search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி"

    • நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றியோ நீதியை பற்றியோ யாரும் பேசக்கூடாது.
    • தனித்து போட்டியிடுவோம் என்று வாய் சவடால் விடும் அண்ணாமலைக்கு தைரியும் இருந்தால் தனித்து போட்டியிட்டு பார்க்கட்டும்.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற 30-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறும் போது, அவர் அமைச்சராக நீடிப்பதால்தான் ஜாமின் கிடைக்கவில்லை. அமைச்சரவையில் இருந்து நீக்கினால் உடனடியாக ஜாமின் கிடைக்கும் என்றார்.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றியோ நீதியை பற்றியோ யாரும் பேசக்கூடாது.

    நீதிபதிகளுக்கு பதிலாக பேசும் தலைவர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. ஆனால் நீதிபதிகளுக்கு அறிவுரை சொல்லும், உத்தரவு போடும் அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது என்பதை மோடிதான் விளக்க வேண்டும்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டமிட்டு வேண்டுமென்றே குறி வைக்கப்பட்டவர். சேலம் முதல் கொங்குமண்டலம் முழுவதும் அவர் இருக்கும் வரை தி.மு.க. கூட்டணியை வெல்ல முடியாது என்பது தெரியும். அதனால் திட்டமிட்டு அவரை குறிவைத்து கைது செய்துள்ளார்கள்.

    பா.ஜனதா மாநில தலைவர்கள் ஐகோர்ட்டு நீதிபதிகளா? தனித்து போட்டியிடுவோம் என்று வாய் சவடால் விடும் அண்ணாமலைக்கு தைரியும் இருந்தால் தனித்து போட்டியிட்டு பார்க்கட்டும்.

    செந்தில் பாலாஜி வழக்கில் நீதி வெல்லும். அவர் ஜாமினில் மட்டுமல்ல வழக்குகளில் இருந்தும் விடுதலை ஆவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது
    • ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

    ஆனால் அவருக்கு அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவரிடம் உடனடியாக விசாரணை நடத்த இயலாத நிலை இருந்தது.

    மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றனர். அதன்படி அவரிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையையும் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அங்கு அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு கடந்த 14-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதாடினார்.

    வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் 10 ஆண்டுகள் வங்கிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளார். வருமான வரி கணக்குகளையும் தாக்கல் செய்துள்ளார். இதில் இருந்தே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகிறது. எனவே, இந்த வழக்கில் அவர் உள்நோக்கத்துடன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றும் தெரிவித்தார்.

    அமலாக்கத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், "செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

    மேலும் சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமின் வழங்க முடியும். செந்தில் பாலாஜிக்கு அதுபோன்ற நிலை ஏற்படவில்லை.

    செந்தில் பாலாஜியின் கால் மரத்துப்போவது போன்ற நிலை சமீபத்தில் ஏற்பட்டது அல்ல. அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்த பிரச்சினை இருந்து வருகிறது. மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமின் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

    இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளிலும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். எனவே, இந்த நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார்" என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அக்டோபர் 20ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
    • கடந்த திங்கள் கிழமை வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவுபெற்றது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் கடந்த விசாரணை முடிவில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    இதுவரை எட்டு முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் நாளை வழங்குகிறது. கடந்த திங்கள் கிழமை வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜரானார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கைது செய்யப்பட்டபோது, நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அப்போது இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில், கடந்த 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

    இதற்கிடையே, புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால், செந்தில் பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் முன்னிலையில் வந்தது.

    அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜரானார்.

    விசாரணையின் முடிவில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, அக்டோபர் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    செந்தில் பாலாஜிக்கு இது 8வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமின் மனு தள்ளுபடி
    • நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கைது செய்யப்பட்டபோது, நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அப்போது இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அப்போது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

    புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில்தான் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • புழல் சிறையில் தனி வார்டில் உள்ள செந்தில் பாலாஜி சிறை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
    • நெஞ்சு வலிக்கு ஆபரேஷன் செய்திருப்பதால் டாக்டர்கள் செந்தில் பாலாஜி உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்து வருகிறார்கள்.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜூன் மாதம் கைதான அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது.

    இதன் பின்னர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த செந்தில் பாலாஜி உடல்நிலை சீரான பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    புழல் சிறையில் தனி வார்டில் உள்ள செந்தில் பாலாஜி சிறை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். நெஞ்சு வலிக்கு ஆபரேஷன் செய்திருப்பதால் டாக்டர்கள் அவரது உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் கால்கள் இன்று அதிகாலையில் மரத்துப்போய் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சிறைத்துறை அதிகாரிகளிடம் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து டாக்டர்கள் விரைந்து சென்று அவரது கால்களை பரிசோதித்து பார்த்தனர். இதில் ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக கால்கள் மரத்துப்போனது தெரியவந்தது.

    இதையடுத்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் காலை 6.30 மணி அளவில் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இ.சி.ஜி., எக்கோ மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கால் மரத்துப்போனதை சரி செய்வதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் முடிவடைந்த பின்னர் இன்றே செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என்று அமலாக்கத்துறை கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு.
    • அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு.

