழி, உடையார்பாளையம், கோழங்குறிச்சி, தத்னூர் ஆகிய கிராமங்களுக்கும், 20ம் தேதி எரவாங்குடி, தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சோரி, பிச்சனூர், வெட்டியர்வெட்டு, ஆமணக்கம்தோண்டி, உட்கோட்டை, பெரியவளையம், ஜெயங்கொண்டம் ஆகிய கிராமங்களிலும் நடைபெறுகிறது.

    ஆண்டிமடம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. 13ம் தேதி ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், ஆண்டிமடம், விளந்தை, வரதராஜன்பேட்டை, பெரியகிருஷ்ணாபுரம், திருகளப்பூர், அணிக்குதிச்சான் ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி சிலம்பூர், இடையக்குறிச்சி, அய்யூர், கூவத்தூர், காட்டாத்தூர், குவாகம், கொடுக்கூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், மேலூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    செந்துறை தாலுக்கா அலுவலகத்தில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. 13ம் தேதி ஆணந்தவாடி, உஞ்சினி,மருவத்தூர், பெரியகுறிச்சி, வஞ்சினாபுரம், நமங்குணம், நக்கம்பாடி, செந்துறை ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி சிறுகளத்தூர், பொண்பரப்பி, நாகல்குழி, பரணம், கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, கீழமாளிகை, பிலாக்குறிச்சி, சிறுகனூர் ஆகிய கிராமங்களுக்கும், 15ம் தேதி சன்னாசிநல்லூர், தளவாய், ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, மணக்குடையான், அயன்தத்னூர், மணப்பத்தூர், அசாவீரன்குடிக்காடு, தொளார் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    அரியலூர் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையில் 13ம் தேதி ஜமாபந்தி துவங்குகின்றது. பொட்டவெளி, இலுப்பையூர், இராயம்புரம், சென்னிவணம், ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், அமீனாபாத், அரியலூர் வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரியநாகலூர், தேளுர், காவனூர், விளாங்குடி ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி நாகமங்கலம். ரெட்டிபாளையம், புதுபாளையம், சிறுவளுர், கருப்பூர்சேனாபதி, இடையத்தான்குடி, பெரியதிருக்கோணம், ஆலந்துறையார்கட்டளை, கருப்பிலாகட்டளை, அருங்கால், ஆண்டிபட்டாக்காடு, புங்கங்குழி, ஓரியூர் ஆகிய கிராமங்களுக்கும், 15ம் தேதி மல்லூர், வாரணவாசி, பார்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுர், கீழப்பழுர், கீழையூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர், பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழக்காவாட்டாங்குறிச்சி, வெற்றியூர் ஆகிய கிராமங்களுக்கும், 16ம் தேதி கோவில்எசனை, எலந்தைகூடம், குலமாணிக்கம், கண்டிராதீத்தம், திருமழப்பாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம் ஆகிய கிராமங்களுக்கும், 20ம் தேதி விழுப்பணங்குறிச்சி, கீழகொளத்தூர், சின்னபட்டாக்காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகியமணவாளம், காமரசவல்லி, தூத்தூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    • தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் புகார்
    • நீர்நிலைகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. மணமை, வடகடம்பாடி, எச்சூர், கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், பூஞ்சேரி, எச்சூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆகியோரிடம் அளித்தனர்.

    அப்போது மணமை ஊராட்சியை சேர்ந்த வீராசாமி என்பவர் 500க்கும் மேற்பட்ட மனுக்களை தலையில் சுமந்தவாறு வந்து மனு அளித்தார்.

    அந்த மனுவில், மணமை ஊராட்சியில் அரசு நீர்நிலைகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பை அகற்றவும், சட்டவிரோதமாக நடத்தப்படும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் நிலைகள் பாதிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    30 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுவரை தான் கொடுத்த 500க்கும் மேற்பட்ட மனுக்களின் நகல்களை தலையில் சுமந்தவாறு வந்து மனு கொடுத்ததாக வீராசாமி கூறினார். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு காணப்பட்டது.

    • நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருமான முரளி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம் எல் ஏ கலந்து கொண்டார். பெறப்பட்ட மனுக்ளை ஆய்வு செய்து அதில் தேர்வு செய்யப்பட்ட 222 பயனாளிகளுக்கு 91 லட்சத்து 32 ஆயிரத்து 71 ரூபாய் மதிப்பிலான ஒய்வுதியம், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, எஸ்.டி.,சாதி சான்றிதழ், தையல் எந்திரம் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் திமுகவை சேர்ந்த அரக்கோணம் ஒன்றிய குழு பெருந்தலைவர் நிர்மலா சவுந்தர், தாசில்தார்கள் சண்முகசுந்தரம், கந்திர் பாவை, வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, வருவாய் துறையினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன், வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்ராஷிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜமாபந்தி அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பட்டா, சிட்டா, ,பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 99 மனுக்கள் பெறப்பட்டது. நெடுங்குன்றம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போது, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் 26 பேருக்கு, தலா ரூ.12ஆயிரம், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 38பேருக்கு தலா ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.10.72 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

    • ரூ.63 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழக்கப்பட்டது
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஆண்டுக்கான ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் ரமேஷ், சுபிச்சந்தர், வாசுகி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் பலராமபாஸ்கர், மஞ்சுநாதன், சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தாசில்தார் விஜயகுமார் அனைவ ரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு 25 நபர்களுக்கு ரூ. 63 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, அரசு வழக்கறிஞர்கள் எஸ்.விஜய குமார், கே.லோகநாதன், மருத்துவ அலுவலர் மாறன்பாபு, வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துரைசெல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாமிநாதன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவிர்த்து மற்ற நாட்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. அதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் வருகிற 5-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 5 -ந் தேதி முதல் 19-ந் தேதி வரையிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் திருக்கோவிலூர் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் கல்வராய ன்மலை வட்டத்தில் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையிலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் சின்னசேலம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி தலைமையில் சங்கராபுரம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.

    மேலும், 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். ஜமாபந்தி நடைபெறுவதால், மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • செஞ்சியில் ஜமாபந்தி நிறைவு: 302 பயனாளிகளுக்கு ரூ.1. 31 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
    • மொத்தம் 302 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழுப்புரம்:

    செஞ்சி வட்டத்தில் 1431-ம் பசலி ஜமாபந்தி கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.

    மேற்படி ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று செஞ்சி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனி வரவேற்றார்.

    இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் 71 பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணை, 14 பேருக்கு உட்பிரிவு பட்டா மாற்றம், 100 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணை, 43 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை, 20 பேருக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டை, 45 நபர்களுக்கு பிரதம மந்திரி தொகுப்பு வீடுகள் கட்ட ஆணை மற்றும் 9 பயனாளிகளுக்கு விவசாயத் துறை தோட்டக்கலை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 302 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், வல்லம் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார், வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பொருளாளர் தமிழரசன், தனி தாசில்தார் நெகருன்னிசா, துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், கீதா, கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேதாரண்யம் ஆர்.டி.ஓ பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்பளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று கொண்டு பெற்றுக்கொண்டார்.
    • ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில்கடந்த 7ஆம் தேதி முதல்வேதாரண்யம் ஆர்.டி.ஓ. பெளலின் தலைமையில்ஜமாபந்தி துவங்கி நடைபெற்று வருகிறது.

    ஜமாபந்தியில் நேற்று வரை 244மனுக்கள் பெறப்பட்டு அதற்கான உடனடி திர்வும் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று தகட்டூர் தாணிக்கோட்டகம் ,வாய்மேடு, தென்னடார் பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நடைபெற்றது இதில் 55 மனுக்கள் பெறப்பட்டு 6 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுமுதியோர் உதவித்தொகை வழங்க ப்பட்டது.வழக்கமாக கோட்டாட்சி யர்கள் பொதுமக்களிடம் மனுக்களை நாற்காலியில் அமர்ந்தபடி தான் வாங்கி வருவது வழக்கம் ஆனால் வேதாரணியம் கோட்டாட்சியர் பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்ப ளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று

    கொண்டு பெற்றுக் கொண்டு இருக்கும் போது தென்னடார் ஊராட்சி மனுக்கள் பெறும் நேரம் வந்தது அப்போது அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல்நிலை சரி இல்லாமல் நடந்து வந்தார்இதை பார்த்த கோட்டாட்சியர் பெளலின் உடனடியாக அவரை நாற்காலியில் அமரச் செய்தார்.அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் அமர மறுத்து விட்டார் பிறகுகோட்டாட்சியர் பெளலின் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல் நிலையை கருத்தில் கொண்டுவற்புறுத்தி அவரை தனது அருகே நாற்காலியில் அமரச் செய்தார்.

    பிறகுதான் தான் நின்று கொண்டே பொது மக்களிடம் மனுக்களை வாங்கினார் ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக மனுக்களை பெற்றுகிராம நிர்வாக அலுவலரைவீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினார் இந்த மனிதாபிமான செயலை வருவாய்த்துறை ஊழியர்கள் வெகுவாக பாராட்டினர்ஜமாபந்தி முகாமில் தாசில்தார் ரவிச்ச ந்திரன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வேதையன் மண்டலதுணை வட்டாட்சியர் ரமேஷ் தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா வேதாரண்யம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.

    ×