search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி"

    காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாய தலைவர்-உறுப்பினர் பதவிக்கு மத்திய அரசின் நியமனத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். #CommonwealthTribunal #JusticeAKSikri
    புதுடெல்லி:

    லண்டனை தலைமையிடமாக கொண்டு காமன்வெல்த் விசாரணை தீர்ப்பாயம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர்-உறுப்பினர் பதவிக்கு இந்தியாவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரியின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. கடந்த மாதம் அவரின் சம்மதத்தை கேட்ட பின்பு மத்திய அரசு இந்த சிபாரிசை மேற்கொண்டது.



    இந்த நிலையில் மத்திய அரசுக்கு அளித்த சம்மதத்தை வாபஸ் பெறுவதாக நீதிபதி ஏ.கே.சிக்ரி நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும் அந்த வட்டாரங்கள் கூறுகையில், “கடந்த மாதம் மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் நீதிபதி சிக்ரி தனது ஒப்புதலை தெரிவித்தார். ஆனால் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் இந்த தீர்ப்பாயத்தில் பங்கேற்கவேண்டி இருக்கும் என்பதால் தற்போது நீதிபதி தனது விருப்பத்தை திரும்ப பெறுகிறார்” என்றும் தெரிவித்தன.

    நீதிபதி ஏ.கே.சிக்ரி, சுப்ரீம் கோர்ட்டின் 2-வது மூத்த நீதிபதி என்பதும், வருகிற மார்ச் மாதம் 6-ந் தேதி அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. #CommonwealthTribunal #JusticeAKSikri 
    இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்ப நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவை நமது கலாசாரத்தை சீரழிப்பதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார். #IndianTelevision #Culture #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2016-ம் ஆண்டு தடை விதித்தது.

    அதே போல் வனொலிகளில் இந்திய நிகழ்ச்சிகள் இடம் பெறவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு லாகூர் ஐகோர்ட்டு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் லாகூர் ஐகோர்ட்டு விதித்த தீர்ப்பை ரத்து செய்து, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் தடையை மீண்டும் அமல்படுத்தினர். இந்த நிலையில் இந்த மனு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் பேசிய தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார், “இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்ப நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவை பாகிஸ்தானின் கலாசாரத்தை சீரழிக்கிறது” என காட்டமாக கூறினார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    கேரள வெள்ள நிவாரண நிதி திரட்ட கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். #KeralaFlood #SupremeCourt
    புதுடெல்லி:

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, டெல்லியில், சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்கு எதிரே உள்ள கலையரங்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு பத்திரிகையாளர்கள் நேற்று கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் ஆகியோர் பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். சமீபத்தில், பதவி உயர்வு பெற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தவர், நீதிபதி கே.எம்.ஜோசப். அவர், ஒரு மீனவனின் கதையை சொல்லும் ‘அமரம்’ படத்தில் இருந்து ஒரு பாடலை பாடினார்.

    அப்போது, ‘கேளாவில் வெள்ளம் வந்தவுடன் முதலில் உதவிக்கு வந்தவர்கள், மீனவர்கள். அவர்களுக்கு இப்பாடலை அர்ப்பணிக்கிறேன்’ என்று அவர் கூறினார். பத்திரிகையாளர்கள் சிலரும் தங்கள் திறமையை காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில், ரூ.10 லட்சத்துக்கு மேல் நிதி திரண்டது. #KeralaFlood #SupremeCourt
    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிதி உதவி அளிக்க உள்ளதாக தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தெரிவித்தார். #KeralaFlood #SupremeCourtJudge
    புதுடெல்லி:

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிதி உதவி அளிக்க உள்ளனர். நேற்று ஒரு பொதுநல மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா இந்த தகவலை தெரிவித்தார்.

    நீதிபதிகள் தலா ரூ.25 ஆயிரம் வீதம் அளிப்பார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் ரூ.1 கோடியும், அவருடைய மகனான மூத்த வக்கீல் கிருஷ்ணன் ரூ.15 லட்சமும் அளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

    கேரளாவைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி குரியன் ஜோசப், கேரளாவுக்கு நிவாரண பொருட்களை திரட்டி அனுப்புவதில் வக்கீல்களுடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார். கணிசமான நிதி உதவியையும் அவர் அளித்துள்ளார். #KeralaFlood #SupremeCourtJudge #tamilnews
     
    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்தியர் அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார். #DonaldTrump #AmulThapar
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அந்தோணி கென்னடி. 81 வயதான இவர் வரும் 31-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். இது குறித்து ஜனாதிபதி டிரம்பை கடந்த வாரம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர், அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

    இதையடுத்து காலியாகிற ஒரு நீதிபதி பதவிக்காக 25 பேரது பெயர்களை ஜனாதிபதி டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார் என தகவல்கள் கசிந்தன. அந்த 25 பேரில் ஒருவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் (49) ஆவார்.



    இந்த நிலையில், அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார்.

    மற்றவர்கள் பிரெட் கவனாக், எமி கோனி பேரட், ரேமண்ட் கேத்லெட்ஜ் ஆவர்.

    அமுல் தாபருக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கன்னல் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இந்த நேர்முக தேர்வு குறித்து ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, “இன்னும் 2 அல்லது 3 பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்துவேன். அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார். இது குறித்த அறிவிப்பு 9-ந் தேதி வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படுகிற நபர், மிகச் சிறந்த நபராக இருப்பார்” என்று குறிப்பிட்டார்.

    கடந்த ஆண்டு அமுல் தாபரை 6-வது அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக டிரம்ப் நியமனம் செய்தது நினைவுகூரத்தக்கது.   #DonaldTrump #AmulThapar #tamilnews
    நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரை செய்வது உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு மீண்டும் ஆலோசனை நடத்தியது. #KMJoseph #Elevation
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு (கொலீஜியம்) வழங்கிய பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து திருப்பி அனுப்பிவிட்டது.

    இதைத்தொடர்ந்து, கடந்த 11-ந் தேதி கூடி ஆலோசித்த நீதிபதிகள் குழு, காலியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பதவிக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் உள்பட மேலும் சில ஐகோர்ட்டு நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைப்பது என்றும், அதுபற்றி மீண்டும் விரிவாக விவாதிப்பது என்றும் தீர்மானித்தது.

    அதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய குழு நேற்று மீண்டும் கூடி நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரை செய்வது உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.  #KMJoseph #Elevation 
    ×