    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரிய வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என்று விசாரணையின்போது அமலாக்கத்துறை கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    மேலும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதம் செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணையின் முடிவில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும்14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    வரும் 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    இதன்மூலம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 6வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் இந்த 3 இடங்களிலும் காலை 8 மணியளவில் இருந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • திண்டுக்கல்லில் காண்டிராக்டர் ரத்தினம் உள்பட 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையினர் கைது செய்ததும் நெஞ்சு வலிப்பதாக கூறிய செந்தில் பாலாஜியை அம்பாள்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதன்பின்னர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினர். அப்போது சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டினர்.

    இதுதொடர்பாக செந்தில் பாலாஜி வாக்குமூலமும் அளித்துள்ளார். செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகப்போகும் நிலையில் தற்போதுதான் அவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

    இதற்கு பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை ஏற்று வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க அமலாக்கத் துறையினர் முடிவு செய்து உள்ளனர். செந்தில் பாலாஜி கைதான பிறகும் அமலாக்கத்துறையினர் தொடர்ச்சியாக அவர் தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் செந்தில்பாலாஜி தொடர்புடைய 10 இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை அண்ணாநகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ், முகப்பேரில் உள்ள என்ஜினீயர் திலகம், நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் போக்குவரத்துத்துறை மேலாளர் ஜெகன் நாதன் உள்ளிட்டோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. குவாரிகளில் மணல் எடுப்பது தொடர்பாக சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் இந்த 3 இடங்களிலும் காலை 8 மணியளவில் இருந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் செல்போனில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து வைத்திருந்த அதிகாரிகள் அந்த புகைப்படத்தை காட்டி வீடு, வீடாக விசாரணை நடத்தினர். அந்த நபர் நுங்கம்பாக்கம் பகுதியில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அமலாக்கத் துறையினர் தகவல்களை திரட்டினர். அப்பகுதியில் உள்ள ஜூஸ் கடை, டீ கடை உள்ளிட்ட இடங்களிலும் போட்டோவை காட்டி விசாரணை மேற்கொண்டனர்.

    இதேபோன்று திண்டுக்கல்லில் காண்டிராக்டர் ரத்தினம் உள்பட 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர். திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவரது நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளிலும் மணல் குவாரிகளை குறி வைத்தும் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை :

    சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டது.

    இதையடுத்து வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில் அதனை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது. பின்னர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை, எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    அதையடுத்து ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்தார்.

    இதையடுத்து ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருதி ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனிடையே பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறையினர் விடுத்த கோரிக்யை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

    • சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தான் விசாரிக்க வேண்டும் என்று கடந்த வாரம் ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.
    • சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்ய முறையிடப்பட்டது.

    சென்னை:

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    பின்னர், இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, சிறப்பு கோர்ட்டு விசாரிப்பதா? மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு விசாரிப்பதா? என்ற சட்ட சிக்கல் ஏற்பட்டது.

    இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஐகோர்ட்டில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் விசாரித்து, ஜாமின் மனு மட்டுமல்ல, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கையும் மத்திய அரசு அறிவிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தான் விசாரிக்க வேண்டும் என்று கடந்த வாரம் தீர்ப்பு அளித்தனர்.

    இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்ய இன்று காலையில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி எந்த நேரமும் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது.
    • ஐகோர்ட்டு உத்தரவை மதித்து முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிகிறது.

    சென்னை:

    சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தார்மீக ரீதியாக சரியானதல்ல என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    சம்பிரதாயத்துக்காக அமைச்சராக நீடிக்கும் அவரால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. எந்த பொறுப்பும் வழங்காமல் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜியை நீடிக்க அனுமதித்து இருப்பது அரசியல் சட்டத்துக்கும், தார்மீக அடிப்படையிலும் தவறானது. அது மட்டுமல்ல இலாகா இல்லாத அமைச்சராக இருப்பது கேலிக்குரியது. நல்லாட்சி, தூய்மையான நிர்வாகத்துக்கு உகந்தது அல்ல என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

    ஆனாலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

    இதனால் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி எந்த நேரமும் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது:-

    ஐகோர்ட்டு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் நகல் ஆன்லைனில் வந்துவிட்டாலும், அதன் நகல் முறைப்படி அரசுக்கு நாளை கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    அதன்பிறகு ஐகோர்ட்டு உத்தரவை மதித்து முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிகிறது.

    செந்தில்பாலாஜி வழக்கை பொறுத்தவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதி இருந்தார். இப்போது ஐகோர்ட்டு நீதிபதிகளும் தீர்ப்பு கூறி விட்டனர்.

    எனவே இதையும் மீறி செந்தில்பாலாஜியை அமைச்சராக நீடிக்க முதலமைச்சர் விரும்பமாட்டார் என்றே தெரிகிறது.

    எனவே ஐகோர்ட்டு தீர்ப்பின் நகல் முதலமைச்சருக்கு சென்றடைந்ததும் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்
    • அவருடைய இலாகாக்கள் மாற்றப்பட்ட போதிலும், அமைச்சராக நீடித்து வருகிறார்

    தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோாத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது இலாகாக்கள், மற்ற மந்தரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

    ஆனால், அமைச்சர் பதவியில் நீடித்தார். இலாகா இல்லாத மந்திரியாக செயல்படுவார் என தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்- கவர்னர் ஆர்.என். ரவி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இறுதியில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    இதற்கிடையே, இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், ''செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடிக்க வேண்டும்'' எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தது. மேலும், தார்மீக ரீதியாக இது சரியானது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ×