search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜமாபந்தியில் கலெக்டர் பங்கேற்பு
    X

    ஜமாபந்தியில் கலெக்டர் பங்கேற்பு

    • 55 கோரிக்கை மனு பெறப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று முன்தினம் தொடங்கியது.

    ஜமாபந்தி முகாமில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் 55 கோரிக்கை மனு பெறப்பட்டது.

    இந்த மனுக்களில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டது, 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் (நில அளவை) செந்தில்குமார், அலுவலக மேலாளர் நீதியியல் உமாரம்யா, தாசில்தார் குமார், தனி தாசில்தார் (சபா.தி) சுமதி, வேளாண்மை உதவி இயக்குநர் வேல்முருகன், துணை தாசில்தார் சித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×