என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jamabandi"

    • உதவிதொகை, விதவை உதவிதொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை தாலுகாவிற்கு உள்பட்ட இரண்டு குருவட்டங்களுக்கான ஜமாபந்தி திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட ஆய்வு குழு அலுவலர் மூர்த்தி தலைமை தாங்கி முதியோர் உதவிதொகை, விதவை உதவிதொகை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள் துரைசாமி செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், இட்டமொழி இசக்கியப்பன், சத்தியவாணி, அயூப் கான் ஜேம்ஸ், செல்வக்குமார், சந்தனகுமார், அய்யாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டது.
    • உடனடியாக தீர்வு காண கலெக்டர் உத்தரவு.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற 1431 - ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கலெக்கடர் பா.முருகேஷ் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை நேற்று பெற்றுக்கொண்டார்.

    மேலும், வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற 1431 - ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் பட்டா மாற்றம் சம்மந்தமாக 42 மனுக்களும், உட்பிரிவு பட்டா மாற்றம் தொடர்பாக 108 மனுக்களும், வீட்டுமனைப்பட்டா தொடர்பாக 51 மனுக்களும், முதியோர் உதவித்தொகை வழங்க கோரி 53 மனுக்களும், குடும்ப அட்டை வேண்டி 3 மனுவும், 61 இதர மனுக்களும், இதர துறையை சார்ந்த மனுக்கள் 14 என மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டது.

    மேற்படி பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்திரவிட்டுள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நில அளவை) எம்.சுப்பிரமணியன், அலுவலக மேலாளர் (பொது) ரவி, வேளாண் உதவி இயக்குநர் கோ.அன்பழகன், திருவண்ணாமலை வட்டாட்சியர் எஸ்.சுரேஷ் உட்பட பலர் கொண்டனர்.

    ×